விவாதம் இல்லை, வாக் கெடுப்பு இல்லை, தாங்கள் நினைத்ததை நிறைவேற்றுகிற சர்வாதிகாரம். 9 நிமிடங்களில் 10 மசோதாக்களை தாக்கல் செய்கிற அவலம். இந்திய நாடாளுமன்றத்தின் ஜனநாய கத்தின் வீழ்ச்சி பாசிசத்தின் ஆரம்பமாக உள்ளதாக குற் றம் சாட்டுகிறார் தருமபுரி நாடா ளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந் தில்குமார். அவர் நமது தீக்கதிர் சுதந்திர தின சிறப்பிதழுக்கு அளித்த பேட்டியில், ஒரு நாட்டில் தேர்தல் நடந்தால் மட்டும் அவை ஜனநாயகமா? இக்கேள்வியினை மனதில் ஓடவிடுங்கள். உலக வரலாற்றை சற்று திரும்பி பார்ப்போம், அவற்றில் பாசிச அரசாங்கங்களை எடுத்து பார்த்தால், அனைத்து சர்வாதிகாரிகளும் அதிகார மமதையில், சனநாயக விழுமியங்களை ஆழ் குழியில் புதைத்தவர்களாக இருந்துள் ளனர். ஏதேச்சதிகார போக்கினை கடைப் பிடித்த ஹிட்லரும் முசோலினியும் தேர்தல் மூலமாகத்தான் ஆட்சியைக் கைப்பற்றி னர்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி நாம் பின்பற்றும் ஜனநாயகம் நாடாளு மன்ற ஜனநாயகம். அவற்றின் மிக முக்கியப் பணி அரசாங்கத்தின் செயல்பாடுகள் மீதான விவாதம் செய்வது மற்றும் சட்டமி யற்றுதல் ஆகிய இரண்டு ஆகும். இவற்றை எப்படி நரேந்திர மோடி அரசாங்கம் கேலிக் கூத்தாக்கியது என்பதனை பார்ப்போம். போதிய விவாதம் இல்லாமல் சட்ட மசோதாக்களை அவசர அவசரமாக நிறை வேற்றும் நரேந்திர மோடி அரசாங்கத்தின் போக்காக இருக்கிறது. இந்த அணுகு முறை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சாரத்தை புறக்கணிக்கும் செயல். முக்கியத் துவம் வாய்ந்த மசோதாக்களை எந்த வொரு விவாதமும் இல்லாமல் நிறைவேற் றுவது என்பது இந்த அரசின் வழக்கமாகி விட்டது. நிதிநிலை அறிக்கையைக்கூட எந்தவொரு விவாதமும் இல்லாமல் நிறை வேற்றிய ‘சாதனை’ இந்த அரசுக்கே உண்டு. ஒரு மசோதாவின் மீது எவரேனும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குப் பிரிவு என்றுச் சொன்னால் கூட (Division Vote) தனி வாக்கெடுப்பு நடத்தி மசோதாவை நிறைவேற்ற வேண்டும். ஆனால் அந்த விதியை மீறி விவசாய சட்டங்கள் இயற் றப்பட்டது. அவ்வாறு அவசர அவசரமாக விவதாமின்றி இயற்றப்பெற்றச் சட்டத்தின் விளைவு 333 நாட்கள் விவசாயிகள் நீண்ட நீடித்த போராட்டத்தை நடத்தினர். இப் போராட்டத்தில் 600 விவசாயிகள் இறந்து போனார்கள். முறையான விவாதம் இல் லாமல் மசோதாக்களை திணிப்பது, மக்க ளின் வாழ்க்கையை பெரிய அளவில் பாதிக் கும்.
அவர்கள் (பாஜக) எப்பொழுதும் நாடா ளுமன்ற நிலைக்குழுவிற்கு மதிப்பாய்வுக் கான விரிவான மசோதாக்களை அனுப்பு வதில்லை. அப்படியே அனுப்பினாலும், அங்கு முன்வைக்கப்படும் திருத்தங்களை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது இந்த அர சின் வழக்கமாக உள்ளது. அதேபோல் விவ தாங்களில் இருந்து தப்பிக்கும் இன்னொரு உக்தி மிக முக்கிய மசோதாவை அன்று காலையில் தான் தாக்கல் செய்வது. இவை நாடாளுமன்ற மரபிற்கு மீறிய செயலாகும். சமீபத்தில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் இரண்டு சட்டங்களின் பெயரை இந்தியில் மாற்றி அமைக்கும் மசோதா அன்று காலையில் தான் தாக்கல் செய்தது ஒன்றிய மோடி அரசு. மேலும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மசோதாவும் இப்படி தான் நிறைவேற்றப்பட்டது. நாடா ளுமன்ற உறுப்பினர்களுக்கு மசோதாவை நன்கு படிக்க போதிய கால அவகாசம் வழங்கப்படுவதில்லை.
அடுத்ததாக அதிக அளவில் அவசரக் கால சட்டத்தை இயற்றுவது. PRS சட்ட மன்ற ஆராய்ச்சி மற்றும் மக்களவை செய லாக்கத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின் படி நரேந்திர மோடி அரசு மே 2014 முதல் பதவிக்கு வந்ததிலிருந்து, 76 மசோதாக் களை அவசரச் சட்டம் வழியாக நிறை வேற்றியுள்ளது. இவை 2004 - 2014 ஆம் ஆண்டு ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சி காலத்தை விட அதிகம். அவசரகால சட்டம் அரசியல் அமைப் பின் படிச்செல்லும். இருப்பினும், நரேந்திர மோடி அரசு, இந்த அணுகுமுறையை புதிய விதிமுறையாக மாற்றியுள்ளது. 2021 ஆம் ஆண்டு மழைக்கால கூட்டத் தொட ரில் 20 மசோதாக்கள் அவசரமாக நிறை வேற்றப்பட்டன. அவற்றில் பெரும்பான் மையான மசோதா அவசரக் கால சட்டத்தை மாற்றி நாடாளுமன்றத்தின் விவாதம் மற் றும் ஒப்புதலுடன் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால் மக்களவையில் வெறும் 9 நிமிடங்களில் பத்து மசோதாக் கள் நிறைவேற்றபட்டது. அரசியலமைப்புச் சட்டப்பேரவை விவா தங்களின்போது கே.டி.ஷா குறிப்பிட்டது போல், “எனது கவலை என்னவென்றால், அவசர காலங்களில் அவசரச் சட்டம் இயற் றப்பட்டாலும், முறையான விவாதங்கள் இன்றி ஒப்புதல் அளிக்கப்பட்டதை நாம் புறக்கணிக்கக் கூடாது என்றார்”. ஆனால் இங்கு அவசரச் சட்டம் மற்று மின்றி வழக்கமான மசோ தாக்கள் விவாதம் மற்றும் விவாதம் இல்லாமல் நிறை வேற்றப்படுவதுதான் ஜனநா யகத்தின் கேலிக்கூத்து. அது மட்டுமின்றி மாநிலங் களவையில் விவாதத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதற் காகப் ‘பண மசோதா’ என்ற பெயரில் மசோதாக்களை நிறைவேற்றுவது. ஒரு பிரதான உதாரணம் 2017 நிதி மசோதா தற்போதுள்ள தீர்ப்பாயங்களில் கட்ட மைப்பு மாற்றங்கள் தேர்தல் பத்திர திட் டத்திற்கு வழி வகுத்தது. பல அரசியல் அறிஞர்கள் தேர்தல் பத்திரம் என்பது ஒரு நிறுவனம் ஏற்படுத்தபட்ட ஊழல் என்கிறார் கள். இவற்றை மத்திய ரிசர்வ் வங்கி எதிர்த்தும் கொண்டு வந்தது பாஜக. தற்பொழுது 17 ஆவது மக்களவை நடந்து கொண்டு இருக்கிறது. அவை தன் ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்ய உள்ளது. ஆனால் இதுவரை 247 அமர்வு நாட்கள் பதியப்பட்டுள்ளது. இதற்கு முன் 331 நாட்கள் மிக குறைந்த அமர்வு நாட்க ளாக கருதப்பட்டது.
2014 முதல் 2023 ஆகஸ்ட் வரை 24 முறை தான் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் பேசுவது கட்டாயமாகும். அது தவிர, ஒன்றிரண்டு முறை மட்டுமே நாடாளு மன்றத்தில் அவர் பேசியிருக்கிறார். அவற் றில் தன் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர் மானம் குறித்தி பேசியதும் அடக்கம். அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் இருந்து மற்றொரு குறிப்பிடத்தக்க புறக்க ணிப்பு மணிப்பூர் இன மோதல் ஆகும். இப் பிரச்சனையின் பாரதூரமான தாக்கங்கள் மற்றும் சமூக-அரசியல் பாதிப்புகள் இருந்த போதிலும், பிரதமரின் அமைதியும் மற்றும் அவர் தன் அரசின் நம்பிக்கையில்லா தீர் மானத்தின் மீது நாடாளுமன்றத்தல் இரண்டு மணி நேர பேச்சில் மணிப்பூர் பற்றி வெறும் இரண்டு நிமிடங்கள் பேசி கடந்து சென்றது மட்டுமல்லாமல் சிரித்து சிரித்துப் பேசிய காட்சியை பார்த்தால் அதிர்ச்சியாக இருந்தது. இதே பாஜக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை “மௌன்மோகன்” என்று விமர்சித்தார்கள், ஆனால் அவர் ஊடகங்களை விட்டும், நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்துகொள் ளாமல் இருந்ததில்லை, ஆனால் இந்த தலைப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு பொருத்தமாக இருக்கும், அவர் அமைதி யாக மட்டுமல்ல, பிரச்சனையிலிருந்தும் தப்பித்தும் ஓடுகிறார்.
ஏன் ஒரு மிருக பெரும்பான்மையுடன் கூட, அரசாங்கம் ஏன் விவதாங்களுக்கு பயப்பட வேண்டும் என்றால் எதிர்க்கட்சி களை பேசவிட்டால் பல உண்மைகளை அரசுக்கு எதிராக அடுக்கிவிடுவார்கள் என அஞ்சுகிற அரசாக உள்ளது. சமீபத்தில் மாநிலங்களவையில் பேசி கொண்டு இருந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசும் போது ஒலி வாங்கியை அணைத்த கொடூ ரம் நிகழ்ந்துள்ளது. ஏன் இப்படி பதர வேண்டும். உண்மை பொய்யைச் சுடும் என் பதாலா? நாடாளுமன்ற ஊடாக மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது பாஜக சமீபத்தில் மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் அதி காரத்தை குறைக்கும் மசோதா நிறை வேற்றப்பட்டது. இவற்றிற்கு அதிமுக துணை போனது. இவை முழு மாநில அந்தஸ்து அல்லாத மாநிலங்களுக்கும் நடக்காது என்று இருக்கவேண்டாம். அவர்கள் நம்மை நோக்கியும் வருவார் கள்.
நாடாளுமன்றத்துக்குப் புதிதாக கட் டப்பட்ட கட்டடம், ஆங்கிலேயருக்கு பல முறை மன்னிப்பு கடிதம் எழுதிய சாவர்க்கர் பிறந்த நாள் அன்று திறக்கப்படுகிறது. இதன் மூலம் தங்கள் பாதையை பாஜக தெளிவுபடுத்தியுள்ளது. நாட்டின் முதல் குடிமகன் என்று அழைக்கப்படும் ஜனாதி பதி அவர்களை புறக்கணித்து புதிய கட்ட டத்தை திறந்தது அவரை அவமதிப்பது மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்துக்கே முரணானதாகும். இக் கட்டடத்தைத்தான் உலக சாதனை என பாஜகவினர் கூறிக் கொள்கிறார்கள். ஒரு புறம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர் குலைப்பது. நாடாளு மன்றம் என்பது வெறும் கட்டடம் மட்டும் அல்ல, அவை ஜனநாயக விழுமியங்களை கட்டிக் காக்கும் அரண். இந்திய ஜனநாய கம் ஆங்கிலேயர் காலத்தில் புதைக்கப் பட்டு இருந்தது” அப்படி இருத்த ஜன நாயகத்தை, புத்துயிர் பெற்று தழைக்கத் தொடங்கியிருந்தது. மீண்டும் அதைப் புதைகுழிக்கு அனுப்ப யார் முயன்றாலும் இந்திய மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
டி.என்.வி.எஸ்.செந்தில்குமார்,
தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்