world

img

வங்கதேசத்தில் பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 10 பேர் பலி  

வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.  

வங்கதேசத்தின் பாரிசாலில் உள்ள வாசிர்பூர் உபசிலா பகுதியில் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20 பேர் பலத்த காயங்களுடன் ஷேர் -இ-பங்களா மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக வாசிர்பூர் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

விபத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என வங்காளதேச ஊடகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் யார் என அடையாளம் காணப்படவில்லை.

தொடர்ந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

;