டாக்கா,அக்.31- அத்தியாவசியப் பொருட்க ளின் விலைவாசி உயர்வு மற்றும் பண வீக்கத்திற்கு ஏற்ற வகையில் அடிப்படை சம்பள உயர்வு வழங்கப்படாததால் வங்கதேச நாட்டில் ஆயிரக்கணக்கான ஆடை உற்பத்தியாளர்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.
உலகின் மிகப் பெரிய சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் பல முன்னணி பிராண்டுகளுக்கான ஆடைகளைத் தயாரிக்கும் சுமார் 3,500 ஆடைத் தொழிற்சாலைகள் வங்கதேசத்தில் உள்ளன. இந்நிறுவனங்கள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு மாத ஊதிய மாக வெறும் 8,300 டாக்கா மட்டுமே வழங்கி வருகின்றன.இதனால் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெற்காசியா நாடுகளில் இந்தியாவை விட அதிகளவு தனி நபர் வருமானம் கொண்ட நாடாக உள்ள வங்கதேசத்தின் கடந்த இருபது ஆண்டுகால வளச்சிக்கு ஆடை உற்பத்தித் துறை பெரும் பங்களிப்பு செய்துள்ளது.ஆனால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு அத்தியாவசிய உண வுப்பொருட்களின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.அதற்கு ஏற்ற வகையில் தொழி லாளர்களுக்கான ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.இந்நிலை யில் தான் செவ்வாய்க்கிழமை யன்று ஆயிரக்கணக்கான ஆடை உற்பத்தி தொழிலாளர்கள் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்க ளிடம் மாத ஊதியமாக 23,000 டாக்காக்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து பெரும் போராட்டத்தில் ஈடு பட்டனர்.