articles

இந்தியாவின் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்!

இந்திய ஜனநாயக கட்டமைப்பின் கடைசி கோட்டையான, சிவில் சமூகம் குறி வைக்கப்படுகிறது. அதன் இனவாத எதிர்ப்பு மற்றும் ஜனநாயக வெளி, அரசின் மிக தீவிரமான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் வகுப்புவாதத்திற்கு எதிராக தீவிரமாக போராடி வருகின்ற அமைப்புகள் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் அடக்கு முறைக்கு உள்ளாகி இருக்கின்றன என்பதை ஜெர்மனியில் உள்ள ஹெடல்பெர்க் பல்கலைக் கழகத்தின் தெற்காசிய நாடுகள் குறித்த ஆய்வு அறிக்கை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அரசியல் அமைப்பு கொள்கைகளால் வழிநடத்தப்படும் ஒரு சுதந்திரமான சிவில் சமூகம் ஜனநாயகத்தின் சாராம்சமாக விளங்குகிறது. மிகவும் தனித்துவமான பன்மைத்துவம் நிறைந்த ஒரு துடிப்பான சிவில் சமூகம்இந்தியாவின் வலிமையாகும். ஆனாலும் அரசியல் அமைப்பு அளித்துள்ள  உரிமைகள் நசுக்கப்படுகின்றன. அதன் மீது நம்பிக்கை கொண்டுள்ள எந்த ஒரு ஜனநாயக அமைப்பும் இதற்கு எதிராக போராட முன் வர வேண்டும். (அனைத்து மதங்களுக்கும் சமமான உரிமை) மதச்சார்பின்மை மற்றும் பொரு ளாதார வளர்ச்சியுடன் கூடிய மக்களின் நல்வாழ்வுக்காக போராடும் ஒரு அமைப்பின் கீழ் அது ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

அதிகரிக்கும் அடக்குமுறை! உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடை மூலம்  இயங்கும் சிறிய மற்றும் பெரிய 15 நிறு வனங்கள் மீது அரசு கொடுக்கும் அடக்குமுறை களின் வரம்பை நாங்கள் ஆராய்ந்தோம். ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், சமத்து வத்திற்கான ஆய்வு மையம், நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள், வழக்கறிஞர்களின் கூட்டு இயக்கம், சமூக அக்கறை மேம்படுத்தும் மையம், நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத் திற்காக செயல்படுதல் போன்ற நிறுவனங்கள் அரசின் அடக்குமுறையை சந்தித்துள்ளன. சிறுபான்மையினர், தலித் மற்றும் ஆதி வாசிகள் பழங்குடியினரின் உரிமைகளுக்காக போராடும் இயக்கங்களை  எங்கள் ஆய்வகத் தின் கருத்துக்களின் அடிப்படையில்  நடுநிலை யானவை, மிதமானவை அல்லது வலிமை யானவை என வகைப்படுத்த முடியும்.

மிதமான தாக்குதலுக்குள்ளான நிறு வனங்கள் கிட்டத்தட்ட இன்றைக்கு முடங்கிப் போய் உள்ளன. அமெரிக்க நிதி உதவியுடன் இயங்கும் கொள்கை ஆராய்ச்சி மையமும் இன்னொரு அரசு சாரா அமைப்பும் வகுப்பு வாதத்திற்கு எதிராக களமாடுபவை. ஒரு சில அமைப்புகள் வகுப்புவாத எதிர்ப்பு விஷயத்தில் நடுநிலை வகிப்பவை .குறிப்பாக மிதமான எதிர்ப்பை காட்டும் கொள்கை ஆராய்ச்சி மையம் ( Centre for Policy Research) கூட அரசின் தாக்குதலுக்கு ஆளாகின்றன.அந்த அளவிற்கு சிவில் சமூகத்தின் உரிமைகள் இன்றைக்கு கேள்விக்குறியாகியுள்ளன.

அதானியின் நலன்களுக்காக...
பிரதமருக்கான பொருளாதார ஆலோச னைக் குழுவின் தற்போதைய தலைவரும் பிரதமர் தலைமையிலான நிதி  ஆயோக்கின் துணைத் தலைவரும் இந்த மையத்தை சார்ந்தவர்கள். இந்த இயக்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொழில் அதிபர் கௌதம் அதானியின் சுரங்க நலன்களின் மீது தாக்கம் செலுத்தும் ஆதிவாசிகளின் உரிமைப் போராட்டங் களுடன் நேரடியான தொடர்புடையது .

ஒப்பீட்டளவில் குறைவாக அடக்குமுறை ஏவப்படும் அமைப்புகள் மனித உரிமை போரா ட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. வகுப்புவாத எதிர்ப்பு என்று வரும்போது தீவிரமாக நிற்பதில்லை.தலித் உரிமைகளுக்காக போராடும் நவசர்ஜன் மற்றும் குழந்தைகளின் உரிமைகளுக்காக போராடும் மற்றொரு அமைப்பும் அரசின் தீவிரமான தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை.

அரசின் தீவிர அடக்கு முறையை எதிர்கொண்ட ஒரு சில நிறுவனங்கள் குறிப்பாக க்ரீன் பீஸ்( Greenpeace) தற்போது தன்னுடைய தீவிரத்தை குறைத்துக் கொண்டுள்ளது. அடிப்படை உரிமைகளை முன்வைத்து மக்களை திரட்டும் பணியில் இருந்து விலகி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆதிவாசிகள் முன்னேற்றம் போன்ற மந்தமான இயக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பண மோசடி குற்றச்சாட்டும் சிறைத் தண்டனை அச்சுறுத்தலும்
பண மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறை  தண்டனை வழங்குவது என்பது அரசு வழக்கமாக பயன்படுத்தும் அடக்குமுறை கருவியாகும். அரசு சாரா அமைப்புகளை பெரிதும் பாதிக்கின்ற வகையில் அரசு பயன்படுத்தும் மற்றும் ஒரு கருவி சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்(UAPA). மேலும் பண மோசடி தடுப்புச் சட்டம் 2002-உம்,2019 கொண்டு வரப்பட்ட நிதி சட்ட திருத்தமும்  இந்த நிறுவனங்களை அடக்கி ,ஒடுக்கிட உதவியது.அதற்கு ஏற்ற வகையில் குற்றங்களின் வரையறைகள் விரிவாக்கப்பட்டன.

தற்போது அமலாக்க இயக்குனரகம்( ED) மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களும் அரசு சாரா நிறுவனங்களும் வேட்டையாடப்படுகின்றனர். அவசர நிலை காலத்தில் 1976 இல் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் ஐக்கிய முன்னணி ஆட்சி காலத்தில்( 2010) பாரதிய ஜனதா அரசின் ஆட்சியில் (2020) மேலும் கடுமையாக்கப்பட்டது.

இந்த இரண்டு சட்டங்களையும் பயன்படுத்தி சுமார் 18,000 அரசு சாரா நிறுவனங்கள் மீது வெளிநாட்டு நிதியை அணுகும் முறை தொடர்பான வழக்குகள் 2015 முதல் 2022 க்கும் இடைப்பட்ட காலத்தில் பாஜக அரசால் தொடுக்கப்பட்டன. சர்வதேச அளவில் புகழ்பெற்ற 80 நன்கொடையாளர்கள் மனித உரிமை தொடர்பான போராட்டங்களுக்கு நிதி  உதவி அளித்ததற்காக தொடர்ந்து அச்சுறுத்தப் படுகிறார்கள்.தீவிரமாக கண்காணிக்கப்படு கிறார்கள். இந்த வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்கு முறை (FCRA) சட்டத்தின் கீழ் அத்தகைய என்ஜிஓ அமைப்புகளின் பணியாளர்கள் மீது  (மரணத்தை  ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு) கடும் விசாரணை மேற்கொள்ள மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு ஆம்னஸ்டி இந்தியா மற்றும் அதன் தலைவர் ஆக்கர் பட்டேலுக்கு  எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த புலன் விசாரணை செயல்முறை ஒரு கடும் தண்டனை. கடும் விளைவை ஏற்படுத்தக் கூடியது .

நிதியுதவி தடுத்து நிறுத்தம்
வகுப்புவாதத்திற்கு எதிராக போராடும் அரசு சாரா அமைப்புக்கு அளிக்கப்படும் நிதி உதவிகளும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வருமானவரிச் சட்டங்களின் பிரிவு 12Aமற்றும் 80 G முறையே அரசு சாரா நிறுவனங்களுக்கும் நன்கொடையாளர்களுக்கும் விதிவிலக்கு அளிக்கின்றது. 2020இல் இந்த பிரிவுகளுக்கு கொண்டுவரப்பட்ட திருத்தங்களின் படி இதன் கீழ் வழங்கப்பட்டுள்ள சான்றிதழ்களை ஐந்து  வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.

அவர்களுடைய நிரந்தர வருமான கணக்கு எண் மற்றும் நன்கொடை ரசீதுகள் நிதி அமைச்ச கத்திடம் அளிக்க வேண்டும். வகுப்புவாதத்தை யும் கூட்டுக் களவாணி முதலாளித்துவத்தையும் எதிர்த்து போராட விரும்பும் உள்நாட்டு நன்கொடையாளர்களை மிரட்ட இந்த விதிகள் அரசுக்கு பயன்படுகின்றன. அரசு சாரா நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க எந்த ஒரு காரணமும் இல்லாத நிலை யில் சிபிஐ அல்லது வருமான வரித்துறை மூலம் வழக்குகளை தொடுக்கவும் அதிகப்படுத்தவும் தரவுகளை சேகரிக்கும் ஒரு வழியாக வருமான வரி ஆய்வுகளை அரசு பயன்படுத்துகிறது.

எதிர்க்கட்சிகளின் உறுதியான போராட்டம்!
இந்திய ஜனநாயகத்திற்கு எஞ்சி நிற்கும் கடைசி கோட்டை, நம்பிக்கை அதனுடைய சிவில் சமூகம் தான். அது இன்றைக்கு கடும்  அச்சுறுத்தலில் உள்ளது. 2023 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் தலைவர்கள் சீதா ராமையா (கர்நாடகா) மற்றும் ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா) இருவரும் பாஜகவிற்கு எதி ராக வகுப்புவாத எதிர்ப்பு என்ற உறுதியான அடித்தளத்தில் சிவில் சமூகத்தை ஒன்றி ணைத்தார்கள். பொதுநல உறுதிமொழிவு களுடன் தெளிவான மதச்சார்பற்ற நிலையை  எடுத்தனர். வலுவான பிராந்திய தலைவர்களை தேர்ந்தெடுப்பது இந்தியா கூட்டணிக்கு முக்கிய மானது எதிர்க்கட்சியான அந்த அணி தனி கட்சியாக போராட வேண்டிய அவசியம் இல்லை. வகுப்புவாத எதிர்ப்பு மற்றும் முற்போக்கான கொள்கைகளை உடைய சிவில் சமூகத்தினரை ஒன்று திரட்டி ஜனநாயகத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் இறங்க வேண்டும்.

ராகுல் முகர்ஜி & ஆதித்யா ஸ்ரீவத்சவா
தி ஹிந்து 5/1/24.
 தமிழில்: கடலூர் சுகுமாரன்