ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற விரைவு ரயில் மேற்கு வங்க மாநிலத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற கவுஹாத்தி – பிகானர் விரைவு ரயில் மேற்கு வங்கத்தின் தோமோஹானி அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் இரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பயணிகள் மொய்னாகுரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஜல்பைகுரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்தன. மேலும் உயிரிழப்புகள் குறித்த தகவல் ஏதும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இந்த விபத்தில் இன்னும் சில பயணிகள் சிக்கி இருப்பதாக உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து இரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது.
இந்த சம்பவம் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் விபத்து நடந்த இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.