இந்திய நாட்டில் அண்மை ஆண்டுகளாக நடை பெற்று வரும் நிகழ்வுகள் நமது தேச ஒற்று மைக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாக அமைந்து வருகிறது. இந்த நிகழ்வுகளில் இருந்து இந்திய உழைப்பாளி வர்க்கம் பாதுகாக்கப்பட வில்லை. இந்த நிகழ்வுகள், இந்திய உழைப்பாளிக ளின் வர்க்கப் போராட்டத்தை கடுமையாகப் பாதிப்ப தோடு மட்டுமல்லாமல், நவதாராள ஆட்சி கடைப் பிடித்து வரும் நாசகர பொருளாதாரக் கொள்கைக ளுக்கு எதிரான எதிர்ப்பியக்கத்தின் தீவிரத்தன்மை யையும் வலு இழக்கச் செய்கிறது. எனவே, மதரீதி யில் சமுதாயத்தை பிளவுபடுத்தும் அனைத்து முயற்சி களையும் முறியடித்து, வர்க்கப் போராட்டங்களை மேலும் பலப்படுத்தி முன்னெடுத்துச் செல்வது என்பது இந்திய உழைப்பாளி வர்க்கத்தின் இன்றைய தேவை யும் கடமையும் ஆகும். நமது நாட்டில் வகுப்புவாத பிளவு தினந்தோறும் தீவிரப்படுத்தப்படுகிறது. இந்திய நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு எதிராக குறிப்பாக இஸ்லா மிய சமூகத்திற்கு எதிராக ஒரு புதிய வெறுப்புச் சூழல் கட்டவிழ்க்கப்படுகிறது. ஆட்சி நிர்வாகத்திடம் விசுவாசமாக உள்ள மதத்தலைவர்கள் இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சிறுபான்மையினரை அப்புறப் படுத்த வேண்டும் என வெளிப்படையாகவே அறை கூவல் விடுக்கிறார்கள். இப்படிப்பட்ட சீர்குலைவு நிகழ்வுகளால், சிறுபான்மை மக்களுக்கு மத சுதந்திரம் வழங்குவது தொடர்பான கவலை அளிக்கும் நாடுகள் பட்டியலில் அண்மையில் இந்தியாவை அமெரிக்கா சேர்த்துள்ளது.
மேன்மைமிக்க அரசியல் சாசனம்
பாரதிய ஜனதா கட்சியின் இடைநீக்கம் செய்யப் பட்ட தேசிய செய்தித் தொடர்பாளர் ஒருவர் முகமது நபிகளை அவமதிக்கும் விதமாக தெரிவித்த கருத்துக் களை தொடர்ந்து சர்வதேச அரங்கில் நமது நாடு முன்னெப்போதுமில்லாத அளவிற்கு கடும் எதிர்ப் பினை சந்திக்க நேரிட்டது. சர்வதேச அரங்கில் ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பினை சமாளிக்க ஆளும் கட்சி தனது சொந்த தேசிய செய்தித் தொடர்பாளரை விளிம்புக் கூறுகள் என கூறி மறுக்க நேரிட்டது. கெடு வாய்ப்பாக இப்படிப்பட்ட விளிம்புக் கூறுகள் என அழைக்கப்படும் பிரமுகர்கள்தான் பொதுவெளியில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். சிறுபான்மை மக்க ளுக்கு வழங்கப்பட்டு வந்த உரிமைகளை பாதிக்கும் விதமாக ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. பாலஸ் தீனப் போராளிகளை ஒடுக்கும் விதமாக அவர்களின் வீடுகளை இடிக்கும் இஸ்ரேல் கொள்கை போல், நமது நாட்டில் ஒன்றிய அரசிற்கு எதிராகப் போராடும் சிறுபான்மை மக்களை உடனடியாக, விரைந்து தண்டிக்கும் விதமாக புல்டோசர் தற்பொழுது புதிய கரு வியாக பாஜக ஆளும் மாநிலங்களில் பயன்படுத்தப் படுகிறது. காவலாளி, குற்றம் சாட்டுபவர் மற்றும் நீதிபதி என அனைத்து வேலைகளையும் அரசு நிர்வாகம் செய்து வருகிறது. அரசு நிர்வாகம் என்ன நினைக்கிற தோ அதுவே சட்டமாக உருப்பெறுகிறது. சட்டம் வகுத்துள்ள சரியான செயல்முறைகள் அனைத்தும் தற்பொழுது பொறுப்பற்ற முறையில் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.
800 ஆண்டுகளுக்கு முன்னர் மேக்னா கார்ட்டா (MAGNA CARTA) எனப்படும் அடிப்படை உரிமை களையும் சலுகைகளையும் உத்தரவாதம் செய்யும் ஆங்கிலேயே ஆவணத்தில் பிரிவு 39 இல் “சரியான செயல்முறை” கோட்பாடு தொடர்பான சரத்துக்கள் சேர்க்கப்பட்டதிலிருந்து அதனுடைய முக்கியத் தன்மையை நாம் புரிந்து கொள்ளலாம். மேலும் இந்த “சரியான செயல்முறை” என்கின்ற கோட்பாடு அமெரிக்க அரசியலமைப்பிலும் ஐந்து மற்றும் பதி னான்காவது திருத்தங்கள் வாயிலாக சேர்க்கப்பட்டுள் ளது. இந்தக் கோட்பாட்டை இந்திய அரசியல் அமைப் புச் சட்டம் சற்று மாற்றியமைத்து, “சட்டம் நிறுவிய செயல்முறை” என இந்தக் கோட்பாடு செழுமை செய்யப்பட்டது. இந்தக் கோட்பாட்டை உலகில் உள்ள அரசியலமைப்பு வல்லுநர்கள் அமெரிக்க அரசியல மைப்பை விட இந்திய அரசியலமைப்பு சிறந்தது எனவும் பரவலான அதிகார வரம்பை வழங்கியுள்ளது எனவும் கூறி பாராட்டுகிறார்கள். இந்திய குடி மக்கள் அனைவரின் வாழ்வுரிமை, சுதந்திரம் மற்றும் சொத்துரிமைகளை அரசு நிர்வாகம் மற்றும் சட்ட மன்றம் தொடுக்கும் அத்துமீறல்களில் இருந்து இந்திய அரசியலமைப்பு பாதுகாப்பு அளிப்பதால் சர்வதேச வல்லுநர்கள் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தை வெகுவாக பாராட்டுகிறார்கள். ஆனால் இன்று கெடு வாய்ப்பாக இக்கோட்பாடு தலைகீழாக கடைப் பிடிக்கப்படுகிறது. சிறுபான்மைப் பிரிவைச் சார்ந்த இந்திய குடிமக்கள் குடியுரிமை அற்ற அந்தஸ்திற்கு சுருக்கப்படுகிறார்கள்.
நமது நாடு நாகரிக வளர்ச்சியில் மிகவும் உயர்ந்த நாடு எனவும், இதன் ஆட்சிமுறையில் மதமும் மத நம்பிக்கையும் முக்கியப் பங்களிக்கிறது என்கின்ற மாயையை ஏற்படுத்தும் வெறுப்பூட்டக்கூடிய முயற்சி கள் தற்பொழுது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு மிக உயரிய அந்தஸ்தை வழங்கி அதன் அடிப்படையில் அரசாட்சி செய்யும் இன்றைய நாகரிக சமுதாயத்திற்கு இம்முயற்சிகள் முற்றிலும் நேர் எதிரானவை. நமது நாகரிகம் முற்றிலும் இந்து கலாச்சாரம் சார்ந்தது என்ற மாயையை உற்பத்தி செய்யும் முயற்சி நடைபெற்றுவருவதால் நமது பண்டைய புகழை மீட்டெடுப்பதற்கு இந்திய அரசாங் கம் முயற்சி செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் வலுக்கிறது.
சிங்கத் தோல் கழுதை
முன்ஷி பிரேம்சந்த் அவர்கள் “சம்ப்ரதாயிக்த அவுர் சன்ஸ்கிரிதி” என்கின்ற தனது அருமையான கட்டு ரையில் இந்திய கலாச்சாரத்தைப் பற்றி எழுதியுள் ளதை இங்கே நினைவு கூர்வது மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த கட்டுரையின் முதல் பத்தியை இங்கே மேற்கோள்காட்டுவது இன்றைய சூழ்நிலையில் மிக பொருத்தமாக இருக்கும். “வகுப்புவாதம் எப்பொழுதும் கலாச்சாரம் என் கின்ற சாக்குப்போக்கைக் கையாளும். வகுப்புவாதம் எப்பொழுதும் தன்னுடைய உண்மையான வடிவத்தை காட்ட மறுக்கும். காட்டில் வாழும் மிருகங்கள் மீது தனது அதிகாரத்தை செலுத்த கழுதை எவ்வாறு சிங்கத் தோலை போர்த்தி வேடமிடுகிறதோ, அதேபோல் வகுப்புவாதமும் கலாச்சாரம் என்ற ஆடையை வேட மாக அணிந்து வரும். இந்துக்கள் தங்களது கலாச்சா ரத்தை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புவார்கள்.
அதேபோல், இஸ்லாமியர்களும் தங்களது கலாச் சாரத்தை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புவார்கள். இந்நாள்வரை இந்துக்களும் இஸ்லாமியர்களும் தங்களது கலாச்சாரத்திற்கு எந்தவிதப் பாதிப்பும் வராது என உறுதியாக நம்புகிறார்கள். ஆனால் இந்த இரண்டு பிரிவினர்களுக்கும் இந்துக் கலாச்சாரம், இஸ்லாமியக் கலாச்சாரம் அல்லது வேறு எந்தக் கலாச்சாரமும் இல்லை என்கின்ற உண்மையை மறந்து செயல்படுகிறார்கள். இன்றைய தினம் உலகில் ஒரே ஒரு கலாச்சாரம் தான் உள்ளது. அது பொருளா தாரக் கலாச்சாரம். இந்துக்களும் இஸ்லாமியர்களும் இன்றைய தினமும் கலாச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். ஆனால் கலாச்சாரத்திற்கும் மதத்திற்கும் எந்த தொடர்பும் கிடை யாது. ஆர்ய கலாச்சாரம், அரேபிய கலாச்சாரம், பெர்சிய கலாச்சாரம் என பல கலாச்சாரம் உள்ளது. ஆனால் கிருத்துவ கலாச்சாரம், இந்து கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய கலாச்சாரம் என்று எதுவும் கிடையாது.” பலவிதமான எண்ணங்களையும், பல வாழ்க்கை முறையையும் ஒருங்கிணைத்தும் அரவணைத்தும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்ததுதான் இந்தியக் கலாச்சாரம்.
தேசத்தின் பரிணாமம்
பிரக் கோரக்புரி என்ற புனைப்பெயருடைய ரகுபதி சஹாய், இந்திய நாடு உருவானதைப் பற்றி மிக அழகாக இரண்டு வரிகளில் விளக்கியுள்ளார். “உலகெங்கிலும் இருந்து மனிதர்கள் கூண்டு வண்டியில் ஹிந்துஸ்தான் மண்ணில் வந்து இறங்கி னார்கள், இங்கே குடியேறினார்கள். இவ்வாறே ஹிந்துஸ்தான் உருவானது.” நமது நாட்டில் உள்ள பல்வேறு கலாச்சாரத்தை யும், மொழிகளையும், மதங்களையும் புரிந்து கொண்டு அதனை அங்கீகரித்து வருவதால் நமது நாட்டின் ஒற்றுமை மேலும் உறுதியாக்கப்படுவதோடு மட்டு மல்லாமல், நமது கலாச்சாரத்தின் வளமை அகில உலகிற்கும் பொறாமையாக மாறியுள்ளது. இந்திய நாட்டின் இசை, கலை, கட்டிடக்கலை ஆகியவை மிக வளமை பெற்று உயர்ந்ததற்கு முக்கியக் காரணம் நமது கலாச்சார ஒத்திசைவுதான்.
பண்டிதர் ரவிசங்கர் மற்றும் பண்டிதர் பீம்சென் ஜோஷி இருவரின் பணிகளை பற்றி புகழும் பொழுது, இவ்விருவருக்கும் வழிகாட்டியாகவும் ஆசிரியரா கவும் இருந்த உஸ்தாத் அலாவுதீன் மற்றும் உஸ்தாத் கான் அப்துல் கரீம் இருவரையும் நம்மால் மறக்க முடியாது. பண்டிதர் சிவகுமார் சர்மாவின் மரண எச்சங்களை உஸ்தாத் சாகீர் உசைன் சுமந்து செல்லும் இதயத்தை துளைக்கும் காட்சி, வெறும் மரியாதை நிமித்தமாகவோ அல்லது தனது நெருங் கிய நண்பருக்கு பிரியாவிடை தந்த செயல்மட்டு மல்ல. இவர்கள் இருவரும் இணைந்து மேடைகளில் அரங்கேற்றிய மாயாஜாலங்கள் அனைவரின் மனதி லும் என்றைக்கும் நிலைத்து நிற்கும் என்பதை நினை வூட்டியது. குரு நானக்கின் போதனைகள், உஸ்தாத் பிஸ் மில்லா கான் ஷெனாய் பயன்படுத்தி வழங்கிய இசை, அமீர் குஸ்ரோ மற்றும் கபீர் இருவரின் பாடல்கள், மீராபாயின் பக்திப் பாடல்கள் போன்றவை இந்திய நாட்டின் கலாச்சார ஒத்திசைவுக்கு சாட்சியங்கள். இந்தியக் கலாச்சாரம் ஒருபொழுதும் புதிய கருத்துக் களை விலக்கும் இயல்பு கொண்டதல்ல, மாறாக அது அரவணைக்கும் தன்மையோடும், உள்வாங்கும் வெளிப்படைத் தன்மையோடும் இருந்ததால்தான் நமது கலாச்சாரம் ஒத்திசைவில் மிக வளமை பெற்ற தாக விளங்குகிறது.
இரண்டு தெரிவுகள்
ஆனால், இன்று இந்த உயர்ந்த வளமை வாய்ந்த நமது கலாச்சாரம், இந்திய சமுதாயத்தை ஒருமைப் படுத்துதல் என்ற பெயரில் தாக்குதலுக்கு உள்ளாகி யுள்ளது. சிஏஏ, ஹிஜாப், லவ் ஜிஹாத் என்ற வடிவில் சிறுபான்மை மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்பது அரசியல் லாபத்திற்காக இந்து சமூகத்தை ஒருமைப்படுத்தும் முயற்சியாகும். இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது, நமது சுதந்திர இந்தியாவை தோற்றுவித்தவர்கள் முன்பு இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்று, அவர்கள் மிக எளிதாக ஜின்னா உருவாக்கிய பாகிஸ்தானின் கண்ணாடி படம் போல இந்தியாவை உருவாக்கி, இந்துக்களின் தாய்நாடாக மாற்றியிருக்க முடியும். இரண்டு, சுதந்திர இயக்கத்தின் நெறிமுறை களை தாங்கிப்பிடித்து, மதப் பாகுபாடின்றி அனைத்து இந்தியர்களையும் சமமாக நடத்துவது. இந்திய கலாச் சாரத்தின் பன்முகத்தன்மையையும், ஒத்திசைவையும் நன்கு புரிந்திருந்த நமது நாட்டை தோற்றுவித்த வர்கள், மிகச் சரியாக இரண்டாவது தெரிவினை தேர்ந்து எடுத்தார்கள்.
பலவிதமான இனங்களை கொண்ட இந்தியாவை மதத்தால் ஒன்றுபடுத்த முடியாது என இந்திய சுதந்திர இயக்கம் மிகச் சரியாக கணித்தது. இந்தியப் பிரிவினை யின் பொழுது 35 மில்லியன் இஸ்லாமியர்கள், 7 மில்லி யன் சீக்கியர்கள், 8 மில்லியன் கிறிஸ்துவர்கள் இந்திய நாட்டில் தொடர்ந்து வாழ முடிவு செய்தார்கள். ஏனென்றால், இந்திய நாடு இந்துக்களுக்கு மட்டு மான நாடு இல்லை என்றும், அனைத்து மதத்தினரும் ஒன்று இணைந்து வாழ்வதற்கான நாடு என்றும் உறுதி யாக நம்பினார்கள். சமகாலத்தில் நடக்கின்ற நிகழ்வுகள் நமது நாட்டை தோற்றுவித்தவர்களின் புரிதலின் சரியான தன்மையை வலுவூட்டுகிறது. 1971 இல் பாகிஸ்தான் இரண்டாகப் பிளவுபட்டது. பல இஸ்லாமிய நாடுகளில் அங்குள்ள அடிப்படைவாதிகளின் மிரட்டலுக்கு கட்டுப்பட்டு இஸ்லாம் அற்ற பிற மதத்தினரை அடிபணிய வைக்கும் நிகழ்வுகளையும் நாம் காண்கிறோம். இந்த நாடுகளில் இஸ்லாம் அற்ற பிற மதத்தினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களால் நாளடைவில் இஸ்லாமியர்கள் மீதும் ஏதாவது ஒரு காரணத்திற்காக தாக்குதல்கள் நடத் தப்படுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, லெபனான், இராக், சிரியா, சோமாலியா, ஏமென் போன்ற நாடுகளில் நடத்தப் படும் தாக்குதல்களில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
மதம் கடந்த தியாகம்
மிகப்பெரிய நிலப்பரப்பளவும், பன்முகத்தன்மை யும் உள்ளடக்கிய இந்தியா ஒரே நாடாக ஒற்றுமை யாக இருக்க வேண்டும் என்றால், இங்கே வாழும் அனைத்து சமூகத்தினர்களுக்கும் நாட்டின் எதிர் காலத்தில் பங்கு உள்ளது என்கின்ற நம்பிக்கை கொடுக்கப்பட வேண்டும் என நமது நாட்டை தோற்று வித்தவர்களின் புரிதல் மிகச் சரியாக உள்ளது. 1947-க்குப் பின்பு பலவிதமான அழுத்தங்களை சந்தித்தா லும், இந்திய நாடு தொடர்ந்து ஜனநாயக நாடாக அமை தியுடனும், ஸ்திரத்தன்மையுடனும் செயல்படுவதற்கு, மதச்சார்பற்ற கொள்கையை உறுதியுடன் பின்பற்றி யது தான் பிரதான காரணமாகும். வரலாறு தற்பொழுது புதிய போர்க்களமாக மாறி யுள்ளது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் ஒன்றிணைந்து போராடினார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நானா சாஹிப், பகதூர் ஷா ஜாஃபர், மௌல்வி அஹமத் ஷா, தாந்தியா தோபே, கான் பகதூர் கான், ராணி லட்சுமிபாய், ஹஸ்ரத் மஹல், அஜிமுல்லா கான், பெரோஸ் ஷா போன்ற தலைவர்கள் இணைந்து இந்தியாவின் முதல் சுதந்திர போரை 1857 இல் நடத்தினார்கள். இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து செய்த பல உயர்ந்த தியாகங்கள் நம் வரலாற்றுப் பக்கங்களில் நிரம்பியுள்ளதை நாம் பார்க்க முடியும்.
அந்த புளிய மரம்
இன்று அயோத்தியா வகுப்புவாத துருவப்படுத்த லின் மையப்பகுதியாக மாறியுள்ள நிலையில், 1857 இல் அயோத்தியாவின் பிரபல மௌலவி மவுலானா அமீர் அலியும் பிரபல அனுமன் கோவிலைச் சார்ந்த பாபா ராம்சரண் தாசும் இணைந்து ஆங்கிலேயர்க ளுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய எதிர்ப்பு இயக்கங்களை நடத்தினார்கள் என்பது வரலாற்று உண்மை. இருவரும் கைது செய்யப்பட்டு, பின்பு குபேர் டீலா என்ற இடத்தில் அமைந்திருந்த புளிய மரத்தில் இருவரும் தூக்கில் இடப்பட்டார்கள் - இவ்விடம் தற்பொழுது அயோத்தியாவில் உள்ள பைசாபாத் சிறையில் உள்ளது.
இன்று இந்திய நாடு பல சிக்கல்களை எதிர் கொண்டு வருகிறது - விலைவாசி உயர்வு, வேலையின்மை, பொருளாதார நெருக்கடி, அப்பட்டமான பொருளாதார சமத்துவமின்மை மற்றும் கொடூரமான வறுமை ஆகிய சவால்களில் அவசர கவனம் செலுத்தி, இந்திய சமூ கத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டியுள்ளது. நிஜ வாழ்க்கை பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவ னத்தை திருப்புவதற்கு வகுப்புவாத துருவப்படுத்தல் திட்டமிட்டு முயற்சிகள் நடைபெறுகின்றன. இச்சவால் களை எதிர்கொள்வதற்கு ஒற்றுமை மட்டுமே காலத்தின் தேவையாகும். இந்திய மக்களிடம் ஒற்று மையைச் சீர்குலைத்துக் கொண்டு இந்திய நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க ஒரு தேசபக்தரால் சிந்திக்க இயலாது. வளர்ச்சிக்கு பதிலாக தப்பெண் ணங்களை விதைப்பது பேரழிவை நோக்கி இட்டுச் செல்லும். பிரிவினை சக்திகளை எதிர்கொள்வதிலும், நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாப்பதிலும் திறம்பெற்ற இந்தியத் தொழிலாளி வர்க்கம், இச்சவால்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே, இந்த சவால் நிறைந்த காலத்தில் இந்திய சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதும், இந்திய நாட்டின் ஒற்றுமையை பாதுகாப்பதும் இந்திய தொழி லாளி வர்க்கத்தின் கடமையாகவும் பொறுப்பாகவும் மாறியுள்ளது.
தமிழில்: முத்துக்குமார், சென்னை