- உக்ரைனுக்கு ஆதரவாக போரிட வந்த 63 நாடுகளைச் சேர்ந்த வெளி நாட்டு வீரர்களின் எண்ணிக்கை 6824 எனவும் போலந்து-1717/ அமெரிக் கா, கனடா, ருமேனியா-1500/பிரிட் டன்-300/சிரியா இஸ்லாமிய பயங்கர வாதிகள்-193 ஆகியோர் இதில் அடங்குவர் எனவும் இவர்களில் 1035 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வும் ரஷ்யா அறிவித்துள்ளது.
- உலகம் முழுவதும் தடை செய்யப் பட்ட MON50/ MON90 எனப்படும் கண்ணி வெடிகளை உக்ரைன் போரில் பயன்படுத்துகிறது என ரஷ்யா புகைப்படங்களுடன் குற்றம் சாட்டியுள்ளது.
- ரஷ்யா இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளது என அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது; ஆனால் இத னை விசாரிக்க தகுதி படைத்த சர்வ தேச நீதி மன்றத்தில் அமெரிக்கா உறுப் பினராக கூட இல்லை என அமெ ரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் இல ஹான் ஓமர் அறிவித்துள்ளார். இந்த நீதிமன்றம் இராக்/லிபியாவில் அமெ ரிக்கப் படைகளின் போர்க் குற்றங் களை விசாரிக்க முயன்றதால் அமெரிக்கா வெளியேறியது.
- ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் குறி த்த மக்களின் ஆதரவு பிரிட்டனில் நாளுக்கு நாள் குறைந்துவருகிறது என்பதை ரெட்ஃபீல்டு வில்டன் எனும் அமைப்பு நடத்திய கருத்து கணிப் பில் வெளிப்பட்டுள்ளது. போரின் தொடக்கத்தில் 50% ஆக இருந்த இந்த ஆதரவு இப்பொழுது 36% ஆக சரிந்துவிட்டது. உயரும் விலை வாசி மற்றும் எண்ணெய் தட்டுப்பா டுதான் மக்களின் மனமாற்றத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
- ஜெர்மனி பற்றி உக்ரைன் முன்வை க்கும் தவறான பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும் என முன் னாள் ஜெர்மனி வெளியுறவு அதிகாரி சிக்மர் கேப்ரியல் கூரியுள்ளார்.
- இன்னும் 10 ஆண்டுகள் ஆனாலும் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் போ ரிடும் எனவும் டான்பாஸ் பகுதியை விட்டுத்தரும் பேச்சுக்கே இடமில்லை எனவும் ஜெலன்ஸ்கி அறிவித்துள் ளார்.
- போரினால் பாதிக்கப்பட்ட தனது பொருளாதாரத்தை சீர்படுத்த 50 பில்லியன் டாலர் உதவியை உக்ரைன் மேற்கத்திய நாடுகளிடம் கேட்டுள்ளது.
- பைடனின் வலதுகரமாக செயல் படும் கிரிஸ் கூன்ஸ் எனும் செனட்டர் ரஷ்யாவுக்கு எதிராக போரிட அமெ ரிக்க படைகளை உக்ரைனுக்கு அனு ப்ப வேண்டும் என வற்புறுத்தியுள் ளார். உலகின் எந்த பகுதியாக இருந்தாலும் தங்களுக்கு நாட்டாமை செய்யும் உரிமை உண்டு என அகங் காரமாக எண்ணும் அமெரிக்கத் தலைவர்கள் ஏராளமாக உள்ளனர்.
- உக்ரைனில் ரஷ்யா இனப் படு கொலையில் ஈடுபட்டுள்ளது என பைடன் கூறியதை அமெரிக்க உளவு நிறுவனங்கள் ஏற்கவில்லை. அதற் கான ஆதாரங்கள் இல்லை என கூறும் இந்த அமைப்புகள் பைடனின் உள றல்கள் தமக்கு சிக்கலை ஏற்படுத்து கின்றன எனவும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பத்திரிகையாளர்களுக்கு கூறியுள்ளனர்.
- மரியபோல் நகரில் ஒரு இரும்பு ஆலைக்குள் சுமார் 400 முதல் 500 உக்ரைன் படைகள் தஞ்சமடைந்துள் ளனர். மரியபோல் நகரில் இதுதான் ரஷ்ய படைகள் கைப்பற்ற வேண்டிய கடைசி இடம் என கூறப்படுகிறது. இவர்களை சரண் அடையுமாறும் உயிர் பாதுகாப்பு உண்டு எனவும் ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. இதற்கான அனுமதியை இவர்கள் உக்ரைன் ராணுவ தலைமைய கத்தில் கேட்ட பொழுது அது மறுக்கப் பட்டுவிட்டதாக ரஷ்யா இடைமறித்த ரேடியோ தகவல்கள் கூறுகின்றன.