அரசு கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் அமைச்சர் உத்தரவு
கோமேனிக்கும் பகிரங்க கொலை மிரட்டல்
டெஹ்ரான், ஜூன் 20- ஈரானின் அரசு நிறுவனங்கள் மீதும் சொத்துக்கள் மீதும் தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் என இஸ்ரேல் ராணு வத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக ஈரானின் மதத் தலைவர் கோமேனி இனி உயிருடன் இருக்க மாட்டார் என பகிரங்கமாக கொலை மிரட்டலும் விடுத்திருந்தார். தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந் நாட்டின் ராணுவ அலுவலகங்கள் புரட்சிகர காவல்படை யின் முக்கிய அலுவலக கட்டடங்களையும், அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் முடிவுகள் எடுக்கும் அலுவலகங்கள் மீதும் குறிவைத்து தாக்கி அழிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கோமேனியை படுகொலை செய்ய வேண்டும் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகத் தான் அரசு கட்டடங்கள் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது எனவும் இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பரவுவதை தடுக்க உதவாது எனவும் கண்டனங்கள் எழுந்துள்ளன. கோமேனிக்கு இஸ்ரேல் விடுத்துள்ள கொலை மிரட்டலானது மத்திய கிழக்கில் உள்ள அனைத்து மக்களுக்கும் எதிரான ஒரு “ஆக்கிரமிப்பு” தான் என்று ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளர் நைம் காசிம் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.