வட அமெரிக்காவின் தெற்கே அமைந்துள்ள நாடு மெக்சிகோ. இந்த நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அக்சகா என்ற மாகாணத்தை சக்திவாய்ந்த சூறாவளி நேற்று தாக்கியுள்ளது. இந்த சூறாவளிக்கு அகதா என பெயரிடப்பட்டுள்ளது.
பசிபிக் காலக்கட்டத்தில் முதல் சூறாவளியாக இது அமைந்துள்ளது. இதன் காரணமாக மெக்சிகோவின் பசிபிக் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. 1949-ஆம் ஆண்டு முதல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய சூறாவளியாக இது மாறி இருக்கிறது என அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது. அகாதா புயல் தீவிரம் இழந்ததை அடுத்து வெராகுஸ் மாநிலத்தில் மழை குறைய தொடங்கி இருக்கிறது.
பெரும்பாலானோர் மலைப் பகுதியில் உள்ளனர். சூறாவளியில் சிக்கி இதுவரை பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.அகாதா புயல் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டபோது உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் செவ்வாய் கிழமை காலை பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. என ஆக்ஸ்கா மாநில ஆளுநர் அலெஜாண்ட்ரோ முரட் தெரிவித்தார்.
20-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.