articles

img

ஊரெல்லாம் போய் ஒவ்வொருவராக விசாரிப்பதும்,மக்கள் நடுவே தஸ்தகீர்

      குறைந்த அளவே ஆனாலும்  

   வசனங்கள் மிக கூர்மையாய் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

    “டீ போடவும்,ஊறுகாய் போடவும் மந்திரிகள் இருக்கிறார்கள்”

“நீ நக்சலைட்டா? அர்பனா?”

   “இண்டர்நேசனல் தொடர்பு?”  “கருத்து சொல்ல உங்களுக்கு உரிமையில்லை” போன்ற வசனங்கள் கதையின் அழுத்தத்தைக் கூட்டுவதோடு,இஸ்லாமியர்களின் மீதான வெறுப்புணர்வைக் கடைப் பிடிப்பவர்களின் அறியாமையையும் வெளிப்படுத்துகின்றன.

    இந்தியாவின் வரலாற்றை அறியாத,உலகளாவிய அறிவியல் பார்வையும் அற்ற இந்துத்துவா கொள்கைகளின் பிடியில் சிக்கிக் கொண்ட கும்பல்,தனது அரசியல் பொருளாதார பயனுக்காக..நாளும் அதை வளர்த்தெடுக்கிறது என்பதை அரசியலாளர்கள் நன்கு அறிவர்.மேலும் தனது பெரும் லாபத்திற்காக இதுபோன்ற அரசியலை கார்ப்பரேட்டுகளும் வளர்த்து விடுகின்றனர் என்பதும் நமக்கு தெரியும். இதன் தொடர்ச்சியாகவே இன்றைய மணிப்பூர்,ஹரியானா பிரச்சினைகளும் இருக்கின்றன.  

   இத்தகைய அரசியல்,  சாமானியர்களான இஸ்லாமியர்களின் மீதான வன்மமாக எப்படிக் கட்டமைக்கப் படுகிறது என்பதை  சிறப்பாக சொல்லியிருக்கிறது இக் குறும்படம்.

    காவலதிகாரியின் கையில் தஸ்தகீருடைய வீட்டு முகவரி இருந்தும்,ஊரெல்லாம் போய் ஒவ்வொருவராக விசாரிப்பதும்,மக்கள் நடுவே தஸ்தகீர்

    சந்தேகத்திற்கிடமானவன் என்று மக்களிடம் ஒரு தவறான பிம்பத்தை ஏற்படுத்தவும் மெனக்கெடுவதைக் காணமுடிகிறது.இறுதியாக ஊரே வேடிக்கை பார்க்க அவனது இல்லத்திற்குள் நுழைந்து அநாவசியமான கேள்விகள் கேட்டு நேரத்தைக் கடத்துவதும்,செல்போன் கம்பெனிக்கு வேலைக்கு செல்பவனான தஸ்தகீரின் லேப்டாப்பை கண்டு,உனக்கு உலகளாவிய நெட்வொர்க்கா? என்று கேட்பதும்,பெரியார்,மார்க்ஸ் நூல்களைப் பார்த்து நீ நக்சலைட்டா..? என்று வினவுவதையும்,இணையத்தில் முற்போக்கு கருத்துகளை நீ பதிவு செய்யக்கூடாது என மிரட்டுவதையும் பார்க்கும்போது..,த்தூ.இந்த அதிகாரிகள் ஏன் இவ்வளவு கூமூட்டைகளாக இருக்கின்றனர் என்ற கேள்வியும் நமக்குள் எழுகிறது.

    சாதியும்,மதமுமற்ற நிலையை நோக்கி செல்வதற்கான உந்துதலோடு இருக்கும் ஒருவன்,பிறந்தது ஒரு இசுலாமிய குடும்பத்தில் எனில்,அதுஅவனது தவறா என்ன? பிறப்பால் இசுலாமியராக இருப்பவர்கள் அனைவரும் தீவிரவாதிகளா என்ன?என்று நமக்கும் தோன்றுகிறது. இந்த யதார்த்தமான உணர்வே படம் முடிந்தும் நம்முள் நிரவி நிற்கிறது. இதுவே படத்தின் வெற்றி என கருதுகிறேன்.

    இந்தப் படத்தைப் பார்ப்பவர்களின் மனநிலையும் அவ்வாறே அமையும் என்றும்,இந்த நோக்கத்தையே பார்வையாளர்களின் மனதில் கடத்தவேண்டுமென படைப்பாளரும், படக்குழுவும் பாடுபட்டிருக்கும் என்பது என் உறுதியான நம்பிக்கை.  மற்றபடி இசுலாமியர்கள் பலிகடாவாக்கப் படுவதற்கான அரசியல் பொருளாதார காரணங்களையெல்லாம்  ஒரு சின்னஞ்சிறு கதையில் ,முழுதாய் பேசமுடியாதென்பதை உணர்ந்தே இருக்கிறோம்.முழு நீளப் படத்திலே கூட முடியுமா என்பது சந்தேகமே..!

   ஆனாலும்,அடுத்த கட்ட நகர்வாக அதனையும் வெளிப்படுத்தும் வகையில் கதைகளும் படங்களும் வரவேண்டுமென,எழுத்தாளரிடமும்,படக்குழுவினரிடமும்  எதிர்பார்க்கிறோம். ஒன்றும் செய்யாமலிருப்பதைக் காட்டிலும் ஏதேனும் செய்வோம்.அதையும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக செய்வோம் என களமிறங்கிய இயக்குனர் தோழர் Karuppu Anbarasan கருப்பு அன்பரசனுக்கும் படக்குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

   #தாடிவெச்சவனெல்லாம்எப்படிதாகூர்இல்லையோஅதேபோலதாடிவெச்சவனெல்லாம்தீவிரவாதிகளுமில்லைடா_மடசங்கிகளா.!