world

உக்ரைன்- ரஷ்யா போர்

    கிஞ்சல் எனும் ஹைப்பர்சானிக் ஏவுகணையை உக்ரைன் போரில் முதல்முறையாக பயன்படுத்தி உக்ரைனின் மேற்கு பகுதியில் பூமிக்கு அடியில் இருந்த ஆயுதக் கிடங்கை ரஷ்யா அழித்துள்ளது. ஹைப்பர்சானிக் ஏவுகணை மணிக்கு 4000 முதல் 5000 கி.மீ. வேகத்தில் பயணிக்கக் கூடியது. எந்த ராடாரும் இதன் பயணத்தை கண்டுபிடிப்பது கடினம். அவ்வாறு கண்டுபிடித்தாலும் அதனை தடுக்கும் முன்பாக ஏவுகணை தன் இலக்கை தாக்கி அழித்துவிடும்.

    ரஷ்யாவின் முக்கிய படையின் தளபதி யூரி ராய் போர்க்களத்தில் கொல்லப்பட்டுள்ளார். இளவோசிக் எனும் இடத்தில் படைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த பொழுது “ஸ்னைப்பர்” 
எனும் 3 கி.மீ அப்பாலிருந்து சுடப்படும் துப்பாக்கி மூலம் உயிரிழந்துள்ளார். இது ரஷ்ய படைக்கு ஒரு பின்னடைவு!

    ரஷ்யாவை சீனா ஆதரிக்கக் கூடாது என அமெரிக்கா கூறுவது குறித்து லியூ ஷின் எனும் சீனா ஆய்வாளர் கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்:

    “என் எதிரியான உன் நண்பனை உதைக்க எனக்கு உதவுவாயா? அப்பொழுதுதான் பின்னர் உன்னை நான் கடுமையாக உதைக்க முடியும்” என்பது போல உள்ளது. அமெரிக்காவின் எதிர்ப்பு நடவடிக்கைகளை சீனா எப்படி மறக்க முடியும்?

    ஜெர்மனியின் முக்கிய வங்கியான டூட்சே வங்கி, ரஷ்யா மீது மேலும் வர்த்தகத் தடைகளை விதிக்க வேண்டாம் எனவும் அந்த தடைகள் ஐரோப்பிய ஒன்றியத்தையும் கடுமையாக பாதிக்கிறது எனவும் கூறியுள்ளது.

    அர்மீனியா மற்றும் பல்கேரியா தேசங்களில் நேட்டோவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. கிரீசில் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளின் விளைவாக உருவாகியுள்ள உரத் தட்டுப்பாட்டை கண்டித்தும் விலைவாசி உயர்வை கண்டித்தும் பேரணிகள் நடந்துள்ளன. இனி வரும் காலங்களில் இவை அதிகரிக்குமோ எனும் கவலை ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

    முன்னாள் செக் குடியரசின் ஜனாதிபதி தனக்கு அளிக்கப்பட்ட ரஷ்யாவின் “புஷ்கின் விருதை” திருப்பி தர இயலாது எனவும் தன்னை தூக்கு மேடைக்கு அனுப்பினாலும் அது நடக்காது எனவும் கூறியுள்ளார். விருதை திருப்பிக் கொடு எனும் கோரிக்கை மிகவும் கேலிக்கூத்தானது என 2003 முதல் 2013 வரை ஜனாதிபதியாக இருந்த அவர் சாடியுள்ளார்.

    உக்ரைனில் உயிரி ஆயுத சோதனைக் கூடங்கள் குறித்து மேலும் பல ஆதாரங்களை ரஷ்யா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 
கூட்டத்தில் முன்வைத்துள்ளது.

    ரஷ்யா மீதான வர்த்தக மற்றும் இதர தடைகள் உக்ரைன் போருடன் மட்டும் தொடர்புடையது அல்ல; அதற்கு அப்பாலும் அதன் தீய நோக்கம் உள்ளது; ரஷ்யா எனும் தேசத்தை அழிப்பதுதான் அடிப்படை நோக்கம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் குற்றம்சாட்டியுள்ளார்.

  •         வடகொரியா- 1950        n கியூபா-1961
  •         வியட்நாம்-1961        n பனாமா-1989
  •         இராக்- 1991 மற்றும் 2003    nயுகோஸ்லேவியா-1999
  •         ஆப்கானிஸ்தான்- 2001    n சிரியா- 2011

    இவையெல்லாம் நேட்டோ படைகளின் ஆக்கிரமிப்புப் போர்கள் எனும் பதாகையை பெல்கிரேடு நகரில் நடந்த கால்பந்து போட்டியில் ரசிகர்கள் ஏந்தி பரபரப்பை உருவாக்கினர்.

    உக்ரைன் போரில் நடப்பவற்றை உண்மையாக பதிவு செய்த  ஒடேசா நகரில் வசித்த யூரி டக்கசேவ் எனும் இளம் பத்திரிகையாளரை நாஜிக்கள் கடத்திச் சென்றுள்ளனர். அவர் எங்குள்ளார் என்பதை அவரது மனைவிக்குக் கூட தெரிவிக்க மறுக்கின்றனர்.