world

img

நிக்கோலஸ் மதுரோ ஆட்சியை கலைக்கும் மற்றொரு முயற்சியும் தோல்வி

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அரசை திரும்ப பெற இயலாது என அந்நாட்டு தேசிய தேர்தல் கவுன்சில் தெரிவித்துள்ளது. 

வெனிசுலா பிராந்திய தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சிக்கு 20 கவர்னர் பதவிகளிலும், எதிர்க்கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆனால் மதுரோவின் எதிர்ப்பாளர்கள் வெற்றியை ஏற்றுக் கொள்ள தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தனர். மதுரோ அரசை கவிழ்க்க பல்வேறு சூழ்ச்சிகளும் நடைபெற்றது. 

வெனிசுலா அரசியல் அமைப்பு சட்டம், குறைந்த பட்சம் பாதி பதவிக்காலத்தை முடித்த அதிகாரத்தில் இருப்பவர்களை வாக்கெடுப்பு மூலம் பதவியில் இருந்து திரும்ப பெற அனுமதிக்கிறது.  இந்நிலையில் மதுரோ தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் மூன்று ஆண்டுகளை இந்த ஆண்டு துவக்கத்தில் நிறைவு செய்தார். 
இதையடுத்து மதுரோ அரசை திரும்ப அழைக்க வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் வற்புறுத்தினர். எனவே தேசிய தேர்தல் கவுன்சில் 12 மணி நேரம் பொது வாக்கெடுப்புக்கு அழைப்பு வித்தது. அதில் குறைந்த பட்சம் 41 லட்சம்  வாக்குகளை பெற வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் மதுரோ எதிர்ப்பாளர்கள் வெறும் 42,421 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தனர்.
 இதனால் மதுரோ அரசை திரும்ப அழைக்க முடியாது என அந்நாட்டு தேசிய தேர்தல் கவுன்சில் தெரிவித்துள்ளது.