articles

img

‘சிலோன் டீ’யில் பொதிந்திருக்கும் தமிழ் மக்களின் ரத்தம் - கருப்பு அன்பரசன்

“எவ்வளவுதான் அதிகாரம் படைத்தவனாக இருந்த போதிலும் பெண்களின் சில தீர்மானங்களின் முன்னால் ஆண்கள் கையலாகாது  போகும் தருணங்களும்  இருக்கின்றன. அவ்வாறான தீர்மானங்களை எவராலும் மாற்ற முடியாது”

சாமிமலை வாசிக்கத் தொடங் கிய கொஞ்ச நேரத்தி லேயே மனசுக்குள்.. அடி யில் கிடந்த பெரும் வலியான நினைவுகள் இந்த இரவுப் பொழுது பெரும் துயரத்தோடு விடியற்காலையை சந்தித்து அழுது கொண்டிருந்தது. “சிலோன் டீ” என்று உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற இலங்கை தேயிலை தூளின்  ஒவ்வொரு துகள்களிலிருந்தும் வெளி யேறும் நறுமணம் தென்னிந்தியாவி லிருந்து இழுத்துச் செல்லப்பட்ட பல்லாயி ரக்கணக்கான தமிழர்களின் பிணங்களில் இருந்தும் இரத்த பிசுபிசுக்கிலிருந்தும் வியர்வையின் உவர்ப்பில் இருந்தும் வெளியேறும் வலியும் வேதனையும் மிகுந்த மலையகத் தமிழர்களின் வாசமே. மலைய கத் தமிழர்களின் வாழ்நிலை என்பது இது வரை தமிழர்கள் மத்தியில் கூட பெருமளவு கவனிக்கப்படாத பொழுது சிங்கள மொழி யில் பேசப்பட்டு எழுதப்பட்டு வந்து இருக்கக் கூடிய துயரத்தின் அடையாளம் முழுவது மாய் தாங்கிய புதினமே சாமிமலை. பரம்பரை பரம்பரையாக மலையகத்தின் பல எழில் கொஞ்சும் தேயிலை தோட்டத்து கொழுந்துகளோடவும் ரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளோடவும் மடியும்.. தொட ரும் மலையகத் தமிழர்களின் வாழ் முறையை, வாழ் நிலையை இலங்கை யின் காட்போர் மலை பிரதேசத்தின் டன்மோர் தேயிலை தோட்ட லயன்களில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில் இருந்து புதினத்தை தொடங்கி இருக்கிறார் ஆசிரியர். 

மரணம் ஒவ்வொருவருக்கும் நிச்சய மான ஒன்றுதான்.. எவர் ஒருவரையும் மரணம்  எப்பொழுது வாரி அனைத்துக் கொள்ளும் என்பதை எவருமே அறிய மாட்டார்கள்.. எதிர்கால சந்ததியர்களின் முடிச்சு அறு படாமல் இருக்க தொடரும் ரகசியம் அறிந்த வர்கள் மனிதர்கள்.. அந்த ரகசியமே காத்தி ருந்த பிறப்பை கொண்டாடும் மனநிலை யையும் எதிர்பாராத இழப்பை ஏற்றுக் கொண்டே கடந்து செல்ல வேண்டிய துயரம் மிகுந்த மனத் துயரத்தையும் அல்லது “இது எப்படா போய் சேரும்” என்கிற எண்ணத் தினையும் பிறந்த அவர் சக மனிதர்களோடு வாழ்ந்த வாழ்வையும் இணைத்தே யோசிக்க வைக்கிறது,யோசித்ததை பேச வைக்கிறது.   நவீனத்தின் வளர்ச்சிக்காக - பூர்வ  குடிகளின் அடையாளங்களை சிதைத்தும் அவர்களின் வாழ்விடங்களை சூறையா டியும்.. அம்மக்களின் வாழ்வினை சின்னா பின்னப்படுத்தியும் நிர்மூலமாக்கியும் அவர்களின் வயிற்றுப் பசி கொடுமையின் மீதமர்ந்து தங்களின் சதைத் தேவையை நிவர்த்தி செய்து கொண்ட அதிகாரத்தின் ஈனச் செயலை இன்றளவும் தொடர்கின்ற இழி மனிதர்களை தனது புதினத்தில் அடை யாளப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.  அதிகாரத்தின் குறியீடுஎளியவர்களை எதிர்கொள்ள முடியாமல்தூக்குக் கயிற்றுக் குள் சரணாகதி அடைகிறது. தன் நெற்றிப் பொட்டின் ரத்தத்தை கைகளில் இருக்கும் துப்பாக்கித் தோட்டாவின் நாவிற்கு நக்கக் கொடுக்கிறது. தற்கொலைக்குள் தஞ்சம் புகுகிறது. எளிய மக்களின் ஒடுங்கிய கண்க ளில் இருந்து வெளியேறும் நீர்த்துளிகள் அதி காரத் திமிரின் அடையாளங்களையெல் லாம் கரைந்து போகச் செய்கிறது.. அழித் தொழிக்கிறது.

பேரழிவு ஒன்றினை கணத்தில் எதிர்கொண்டு செய்வதறியாது இருக்கும் இலங்கையின் காட்மோர் மலை பூர்வகுடி தமிழ் மக்களை இலங்கையின் அதிகாரம் எப்படி அணுகி சமவெளி மக்கள் திரளோடு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கிறது; சமவெளி மக்களோடு தங்களை பிணைத்துக் கொள்ள முடியாமல் வாழ வேண்டிய நிர்பந்த வாழ்நிலைக்குள் தள்ளி விடுகிறது என்பதை நாவலுக்குள்பேசி இருட்டுக்குள் இருந்த பல நிஜங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறார் ஆசிரியர்.  உலகம் முழுவதும் பெண்களும் அவர்க ளின் உடலும் ஆண்களின், குடும்பங்களின் அன்றாடத் தேவைகளை வேலைகளை பூர்த்தி செய்வதற்காகவே என்று கட்ட மைத்து வைத்திருக்கக்கூடிய குடும்ப அமைப்பு முறை,  அதற்கு எதிராக கேள்வி  கேட்பவர்களாக, “எங்களின் நிலைக்கு காரணமே நீங்கள்தான்” என்று ஆள்காட்டி விரல் நீட்டி சுட்டுபவர்களாக,ராணுவ அதி காரியாக வரக்கூடிய சரோத்தின் மனைவி வஜ்ரா, மற்றும் ஒடுக்கப்பட்ட பெண்களின் அடையாளமாக இருக்கக்கூடிய லலிதா என்கிற கதாபாத்திரங்கள். 

மலையக தமிழ் மக்கள் இன்றளவும் அங்கே இருக்கக்கூடிய தேயிலை தோட்ட எஜமானர்களுக்கு ஏற்றதொரு வாழ்வினை தங்களின் மகிழ்ச்சியை இழந்து கொண்டாட் டத்தை தாங்களே அழித்து பெரும் துய ரங்களை - துன்பங்களை சுமந்து, வாழ்ந்து தங்களை இழந்து கொண்டு வருகிறார்கள் என்கிற மெய்யான உண்மைகளை புதி னமாக்கி இருக்கிறார் சாமிமலையாக. எளிய மக்களின் பெண்களின் வாழ்வினை, உலக பணக்கார நாடுகள் அனைத்தும் நல்ல தொரு உடைக்கும்.. சில இனிப்பு பொட்ட லங்களுக்கும் ஈடாக்கி சூறையாடிடும் தொடரும் நிஜங்களை நாவலுக்குள் பெரும் வலியோடும் காத்திரமாகவும் பேசியிருக்கிறார்.  ஆண்களின் அதிகாரத்தின், அரசாங் கத்தின் மொத்தக் குறியீடாக இங்கு ராணுவ வீரன் சரோத் எழுதப்பட்டிருக்கிறார்.  வார்த் தைகளில் நடிப்பு கலந்து பேசுவது ஏற்றுக் கொள்ளாத பொழுது வன்முறையை பிரயோகிப்பது, வாழ்வினை சூறையாடுவது இதுதான் சரோத் என்கிற பாத்திரத்தின் அடையாளம்.  இந்த அடையாளம்தான் உலகம் முழு வதிலும் இருக்கக்கூடிய எளிய மக்களுக்கு எதிராக தொடர்ந்து எதிர் நிறுத்தப்படுகிறது. இன்றைக்கும் அதிகாரத்தின்.. அரசின் அடையாளமாக. சாமிமலை முழுக்க முழுக்க தென்னிந்தியாவிலிருந்து வலுக் கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் மக்களின் துயரம் பொருந்திய வாழ் நிலையை வாழ்வு முறையை பேசுகிறது. நிறத்தின் காரணமாகவும் இனத்தின் காரணமாகவும் பேசும் மொழியின் காரண மாகவும் வாழும் முறையின் காரணமாகவும் பின்பற்றும் பழக்கவழக்கங்களின் காரண மாகவும் செயல்படும் அரசியலின் காரணமாகவும் உலகம் முழுவதிலும் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு சிதைக்கப்பட்டு வரும் உலகத்தின் எளிய மனிதர்களின்..சிறு பான்மை மக்கள் அனைவரின் வாழ்வோடு சாமிமலை பொருந்திப் போகிறது. 

உலகம் முழுவதும் நிறைய வஜ்ராக்க ளும் லலிதாக்களும் தீபாக்களும் ராஜேஸ்வ ரிகளும் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான வன்மத்தை நிறைய சரோத்துகள் செய்து கொண்டே தான் இருக்கிறார்கள்.  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருப்பதைப் போன்று அவர்களின் ஏழ்மை நிறைந்த வாழ்முறையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அபு சாலிகளும்.. ப்ராஸ்களும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் உலகப் பணக்கார நாடுகளெங்கும் . இவர்க ளுக்கு இடையே எளிய மக்களின் நிஜம் நிறைந்த நேசமும் அன்பும் காதலும் அக்க றையும் பணப் பரிவர்த்தனைக்குள் உயிர் வாழும் நிர்ப்பந்தத்திற்குள் முடிந்து போய் விடுகிறது. அதனையும் மீறி எளிய மக்க ளின் உணர்வுக்குள் காதலின் ஈரம் சுரந்து கொண்டே தான் இருக்கும். இலங்கை தேயிலைத் தோட்டத்தில் பணி புரியும் பூர்வகுடி மக்களோடு வாழ்ந்து இந்த நாவலை புனைவுகள் கலந்து கொடுத்தி ருக்கிறார் நாவலாசிரியர் சுஜித் ப்ரசங்க.. மொழிபெயர்ப்பு நாவல்தான் வாசிக்கிறோம் என்கிற எண்ணம் சிறிதேனும் வாசகனுக்கு  வந்து விடக்கூடாது என்று நாவலின் வலியை முழுவதுமாக உள்வாங்கி அழகியலோடு  இலக்கியத் தரம் வாய்ந்ததாக தமிழ் சமூகத்திற்கு அளித்திருக்கிறார் மொழி பெயர்ப்பாளர் எம்.ரிஷான் ஷெரிப். வலியை சுமந்திருக்கும் அட்டைப் படத்தை வடிவமைத்து எதிர் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. சாமி மலை ஒடுக்கப்பட்ட மக்களின், பூர்வகுடிகளின், இலங்கை மலையக தமிழ் மக்களின் வாழ்முறையை வாழ்நிலையை சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் இடர்பாடுக ளை பேசுகிறது. எளிய மனிதர்களின் அன்பினை காதலை பிரியத்தை உயிர்கள் மேல் கொண்ட நேசத்தை பேசுகிறது. அவசியம் வாசியுங்கள்.

#சாமிமலை
#சுஜித்_ப்ரசங்க
சிங்கள மொழி நாவல்
தமிழில் #எம்_ரிஷான்_ஷெரிப்.
#எதிர்_வெளியீடு.
176 பக்கங்கள், விலை ரூ.250/-