world

img

மாலத்தீவு ஜனாதிபதி முய்சுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

மாலத்தீவு ஜனாதிபதி முக மது முய்சுவுக்கு எதிராக அந்நாட்டு பிரதான எதிர்க்கட்சி நம்பிக் கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது. பெரும்பான்மை கொண்ட எதிர்க் கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவை இணைந்து தீர்மானம் தாக்கல் செய்ய போதுமான 34 எம்.பி.க்களின் கையெ ழுத்துக்களுடன் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன.

 மாலத்தீவின் அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற விதிகளின் படி ஜனாதி பதியை பதவி நீக்கம் செய்ய 56 வாக்கு கள் தேவை. முய்சுவின் அமைச்சரவையில் புதிய மாற்றம் செய்ய  நாடாளுமன்ற ஒப்புதல் பெறுவதற்கான சிறப்பு அமர் வின் போது, மக்கள் தேசிய காங்கிரஸ் மற்றும் மாலத்தீவு  முற்போக்குக் கட்சி எம்பிக்கள் சபாநாயகருக்கு தொந்தரவு செய்வதுபோல நடந்து கொண்டதால் மோதல் வெடித்தது.

இந்த மோதலைத்  தொடர்ந்தே எதிர்க்கட்சி இந்த நம்பிக் கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.   முய்சு ஜனாதிபதியாக பதவி ஏற்ற தில் இருந்து  நாட்டின் சுற்றுலா உட் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட் டங்களுக்கு சீனாவின் உதவியை நாடு வது மற்றும் முதல் சுற்றுப்பயணமாக சீனா சென்று வளர்ச்சித்திட்டங்களுக் கான  ஒப்பந்தங்களை அரசுடன் ஏற்படுத் தியது ஆகியவை எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்தச் சூழலில் தனது அமைச்சர்களையும்  தனக்கு ஆதரவாக  சீனாவிடம் இருந்து உதவிகளை பெற ஆதரவு தரும் நபர்க ளாகவே  முய்சு தேர்வு செய்தது அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.