சிறந்த புத்தகங்கள் மட்டுமே நற்சமூகத்தை உருவாக்கும் பேராயுதம். அதற்கு புத்தகங்களைத் தேடுவதும், வாசிப்பதும், வாசித்தவற்றை நடைமுறைப்படுத்துவதும், முற்போக்கு செயற்பாட்டாளர்களின் முதன்மைப் பணியாகும். சமூக அக்கறையுடன் கூடிய பணி களை விரிந்த தளத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கு புத்தகங்களை தேடுவதிலும், வாசிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்திடல் வேண்டும். அதற்கான ஒரு விதையாகவே...காடு களின் முக்கியத்துவத்தை உணர்த்தும்... காடோடி என்கிற நாவலுக்கு அறிமுகம் வழங்கு கிறோம். வாருங்கள் காட்டிற்குள் பயணிப்போம்! பிரபஞ்சத்தில் முதன் முதலில் பேசத் தொடங்கியது ஓடையில் ஓடும் நீர் தான். அப்போது தாவரங்கள் கிடையாது. விலங்குகள் கிடையாது. மனிதர்களும் கிடையாது. மனிதரே இல்லை என்கிற போது, மொழிகள் மட்டும் ஏது? பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாமல் இருந்த நீர் தான், தனக்குத் துணையாக முதலில் தாவ ரங்களை முளைக்க வைத்தது. அத்தாவரங்கள், தாம் பேசுவதற்காக பூக்களைப் படைத்தது. பூக்கள். தாம் பேச கனிகளைச் சமைத்தது. கனிகள், தாம் பேச பறவைகளை அழைத்தது. இப்படியாக வந்து மனிதர்களில் முடிந்தது. மனி தர்களுக்கு அப்போதெல்லாம் மற்ற மனிதர் களின் முகம் மட்டுமே தெரியும். தன் முகம் எப்படி இருக்கும் என்றே தெரியாது. தனது முகத்தை பார்க்கும் முதல் கண்ணாடியாக காட்சி அளித்தது ஓடை நீரே ஆகும். நீர் ஓர் ஓடும் கண்ணாடி, பேசும் கண்ணாடி. அக்கண்ணாடியுடன் எல்லா உயிர்களும் இன்னமும் பேசிக்கொண்டு தான் இருக்கின்றன... மனிதனைத் தவிர! மனிதர்கள் எப்போது தனக்கென ஒரு கண்ணாடியை உருவாக்கி, இனி எல்லோ ரும் இதில் முகம் பாருங்கள் என்று சக மனிதர் களுக்குச் சொன்னார்களோ, அப்போதே இயற்கை தந்த கண்ணாடியின் மீது கல்லைப் போட்டு உடைத்து விட்டனர். சுயநலமும், வணிகச் சிந்தனையும் கொண்ட வர்த்தகச் சூதாடி களால், ஒரு பெரும் மழைக்காடு. வெயில் காடாக எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை சுவைபட சொல்லும் புதினமே காடோடி நாவலின் அடிப்படை கரு.
கினபத்தாங்கன் நதியின் மடியில்...வெயிலை மறைத்து... வானுயர வளர்ந் தோங்கிய மரங்களும், கோடிக்கணக்கான பல்லுயிர்களும், வணிக வேட்கைக்காக வீழ்த்தப்படுவதை படிக்க நேரிடும் எவரொரு வரும் கலங்கி நிற்பர் என்பதில் ஐயமில்லை. போர்னியோவின் (மலேசியா) மழைக்காடு அழிக்கப்பட்டதன் பின்னணியில் உருவானதே இந்நாவல். இந்நாவலின் தனிச்சிறப்பானது...வாசகர்களை காட்டில் பயணிக்க வைக்கும் பிரமிப்பையும், உணர்வையும் ஏற்படுத்துவதே ஆகும். அவசியம் படியுங்கள்...அப்போது தான், அந்த அழகான அடர்வனத்தின் அழகியலை யும்,ஆச்சரியங்களையும் அனுபவிக்க முடியும். அதற்கான ஓர் சான்று இதோ... மழைக்காடு என்பது வெறுமனே மரங் களின் தொகுப்பல்ல. மண் முதல் மரம் வரை... பூச்சி முதல் பறவை வரை... ஓடை முதல் அருவி வரை... தேவாங்கு முதல் தொல்குடி வரை... ஒன்றோடொன்றுப் பிணைந்து வாழும் பல்லு யிர் உலகம்! அப்படிப்பட்ட காட்டின் நிலவி யலைத் துல்லியமாக விவரித்துச் சொல்லும் அதே வேளையில், காட்டுக்கு உரிமை கொண்டா டாமல், அக்காட்டின் உயிரினங்களுள் ஒன்றாகவே தம்மைக் கருதி வாழும் தொல்குடி களின் வாழ்வியலையும் அறிதலுக்கு உட்படுத்து கிறது இந்நாவல்! அதேபோல், அரிய மரங்களின் அழிப்பு, பல்லுயிரிகளின் ஒழிப்பு மட்டுமின்றி, தொல்குடிகளின் வாழ்வையும், பன்னாட்டு வணிக அரசியல் எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதை, ஒலியற்ற குரலில் உரக்கச் சொல்கிறது இப்புதினம்!
இந்நாவலில் அதிசயிக்கும் வகையில், பல சுவையான தகவல்கள் நிரம்பிக் கிடக்கின்றன. அதில், பாகுபாடற்ற வாழ்வியலுக்கான பாடமாக பின்பற்ற வேண்டிய ஓர் தகவல் இதோ... இயற்கைக்கு எந்த வேறுபாடும் கிடையாது. எல்லாமே விருப்ப ஒப்பந்தம் தான். அது இயற்கை ஒப்பந்தமும் கூட! வௌவால்கள் இரவில் இரை தேடுபவை. லயாங்-லயாங் குருவி கள் பகலில் இரை தேடுபவை. குருவிகள் இரை தேடிச் செல்லும் பகல் நேரத்தில், வௌவால்கள் குகையில் தங்கிக் கொள்கின்றன. மாலையில் லயாங்-லயாங் குருவிகள் குகை திரும்பும் போது, இரவு வேட்டைக்காக வௌவால்கள் வெளியே கிளம்பி விடும். குருவிகள் இரவில் தங்கிக் கொள்ளும். ஒரு வாழ்விடத்தை இரு வேறு உயிரினங்கள், அதுவும் “பாலூட்டியும் பறவையும்” சமமாகப் பங்கிட்டு வாழும் இத்தகு அழகான, அருமையான வாழ்வியலை...மனித சமூகத்திற்கு வழங்கிச் செல்கிறது இயற்கை எனும் அற்புதம். இது போல் மனித சமூகத்திற்கு தேவையான பற்பல தகவல்கள் இந்நாவலில் குவிந்து கிடக்கின்றன. காட்டுத் தேவதை கொற்றவை குறித்த தகவல்கள் வியப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. மழைக்காடுகளின் நெடும் மரங்களை வெட்டி வியாபாரமாக்க வந்தவர்களை, எதிர்த்து நின்று போரிட்ட தொல்குடிகளுக்கு “கொற்றவை” எவ்வாறு துணையாக நின்றது என்கிற கதை... ஏதுமற்றவர்களின் நம்பிக்கையாய் சித்தரிக்கப்பட்டுள்ளது. தொல்குடிகள் காட்டின் பாதுகாவலர்களாக இருப்பதையும், அர சியல் அதிகார வர்க்கம், அக்காடுகளின் வளங் களை வேட்டையாடி வர்த்தகத்தை பெருக்கி வரு வதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் நாவலாசிரியர். பன்னாட்டு வர்த்தகச் சூதாடி கள், கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு, உள்ளூ ரின் உழைக்கும் மக்களை எவ்வாறு பயன்படுத்து கின்றனர் என்பது குறித்தும் நாவல் விரிவாகப் பேசுகிறது.
நாவலில் வரும் கதாபாத்திரங்களான பிலியவ், ஒமர், யொகன்னா, ரலா, ஜோஸ் மூலம்... வாசகர்களை காட்டுக்குள் அழைத்துச் செல்கிறார் நாவலின் ஆசிரியர். இது வெறும் கதையல்ல. தொண்ணூறுகளின் துவக்கத்தில், நான்கு ஆண்டுகள் கள ஆய்வு செய்து, தரவு களை சேகரித்து... நாவல் வடிவில் வெளி வந்துள்ள நிஜத்தின் பிரதியாகும்!
நிறைவாக... மரம் என்றால் அது இலைகள் அல்ல! பூக்கள் அல்ல! காய்கள் அல்ல! கனிகளும் அல்ல! ஏன்...அது மரமே அல்ல! மரம் என்றால் அது வெறும் டாலர்! ஆம்... டாலர் மட்டுமே! மூதாய் மரமே! மன்னிப்புக் கோருகிறோம்! உன் எல்லா இலைகளையும் அறிந்தே உதிர்த்தோம்! உன் எல்லா கிளைகளையும் அறிந்தே வெட்டினோம்! உன்னையும் அறிந்தே வீழ்த்தினோம்!
காடோடி
ஆசிரியர் : நக்கீரன்,
பக்கம் - 312; விலை ரூ.300/-
வெளியீடு : காடோடி பதிப்பகம்