articles

img

‘‘சேவைத் துறைகளை தனியார்மயமாக்கக் கூடாது” - கே.இ.ரகுநாதன்

போக்குவரத்துத் துறை தனியார் மயமா னால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தேசியத் தலை வர் கே.இ.ரகுநாதன் கூறினார். போக்குவரத்து தொழிலாளர்கள் தனியார்மயத்தை எதிர்த்து தொடர்ச்சி யாக போராடி வருகிறார்கள். அண்மையில் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர். இதுகுறித்து இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தேசிய தலைவர் கே.இ.ரகுநாதன் கூறுகையில், அரசு ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தொழில் முனைவோர்கள் தொழில் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தொழில் செய்வது என்பது தொழில் முனைவோர்களின் இலக்காக இருக்க வேண்டும். அவர்களை கட்டுப் படுத்துவது, சுரண்டல்களில் ஈடுபடாமல் இருப்பது, கொள்கையை உருவாக்கு வது போன்றவற்றை நடுவராக இருந்து அரசு கண்காணிக்க வேண்டும்.

கேள்வி: ஆனால் போக்குவரத்து சேவைத் துறை, லாப நோக்கோடு இயக்கப்படும் துறை அல்ல. எனவே இதை தனியார்மயமாக்கக் கூடாது என தொழிலாளர்கள் போராடி வரு கிறார்கள். இது தனியார் மயமானால் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?

பதில்: போக்குவரத்து துறை என்பது சேவை மனப்பான்மையுடன் செயல் படுத்த வேண்டிய சேவைத் துறையா கும். ஏறக்குறைய தமிழ்நாட்டில் 60 முதல் 65 விழுக்காடு மக்கள் அரசு போக்குவரத்தை பயன்படுத்துகிறார் கள். இந்தத்துறை தற்போது நஷ்டத்தில்  இயங்குவதால் அதை தனியார்மய மாக்குகிறோம் என்று அரசு கூறினால், ஏன் நஷ்டத்தில் இயங்குகிறது என்பதை பார்க்க வேண்டும். அதை எப்படி ஈடு கட்டலாம் என்று அரசு பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு பாத்திரத்தில் ஓட்டை இருந்தால் அதை அடைக்க வேண்டுமே தவிர, பாத்திரத்தை எடுத்து வேறு ஒருவரிடம் கொடுத்து விடக்கூடாது. போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்கினால் சாமானிய மக்கள் வளர்ச்சி பாதிக்கப்படும், அவர்கள் மேலும் இன்னலுக்கு ஆளாவார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. குறிப்பாக பண்டிகைக் காலங்களில் அரசு எவ்வளவு கூடுதலாக பேருந்து களை இயக்கினாலும், அது போதாமல் தனியார் பேருந்துகளை நாடிச் செல்கி றார்கள். அப்போது கட்டணம் 5 மடங்கு வரை கூட உயர்த்தி வசூலிக்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கும் போது அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்ற அடிப்ப டையில்தான் தொழில் முனைவோர்கள் ஈடுபடுவார்கள். ஆனால் இதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்றால் முடியாது. தமிழ்நாட்டில் இந்த காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை கட்டுக் கடங்காத விலை ஏற்றத்தினால் சாமா னிய மக்கள் கஷ்டப்படும் போது, வரு மானத்திற்கும் செலவிற்குமான இடை வெளி அதிகரித்துக் கொண்டிருக்கும் போது, இதை நம்பி இருப்பவர்களுடைய வாழ்வாதாரம் நிச்சயமாக கேள்விக் குறியாகும்.

இதையே காரணம் காட்டி நாளை மின்சாரத் துறையை தனியார் மய மாக்கினால் என்னவாகும்? அப்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளே வரும் போது, தொடக்கத்தில் குறைந்த கட்டணத்தில் வழங்குவது போல் வழங்கு வார்கள். நாளை அனைவரையும் தங்கள் வசப்படுத்திய பிறகு கார்ப்பரேட் நிறுவனங்கள் விலையை கூட்டினால் சாமானிய மக்களுக்கு வேறு கதி கிடை யாது என்ற நிலை ஏற்படும். இப்படிப் பட்ட சூழலில் அரசு இயக்கிக் கொண்டி ருக்கும் பேருந்துகளை தனியார் மயமாக்கக் கூடாது. இந்த சேவையில் இருந்து விலகிக் கொள்ளக் கூடாது.   போக்குவரத்து நிறுவனம் லாபகர மாக இயக்கப்பட வேண்டும் என்ப தில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் லாபத்திற்காக மட்டும் இயக்கக் கூடியது அல்ல போக்குவரத்துத் துறை. இது சேவை மனப்பான்மையுடன் இயக்கக் கூடியது. ஒரு வழித்தடத்தில் அதிகமானோர் பயணிக்காமல் இருக்க லாம். ஆனாலும் அந்த வழித்தடத்தில் பேருந்தை இயக்க வேண்டிய கட்டா யம் அரசுக்கு உள்ளது.  ஆனால் இது தொழில் முனை வோருக்கு (தனியாருக்கு) இல்லை. ஆனால் எங்கெல்லாம் மக்கள் வசிக் கிறார்களோ அவர்களுக்கு பலன் சென்றடைய வேண்டும், அவர்கள் நலமாக இருக்க வேண்டும், வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்று நினைப் பதுதான் அரசு. அப்படிப்பட்ட நிலையில் அரசு போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்குவதோ, தனியாரிடம் ஒப்படைப்பதோ, இதில் இருந்து விலகிக் கொள்வதோ ஏற்புடையது அல்ல. இது மக்களை மேலும் பாதிக்கும்.  எனவே போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசியமான சேவைத் துறைகளை தனியார் மயமாக்கும் யோசனையை அரசு நிறுத்தி வைக்க வேண்டும்.

எஸ்.ராமு, அம்பத்தூர்