கூவும் குயிலே வாவா-உன் குரலின் இசையைத் தாதா! பேசும் கிளியே வாவா-உன் பேச்சை எனக்குத் தாதா! அகவும் மயிலே வாவா-உன் அழகுச் சிறகைத் தாதா! கரையும் காகமே வாவா-உன் கரிய நிறத்தைத் தாதா! கூவும் சேவலே வாவா-உன் கொண்டைப் பூவைத் தாதா! கொக்கரிக்கும் கோழியே வாவா-உன் கொழுத்த முட்டையைத் தாதா! குழறும் கோட்டானே வாவா-உன் குழறல் மொழியைத் தாதா! அலறும் ஆந்தையே வாவா-உன் அழகிய விழியைத் தாதா! கத்தும் வாத்தே வாவா-உன் சுத்தம் எனக்குத் தாதா! அலறும் கழுகே வாவா-உன் ஆழ்ந்த பார்வை தாதா! குனுகும் புறாவே வாவா -உன் கூட்டத்தை எனக்குத் தாதா! கீச்சிடும் குருவியே வாவா-உன் கீச்சின் பொருளைத் தாதா! கத்தும் மைனாவே வாவா-உன் முத்தம் ஒன்றைத் தாதா!