மாஸ்கோ, ஆக. 24 - ரஷ்ய ஜனாதிபதி புதினை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டு உலகையே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த வாக்னர் குழு வின் தலைவர் பிரிகோஸின் விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் சென்ற விமானம் சிறிய ரக ஏவுகணை யால் வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. வாக்னர் ஆயுதக் குழு ரஷ்யாவில் இயங்கிவரும் தனியார் ராணுவ அமைப்பு (கூலிப்படை) என்றும் கூறலாம். ரஷ்யா மட்டு மல்லாது லிபியா, மாலி, சிரியா எனப் பல பகுதிகளிலும் இயங்குகின்றனர். வாக்னர் தலைவர் பிரிகோஸின் உடன் மொத்தம் 10 பேர் மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரை நோக்கி எம்ப்ரேர் லெகஸி-600 ரக விமானத்தில் பய ணம் செய்த போது நிலைகுலைந்து 30 விநாடிகளில் 8000 அடி கீழே விழுந்து நொறு ங்கியது. ரஷ்யாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டு உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு RA-02795 பதி வெண் கொண்ட அதே விமானம் மூலம் தான் பிரிகோஸின் பெலாரஸ் நாட்டுக்கு சென்றார் என்று கூறப்படுகிறது. பிரிகோஸின் மரணம் உறுதி செய்யப்பட்டு இருந்தால் மீண்டும் நீதி கேட்டு நாங்கள் ரஷ்யாவை நோக்கி படையை வழிநடத்துவோம் என்று வாக்னர் படைக்குழுவினர் தெரிவித்துள்ளதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.