இந்திய மாணவர்கள் பலரை உக்ரைன் ராணுவம் கார்கிவ் நகரில் பிடித்து வைத்துள்ளதாகவும் அவர்கள் ரஷ்ய எல்லைக்கு செல்வதை தடுப்பதாக வும் மாறாக போலந்து எல்லைக்கு செல்லுமாறு நிர்ப்பந்தம் செய்வதாகவும் இந்தியாவில் உள்ள ரஷ்யத் தூதரகம் கூறியுள்ளது. போலந்து எல்லையில்தான் கடுமையான போர் நடக்கிறது. அது ஆபத்தானது.இந்திய மாணவர்கள் தமது எல்லைப்பகுதிக்கு வந்தால் அவர்களை தங்களது ராணுவ விமானத்திலேயே பத்திரமாக அழைத்து வர தாங்கள் தயார் எனவும் ரஷ்யா அறிவித்துள்ளது.
“அனானிமஸ்” என்பது மேற்கத்திய நாடுகளில் உள்ள ஹேக்கர்கள் குழு. இவர்கள் எத்தகைய பாது காப்பையும் மீறி இணையதளங்களின் உள்ளே புகுந்து அவற்றை ஹேக் செய்யும் திறமை பெற்றவர்கள். இவர்கள் உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக பல ரஷ்ய இணைய தளங்களை ஹேக் செய்யப்போவதாக அறிவித்தனர். அவ்வாறே செய்தனர். ஆனால் இப்பொழுது சில ரஷ்ய ஹேக்கர்கள் “அனானிமஸ்” இணையதளத்தையே ஹேக் செய்துவிட்டனர்.
SWIFT எனப்படும் வங்கி பரிவர்த்தனைகளிலிருந்து ரஷ்யாவின் முக்கிய வங்கிகள் துண்டிக்கப் பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இதனால் ரஷ்ய நிறுவனங்கள் மட்டுமல்லாது மக்களும் பாதிக்கப்படுவர்.
சர்வதேச புற்றுநோய் சிகிச்சையாளர்கள் அமைப்பு ரஷ்யா புற்று நோய் மருத்துவர்களுடன் ஒத்துழைப்பது இல்லை என முடிவு செய்துள்ளனர்.போர் அரசியல் நோய் சிகிச்சையில் புகலாமா?
ரஷ்ய பூனைகளுக்கு கூட விளையாட்டுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய தேசங்களின் ‘தடை’ அரசியல் எல்லையற்றது.
பிரான்சிலிருந்து உக்ரைனுக்கு சென்று ரஷ்யா வுக்கு எதிராக போரிட முயன்ற 13 பேர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவுக்கு எதிராக போரிட யார் வேண்டுமானாலும் வாருங்கள் என உக்ரைன் அழைப்பு விட்டதன் விளைவு இது!
ஆஸ்திரேலியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு மர்ம பவுடர் அடங்கிய பெட்டி வந்தது. இது மிக ஆபத்தானதாக இருக்கலாம் என்பதால் தூதரக கட்டிடம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. நிபு ணர்கள் இந்த பவுடரை ஆய்வு செய்து வருகின்றனர்.
கேட்டவுடனேயே ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைக்க முயலும் மேற்கத்திய அரசியல்வாதிகள், பல ஆண்டுகளாக வேண்டியும் ஏன் துருக்கியை சேர்க்க மறுக்கிறீர்கள் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐ,நா.சபையில் ரஷ்யாவின் செல்வாக்கை எப்படி யும் சிதைத்துவிடுவது என கங்கணம் கட்டி அமெரிக்க வேலை செய்வதாக சிலர் கூறுகின்றனர்.
ரஷ்ய படைகளுக்கு பயன்படக்கூடாது என இர்பின் ஆற்றின் மேல் கட்டப்பட்ட மிகப்பெரிய பாலத்தை உக்ரைன் ராணுவம் தகர்த்துவிட்டது. உடைந்த பாலம் வழியாக உக்ரைன் மக்கள் வெளியேற வழி யில்லாமல் தவிக்கும் காட்சிகள் வைரல் ஆகியுள்ளன.
ரஷ்ய ராணுவ உற்பத்தி நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
உக்ரைன் போரை நிறுத்துமாறு ஐ.நா.பொது சபையில்கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக 141 நாடுகளும், எதிராக 5 நாடுகளும் வாக்களித்துள்ளன. 35 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.இதில் இந்தியா/சீனா/கியூபா/வியட்நாம்/இலங்கை ஆகிய நாடுகளும் அடங்கும்.
உக்ரைன் போரில் ரஷ்யத் தரப்பில் இதுவரை 498 வீரர்கள் உயிரிழந்திருப்பதாகவும் 1597 பேர் காயமடைந்திருப்பதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.
அமெரிக்க செனட்டர் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க சபையில் கொண்டு வரும் தீர்மான த்துக்கு உக்ரைனின் நாஜிக்கள் பெயரை சூட்டியுள் ளார். நாஜிக்கள் ஆதரவு அமெரிக்க வலதுசாரிகளுக்கு புதியதா என்ன!
நேட்டோவை கண்டிக்கும் எந்த பேரணியில் பங்கேற்றாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரிட்டன் தொழி லாளர் கட்சி தலைவர் அறிவித்துள்ளார். இதற்கு பெயர்தான் மேற்கத்திய ஜனநாயகம் என்பதோ?
இந்திய மாணவர் ஒருவர் பதிவிட்ட காணொலி யில் உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்களை பாகிஸ்தான் தூதரகம் தனது நாட்டு மாணவர்களுடன் சேர்த்து பாதுகாத்து உணவு அளித்து எல்லைகளில் அழைத்து சென்றனர் எனக் கூறுகிறார். இது உண்மையாயின் மிகச்சிறந்த மனித நேயம்.
தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடு வதைக் கண்டித்து பிப்ர வரி 11 அன்று இராமேஸ் வரம் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மீனவர்கள் தெரிவித்துள் ளனர்.
கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றத் தில் ஒன்றிய அரசு தெரி வித்துள்ளது.
கமுதி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 11 வார்டு களில் கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு முதல் பெண் துணை வேந்தராக சாந்திஸ்ரீ பண்டித் என்பவரை நியமித்து ஒன்றிய கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.