பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற விவசாயிகளின் எழுச்சியின் போது ஆட்சியாளர்கள் கொண்டிருந்த அதே கண்ணோட்டத்தைத்தான் இன்று ஆர்எஸ்எஸ் கூட்டமும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அது வர்க்க எழுச்சி.
தேசாபிமானி மலையாள நாளிதழின் எண்ப தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ‘மலப்புறம் விழா’ வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. இரண்டு நாள் நிகழ்ச்சிகள், கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைப் பற்றி மதவாதிகள் எல்லா காலத்திலும் சொல்லிவருகிற பொய்ப் பிரச்சாரங்களுக்கு சரியான பதிலளிப்பதாக இருந்தது. தேசிய இயக்கத்தின் பகுதி யான மலபார் போராட்டத்தைக்கூட வரலாற்றிலிருந்தே மறைத்துவிட திட்டமிட்ட முயற்சிகளுக்கிடையேதான் வரலாற்றுடன் இணைந்து பயணப்படுகிற தேசாபி மானி ஏடு ஏற்பாடு செய்த இந்த மாபெரும் விழாவின் நிகழ்ச்சிகள் கேரளத்தின் வரலாற்றையும் கலாச்சா ரத்தையும் முன்னேற்றத்தையும் பாய்ச்சலையும் அடை யாளப்படுத்துவதாக அமைந்தன. மக்களிடையே மதவாதப் பிளவை ஏற்படுத்துவதற்கான கருவியாக மலப்புறம் மாவட்டத்தை மாற்றுவதற்கு ஆர்எஸ்எஸ் பரிவாரம் முயற்சி செய்தபோது, அதே வழிமுறையை தீவிர இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளும் பின் பற்றுகின்றன. இந்த இரண்டு கூட்டத்தாரின் இலட்சியம் மதவாதம்தான்.
மலப்புறம் மாவட்டம் உருவானபோது...
கேரளாவில் 1969-ஆம் ஆண்டு இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் அரசாங்கத்தின் காலத்தில்தான் மலப்புறம் மாவட்டம் உருவானது. அதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சைகளும் எழுந்தன. மலப்புறம் மாவட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அன்று ஆர்எஸ் எஸ் பரிவாரம் ஏற்பாடு செய்த கண்டன மாநாட்டில் ஏ.பி.வாஜ்பாயி கலந்துகொண்டார். மலப்புறம் மாவட்டம் உருவாக்கத்தை காங்கிரசும் எதிர்த்தது. எதிர்ப்பவர்க ளின் கூட்டத்தில் பிரபல ஊடகங்களும் இருந்தன. வேறு எந்த மாவட்ட விஷயத்திலும் இந்தச் சர்ச்சை எழ வில்லை. மலப்புறத்தில் இந்துக்களுக்கு நிலம் இல்லை யென்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேசிய அளவில் ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் பிரச்சாரம் செய்த னர். ஆனால், இதை முறியடிக்கும் விதத்தில் முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா ராவின் பதில் அப்போது வந்தது. ட்விட்டர் மூலம் தமது பதிலை அவர் தெரிவித்திருந்தார்: “நான் மலப்புறத்தைச் சேர்ந்த பெண். அவர்கள் சொல்லுவது முழுப் பொய்யாகும். எங்கள் குடும்பத்திற்கு நூறு ஆண்டுக ளுக்கு மேலாக அங்கு நிலம் உள்ளது”. இவ்வாறு ட்விட்டர் மூலமாக நிருபமா ராவின் கடுமையான பதில் வந்தது. ஆர்எஸ்எஸ் பரிவாரம் செய்யும் பொய்ப் பிரச்சாரத்தின் உண்மையை கேரளத்தினரும் மலப் புறத்தினரும் அறியலாம். ஆனால், மலப்புறம் அறி வில்லாதவர்களின் மண் என்று வடஇந்தியாவில் ஆர்எஸ்எஸ் பரிவாரம் பிரச்சாரம் செய்கிறது. மலப் புறத்தில் பிரசவம் அதிகம் என்பதும் அவர்களின் பிரச்சாரத்தில் ஒன்று. ஆனால், மக்கள் தொகைக் கணக்கை ஆய்வு செய்ததில் இதில் குஜராத் மாநிலம்தான் முன்னணியில் உள்ளது என்பதும், மலப்புறம் மாவட்டம் மக்கள் தொகைக் கட்டுப் பாட்டில் ஒரு முன்மாதிரி என்பதும் தெளிவாயின.
ஆர்எஸ்எஸ்சின் அவதூறுகள்
கொல்லப்பட்ட கர்ப்பிணி யானை ஒன்றின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டபோது அது மலப் புறத்தில்தான் என்று ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்டோர் அவதூறு பேச ஆரம்பித்தனர். பிறகு அது தவறு என்று ஆனது. அது கேரளத்தில் இல்லை என்பது தெளிவானது. இவ்வாறு மலப்புறத்தை ஆர்எஸ்எஸ்- பாஜக கூட்டத்தினர் தொடர்ந்து தாக்கிப் பேசுவதும், அவதூறாக பிரச்சாரம் செய்வதுமாக இருக்கிறார்கள். மலபார் போராட்டத்தின் தலைவர்க ளுக்கு மலப்புறத்தில் எழுப்பப்பட்டுள்ள நினை விடத்தின் பேரால் அண்மையில் சர்ச்சையை உண் டாக்க இவர்கள் முயற்சி செய்தார்கள்.
மலபார் விவசாயிகளின் எழுச்சி
மலபாரில் 1921-இல் நடைபெற்றது விவசாயிக ளின் எழுச்சி என்று சிறப்பித்துக் கூறியது கம்யூ னிஸ்ட் கட்சியாகும். மலபார் கலகத்தின் 25-ஆவது ஆண்டை முன்னிட்டு 1946 ஆகஸ்ட் 20 அன்று தேசாபி மானியில் தோழர் இ.எம்.எஸ்.எழுதிய ‘1921-இன் அறை கூவலும் எச்சரிக்கையும்’ என்ற கட்டுரை மூலமாகத் தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பிரச்சார முனை ஒடிந்தது. இந்தக் கட்டுரையின் பேரில் பிரிட்டிஷ் அரசு தேசாபிமானிக்குத் தடைவிதித்தது என்பது வரலாறு. இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்கள் நடத்திய கலகம்தான் மலபார் கலகம் என்று பிரச்சாரம் செய்யப் பட்டது. இந்தப் போராட்டத்திற்குத் தலைமை வகித்த வாரியன் குன்னத்து குஞ்ஞஹமத் ஹாஜியையும் அலி முஸ்லியாரையும் மதவாதிகள் என்று ஆர்எஸ்எஸ் கூட்டம் சித்தரிக்கிறது. இதன் அடியொற்றி சுதந்திரப் போராட்டத் தளபதிகளின் பெயர்ப் பட்டியலிலிருந்து மலபார் போராளிகளை நீக்கிவிடுவதென இந்திய வரலாற்று கவுன்சில் (ஐசிஎச்ஆர்) முடிவு செய்தது. பிரிட்டிஷ்காரர்கள்தான் மலபார் கலகத்தை மாப்ளா கலவரம் என்று முதலில் அழைத்தனர். அதை அப்ப டியே தொடர்கிறார்கள் ஆர்எஸ்எஸ் - பாஜகவினர்.
மலபார் கலகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடு கிறபோது அதை முஸ்லிம்களின் போராட்டமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சித்தரித்தனர். பாஜக வோ இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்கள் நடத்திய கலகம் என்று கூறியது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற விவசாயிகளின் எழுச்சியின் போது ஆட்சி யாளர்கள் கொண்டிருந்த அதே கண்ணோட்டத்தைத் தான் இன்று ஆர்எஸ்எஸ் கூட்டமும் இஸ்லாமிய அடிப்ப டைவாதிகளும் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அது வர்க்க எழுச்சி. அது இன்றும் மதவாதத்திற்கு எதி ராக, நமக்கு மனித நேயத்தைப் போதிக்கிறது. மலப் புறத்தின் மாண்பை உணர்த்துகிறது.
நன்றி: தேசாபிமானி, (29.12.2022),
தமிழில்: தி.வரதராசன்