சாவ் பாவ்லோ, நவ.21- கொலம்பியாவில் குஸ்தவோ பெட்ரோ மற்றும் பிரேசிலில் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா ஆகி யோர் ஜனாதிபதித் தேர்தல்களில் பெற்ற வெற்றி லத்தீன் அமெரிக்காவின் புவி அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது என்று வெனிசுலா வின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கூறியுள்ளார். சாவோ பாவ்லோ கழகத்தின் செயற் குழுவை அமைக்கும் கூட்டத்தில் பேசு கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட் டார். இந்த இரண்டு நாடுகளிலும் இடது சாரி ஜனாதிபதிகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக அமெரிக்கா உள்ளிட்ட அந்நிய சக்திகளுடன் கைகோர்த்து, வலதுசாரிகள் இயங்கினர். ஏராளமான பணம் இறக்கி விடப்பட்டும் இந்த இரண்டு இடதுசாரித் தலைவர்களும் வெற்றி பெற்றனர். கொலம்பியாவில் முதன்முறையாக ஒரு இடதுசாரித் தலைவர் ஜனாதிபதியாகப் பொறுப் பேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க தாகும். லத்தீன் - அமெரிக்காவில் எழுந்துள்ள இந்தப் புதிய சூழல், புதிய சுதந்திரத்தை உருவாக்க, புதிய ஜனநாயகங்களை உருவாக்க, நவீன தாராளமய மாதிரியை முடிவுக்குக் கொண்டு வர, மக்களுக்குக் கல்வி, சுகா தாரம், வேலை, வாழ்க்கை மற்றும் உணவு ஆகியவற்றிற்கான உரிமை யைத் தர புதிய வாய்ப்பாக அமையும் என்று நிகோலஸ் மதுரோ சுட்டிக்காட்டி யுள்ளார். சாவ் பாவ்லோ கழகமும் தென் அமெரிக்க நாடுகளின் ஒற்றுமை யைக் கட்டுவதற்காகவே உருவாக்கப் பட்டுள்ளது. அக்கழகத்தின் செயற்குழு வை அமைக்கும் கூட்டத்தையும் வாழ்த்திப் பேசியிருக்கிறார்.
அமேசான் காடுகளை பாதுகாக்க மாநாடு
அண்மையில் நடைபெற்ற 27-ஆவது காலநிலை மாற்ற மாநாட்டில் அமேசான் காடுகள் அமைந்துள்ள நாடுகளின் அவசர உச்சிமாநாடு ஒன்றைக் கூட்ட வேண்டும் என்று பிரேசில் கோரியிருந்தது. இதைச் சுட்டிக்காட்டிய மதுரோ, இத்தகைய உச்சி மாநாடு நடைபெற வேண்டிய அவ சியம் உள்ளது. ஆனால், இத்தகைய மாநாடு, அமேசான் காடுகளைப் பாது காக்கவே கூட்டப்பட வேண்டும். இழந்த தை மீட்கவும், காடுகளை மீண்டும் அமைக்கவும் மற்றும் புதிதாக உரு வாக்கவும் இந்தக் கூட்டம் ஆலோசிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அனைத்து நாடுகளும் காலநிலை மாற்றத்தினை மிகப்பெரிய அபாய மாகப் பார்த்து வரும் வேளையில், இது முன்னேற்றத்திற்கான திட்டத்தில் இடம் பெற வேண்டும் என்று கூறிய மதுரோ, நாம் அதனால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறோம். அண்மையில் எப்போ தும் இல்லாத அளவில் 45 நாடுகளில் தொடர்ந்து கடுமையான மழை பெய்தது. வடக்கில் உள்ள கடற்கரைப் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆண்டிஸ் மலைத்தொடரின் ஒரு பகுதி யிலும் அழிவு ஏற்பட்டது என்று கால நிலை மாற்றம் பற்றி எச்சரிக்கிறார்.
சொந்தக் காலில் முன்னேற்றம்
லத்தீன் - அமெரிக்கா மற்றும் கரீபியப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகளில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி யை வெனிசுலா அடைந்துள்ளது. அமெரிக்காவால் போடப்பட்ட பொருளா தாரத் தடைகளை மீறி இது நடந்திருக் கிறது. இதைச் சுட்டிக்காட்டியுள்ள மதுரோ, ‘‘எங்களது பணிகள், முயற்சி கள் மற்றும் வர்த்தக உத்திகள்தான் இதைச் சாத்தியமாக்கியது. 2017-ஆம் ஆண்டு வன்முறைப் போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டனர். ஆகஸ்டு 4, 2018 அன்று என்னைக் கொலை செய்யுமாறு ஆணையிட்டார்கள். 2019-இல் போட்டி அரசை அமைத்தனர். 2020-இல் 700க்கும் மேற்பட்ட தடைகளைப் போட்டனர். இவையனைத்தையும் மீறி நாங்கள் முன்னேறியிருக்கிறோம்’’ என்றார். 2022-ஆம் ஆண்டில் 6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை வெனிசுலா அடையும் என்று சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) கணித்துள்ளது. 2023-ஆம் ஆண்டில் இந்த வளர்ச்சி 12 விழுக்காடாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. நடப்பாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 17.4 விழுக்கா டாக இருந்தது என்று வெனிசுலாவின் மத்திய வங்கி கூறியுள்ளது. 2022-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 18.7 விழுக்காடாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது.