articles

img

தொழிலாளர்களுக்காகவும் மக்களுக்காகவும் கரமுயர்த்திய களப் போராளி

  தமிழகத்தின் தலைநககர் சென்னை யின் வளர்ச்சியில் பிற மாவட்டங்களி லிருந்து வந்து குடியேறியவர்களுக்கும் முக்கியப் பங்குண்டு. அதே போல் இயக்கத் தின் வளர்ச்சியிலும் வெளி மாவட்டங்களி லிருந்து வேலைக்கென வந்து குடியேறிய வர்களுக்குப் பங்குண்டு. அவ்வாறு சென்னைக்கு வந்து தொழிற்சாலைகளில் வேலைக்குச் சேர்ந்து, தொழிற்சங்கங்களில் உறுப்பினராகி, போராட்டங்களில் பங்கேற்றுப் புடம் போடப்பட்டவர்களாகக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து இப்போ தும் ஈடுபாட்டுடன் இயக்கப் பணியாற்றி வரும் தோழர்களில் ஒருவர்தான் சீனிவாசன். புதுக்கோட்டை நகரில் 1939ல் பிறந்தவர் சீனிவாசன். இவருடைய  தந்தை அந்நகரின் அரசுப் பள்ளி ஆசிரியர். பள்ளியிறுதி வகுப்பு  வரையில் புதுக்கோட்டையில் பயின்றார். பின்னர் வேலை தேடி சென்னைக்கு வந்தவர் 1964ல் பெருங்களத்தூரில் இருந்த ஸ்டாண் டர்டு மோட்டார் கம்பெனியில் இன்ஜின் அசெம்பிள் பிரிவில் ஒரு தொழிலாளியாகச் சேர்ந்தார். அப்போது அந்த நிறுவனத்தில் சுமார் 4,000 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். ஏஐடியுசி தலைவர்களில் ஒருவரான தோழர் கே.டி.கே. தங்கமணி ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் தொழிலாளர் சங்கத்தின் தலை வராக இருந்தார். அவரையடுத்து வழக்கறி ஞர் ராமசாமி அச்சங்கத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். சங்கத்தில் முனைப் புடன் செயல்பட்ட தோழர் சீனிவாசன் அதன் நிர்வாகக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

1969ஆம் ஆண்டு தொழிற்சங்கம் 20 சதவீத போனஸ் கோரிக்கையை முன் வைத் தது. கோரிக்கையை வலியுறுத்தி சங்கத் தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆனால், நிர்வாகம் 5 சதவீத போனஸ் மட்டுமே வழங்கியது. அதை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட இயக்கங்களிலும் தோழர் சீனிவாசன் பங்கேற்றார். 1970களில் சென்னையும் புறநகர்ப் பகுதி களும் தொழிலாளர்களின் தகிக்கும் போராட்டக் களங்களாகத் திகழ்ந்தன. ஊதிய உயர்வு, போனஸ், தொழிலாளர் உரிமைகள் உள்ளிட்ட பல நியாயமான கோரிக்கைகளுக்காகப் பல தொழிற்சாலை களில் போராட்டங்கள் எழுச்சியுடன் நடை பெற்றன. தோழர்கள் வி.பி. சிந்தன், குசேலர் போன்ற தலைவர்கள் இத்தகைய போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி வழிகாட்டினர். அந்தப் போராட்டங்கள் ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் தொழிலாளர் களிடையேயும் தாக்கம் செலுத்தின. அந்த நிறுவனத்தில் ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என்ற முறையில் நிர்வாகி களைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்த லில் ஒரு கட்டத்தில் தோழர் ராமசாமி தலை வராகவும், தோழர் ஜனார்த்தனம் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப் பினராக இயங்கி வந்த தோழர் ஜனார்த்தனம் பிற்காலத்தில் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினராகச் செயல்பட்டி ருக்கிறார். (அவரைப் பற்றிய கட்டுரை ‘களப் பணியில் கம்யூனிஸ்டுகள்’ தொகுப்பின் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ளது.) 1989ஆம் ஆண்டு நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாகக் கூறிய ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் நிர்வாகம் 1,200 தொழிலாளர் களை ஆட்குறைப்புச் செய்யப் போவதாக அறிவித்தது. அதை எதிர்த்து ஜனார்த்தனம் தலைமையில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களைப் பணிய வைக்க நிர்வாகம் ஆலையை மூடியது. தோழர் வி.பி. சிந்தன் இதே போன்ற பிரச்சினை ஏற்பட்ட வேறொரு தொழிற்சாலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தை எடுத்துக்காட்ட, நிர்வாகம் உடன்பாட்டிற்கு வந்தது. தொழிற்சாலை திறக்கப்பட்டது.  ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே நிர்வாகம் ஆலையை மீண்டும் மூடியது. அதை எதிர்த்துத் தொடர் போராட்டங்கள் நடந்தன. தொழிலாளர்கள் ஆலையை திறக்க வேண்டுமென்று மறியல் போராட்டம் நடத்தியபோது காவல்துறை யினர் நடத்திய தாக்குதலில் சீனிவாசன் உள்ளிட்ட பலர் காயமடைந்தார்கள். அரசு உறுதியாகத் தலையிடாத நிலையில் 2006ஆம் ஆண்டு நிர்வாகம் நிரந்தரமாக நிறுவனத்தை மூடியது. நிர்வாகம் தொழிலாளர்களுக்கு இழப்பீடு மட்டும் வழங்கியது.

சீனிவாசன் வேலை தேடி சென்னைக்கு வந்தபோது அவருடைய மூத்த சகோதரர் நாகராஜன் சென்னையில் இருந்தார். அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தார். அவர்தான் சீனிவாசனுக்கு அந்த நிறுவனத்தில் வேலை வாங்கிக் கொடுத்தார். தோழர் நாகராஜனின் தூண்டுதலால் சீனிவாசனும் நிறுவனத்தின் தொழிலாளர்களிடையே இயங்கி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை யில் 1966ஆம் ஆண்டு உறுப்பினரானார். அந்த நிறுவனத்தில் கட்சியின் 3 கிளைகள் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆலை மூடப்பட்ட பிறகு தோழர் சீனி வாசன் கட்சியின் பல்லாவரம் கிளையில் உறுப்பினராக இணைந்து செயல்படலா னார். கட்சிக் கிளையின் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டு பல ஆண்டுகள் அப் பொறுப்பில் இருந்தார்.  கிண்டி-தாம்பரம் இடைக்குழு உறுப்பினராகவும் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வந்தார். பிறகு பல்லாவரம் இடைக்குழு உருவான போது அதிலும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். ஆலைத் தொழிலாளியாக அந்நிறு வனத்தில் நடந்த எல்லா போராட்டங்களிலும் தோழர் சீனிவாசன் கலந்து கொண்டுள்ளார். பல்லாவரம் பகுதியில் கட்சிப் பணியாற்றத் தொடங்கிய பிறகு கட்சியின் சார்பாக மாவட்ட அளவிலும் பல்லாவரம் நகர்மன்ற அளவிலும் மக்களின் பல்வேறு பிரச்சினை களுக்காக நடைபெற்ற ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற அனைத்துப் போராட்டங் களிலும் தவறாது கலந்துகொண்டார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அறைகூவலுக்கிணங்க நடைபெற்ற மறியலில் பங்கேற்று 15 நாட்கள் சிறையில் இருந்தார்.

கட்சி முடிவிற்கிணங்க தோழர் சீனி வாசன் தீக்கதிர் விநியோக பொறுப்பை ஏற்று பல்லாவரம், குரோம்பேட்டை மற்றும் பல பகுதிகளில் தீக்கதிர் விநியோகம் செய்து வந்தார். சைக்கிளிலேயே சிந்தாதிரிப் பேட்டை சென்றும், பிறகு சைதாப்பேட்டைக் கும் சென்றும் தீக்கதிர் கட்டை எடுத்து வந்து விநியோகம் செய்தார். ஒருநாள் காலையில் தீக்கதிர் விநியோகத்திற்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு தலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கே தோழரின் தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குறுகிய கால ஓய்விற்குப் பிறகு, இவரது உடல்நலம் கருதி மற்ற தோழர்கள் வேண்டாம் என்று சொன்னதை ஏற்காமல், தொடர்ந்து தீக்கதிர் விநியோகம் செய்து வந்தார். கிட்டத்தட்ட 40 ஆண்டு காலம் தீக்கதிர் விநியோகப் பொறுப்பை நிறைவேற்றி வந்தார். தோழர் சீனிவாசன் இடைக்குழு உறுப் பினராகப் பணியாற்றியதோடு, பல்லாவரம் நகர்மன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வந்த குடியிருப்போர் நலச் சங்கத்தின் அங்கமாகவும் பொறுப்பேற்றுச் செயல்பட்டார். நகர்மன்ற கூடுதல் இயக்கு நராகச் செயல்பட்டு வந்த டி.எஸ். சிவசாமி, பல்லாவரம் பகுதியைச் சார்ந்த சந்தானம் ஆகியோர் குடியிருப்போர் நலச்சங்கத்தில் முன்னணி பாத்திரம் வகித்தனர். இச்சங் கத்தின் சார்பில் பல்லாவரம்-துரைப் பாக்கம் மேம்பாலம், எம்.ஐ.டி மேம்பாலம், பாதாளச் சாக்கடை போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி இயக்கங்கள் நடத்தப் பட்டன. அந்த இயக்கங்களில் தோழர் சீனி வாசன் முனைப்போடு கலந்துகொண்டார். தமிழகத்தில் பல நகரங்களில் இத்தகைய குடியிருப்போர் நலச்சங்கங்கள் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளுக்காக இயக்கங் கள் நடத்தி வருவதும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சித் தோழர்களும் இத்தகைய சங்கங்களில் இணைந்து செயல்பட்டு வருவதும் கவனத்திற்குரியது.

தோழர் சீனிவாசனின் இணையர் ராதா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் உறுப்பினராக இருந்து சங்கப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் காலமாகிவிட்டார். கட்சி ஆதர வாளராகத் தனது இணையர் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டார் என்றும், அவரது அந்தத் துணை இல்லையென்றால் தன்னால் கட்சிப் பணியாற்றியிருக்க முடி யாமல் போயிருக்கும் என்றும் தோழர் சீனிவாசன் நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார். சீனிவாசன் - ராதா தம்பதிகளுக்கு ஜெய லட்சுமி, ரமேஷ் என இரண்டு பிள்ளைகள். மகள் ஒருநாள் சீனிவாசனிடம் தான் ஒருவரைக் காதலிப்பதாகவும், அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக வும் தெரிவித்தார். தயக்கம் ஏதுமின்றி மகளுக்குக்  காதல் திருமணத்தை உற்சாக மாகச் செய்து வைத்தார் சீனிவாசன். அது சாதி மறுப்புத்திருமணமும் கூட. இவரது மகன் ரமேஷ் இளம் வயதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் கிளை நிர்வாகியாகச் செயல்பட்டிருக்கிறார். பல்லாவரத்தில் இயங்கிய முசாபர் அகமது கலைக்குழுவில் இணைந்து வீதி நாடகங் களில் சில ஆண்டுகள் நடித்திருக்கிறார். தோழர் சீனிவாசன் கட்சி உறுப்பினராக, கிளைச் செயலாளராக, இடைக்குழு உறுப்பினராக அர்ப்பணிப்போடு செயல் பட்டவர்.  உடல்நலம் பாதிப்பு, வயது மூப்பு என்ற காரணங்கள் ஏற்படுகின்ற வரையில் தீக்கதிர் விநியோகப் பொறுப்பைத் தொடர்ந்து மேற்கொண்டவர். தற்போது தீக்கதிரின் 5ஆவது பதிப்பு நெல்லையில் தொடங்கப்பட்டுள்ளது. பதிப்புகளில் பல பொறுப்புகளில் பணி யாற்றக் கூடிய தோழர்கள் மட்டுமல்ல, சீனிவாசன் போன்று தமிழகத்தில் நகரங்களி லும், கிராமங்களிலும் தீக்கதிரை விநியோ கம் செய்யும் தோழர்களுக்கும் தீக்கதிர் வளர்ச்சியில் முக்கியமான பங்குண்டு என்று சொல்லத் தேவையில்லை. 1966 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் சேர்ந்து சுமார் 60 ஆண்டு காலமாக தோழர் சீனிவாசன் அர்ப்பணிப் போடு செயல்பட்டு வருகிறார். சீனிவாசன் போன்ற தோழர்கள் கிளை அளவிலும், இடைக்குழு அளவிலும் கட்டமைத்த அடித்தளத்தின் மீது உருவாக்கப்பட்டது தான் இன்றைய கட்சி. இப்போதும் தனது 84ஆவது வயதிலும் கட்சி உறுப்பினராக இருந்துகொண்டு தன்னால் இயன்ற பணி களை செய்து வருகிறார். தோழர் சீனிவாசன் அயராது ஆற்றி வரும் களப்பணி பாராட்டுக் குரியது, பின்பற்றத்தக்கது.