தியானான்மென் சதுக்கத்தில் ராணுவ அணிவகுப்பு
ஜப்பான் ஆக்கிரமிப்பு மற்றும் பாசிச எதிர்ப்புப் போரில் வெற்றி பெற்ற 80 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், செப்டம்பர் 3 அன்று தியானான்மென் சதுக்கத்தில் சீனா ராணுவ அணிவகுப்பை நடத்த உள்ளது. இந்த அணிவகுப்பில் சீனாவின் உள்நாட்டு கண்டுபிடிப்புகளான செயற்கை நுண்ணறிவு டிரோன்கள், ஆயுதங்கள், மின்னணு மற்றும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள், விமானங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் மீது அமெரிக்காவுக்கே நம்பிக்கையில்லை
அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனமான மெட்டாவின் வாட்ஸ் அப் செயலி யை அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் பயனர்களின் தனிநபர் தரவுகளை பாதுகாப்பதில்லை. மேலும் பயனர்களை வேவு பார்க்கவும் செய்கிறது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அமெரிக்க நாடாளுமன்றமே அந் நிறுவனத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளது.
ஈரான் அணு நிலையங்கள் அழிந்து விட்டனவா?
அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனமான மெட்டாவின் வாட்ஸ் அப் செயலி யை அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் பயனர்களின் தனிநபர் தரவுகளை பாதுகாப்பதில்லை. மேலும் பயனர்களை வேவு பார்க்கவும் செய்கிறது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அமெரிக்க நாடாளுமன்றமே அந் நிறுவனத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளது.
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: நான்கு பேர் பலி
பாகிஸ்தானின் குர்ரம் மாவட்டத்தில் கண்ணிவெடிகுண்டு வெடித்ததில் நான்கு பேர் பலியாகிவிட்டனர். பலர் படுகாய மடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்தனர். கடந்த ஆண்டு இம்மாவட்டத்தில் ஷியா - சன்னி முஸ்லிம்களுக்கு இடையே உருவான மோதல்களில் 130 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இந்த குண்டு வெடிப்பு அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. குண்டு வெடிப்பு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
அணுகுண்டு வீசும் விமானங்களை வாங்கும் இங்கிலாந்து
அணு குண்டு வீசும் திறன் கொண்ட அமெரிக்க தயாரிப்பான எப்-35 ரக போர் விமானங்களில் 12 விமானங்களை இங்கி லாந்து வாங்க உள்ளது. இது இங்கிலாந்தின் அணுசக்தியை வலுப்படுத்தும் நடவடிக்கை என அந்நாடு தெரிவித்துள்ளது. நெதர்லாந்தில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட ஸ்டார்மர் இந்த அறிவிப்பை வெளி யிட்டுள்ளார். நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் இந்த முடிவை வரவேற்றுள்ளார். இது நேட்டோ அமைப்பிற்கு இங்கிலாந்தின் முக்கிய பங்களிப்பு என கூறியுள்ளார்.
“இனி போர் வேண்டாம்” : அமெரிக்கா முழுவதும் டிரம்ப்புக்கு எதிராக போராட்டங்கள்
நியூயார்க், ஜூன் 25- அமெரிக்கா முழுவதும் “இனி போர் வேண் டாம்” என லட்சக்கணக்கான மக்களை திரட்டி போ ராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 50501 என்ற இயக்கம் அமெரிக்காவில் உள்ள பல ஜனநாயக மற்றும் போர் எதிர்ப்புக் குழுக்களை ஒன்றிணைத்து ஞாயிற்றுக்கிழமை யன்று நாடு முழுவதும் “இனி போர் வேண்டாம்” என்ற முழக்கத்துடன் இப்போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளன. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் மோதலில் அமெரிக்கா தலையிடுவதை பெரும்பான்மை அமெரிக்க மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை இப்போராட்ட அறை கூவல் வெளிப்படுத்தியுள்ளது. 50501 இயக்கம் கடந்த பிப்ரவரி மாதம் 50 மாநிலங்களிலும் 50 போராட்டங்களை நடத்தியது. அதில் அமெரிக்காவின் பொருளாதா ரப் பிரச்சனைகளை சரி செய்ய முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் வெளிநாடுகளின் மீதான போர்களில் அமெரிக்க ராணுவத்தை ஈடுபடுத்துவதையும், தலையிடுவதையும், ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்குவதையும் கண்டித்து போராட்டம் நடத்தினர். டிரம்ப் எதிர்ப்புப் போராட்டங்களின் அடுத்த அலை இந்த அமைப்பு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிற்கு எதிராகவும் அவரது கொள்கை களுக்கு எதிராகவும் தொடர் போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அமெ ரிக்கா முழுவதும் ஜூலை 17 அன்று டிரம்ப் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்த உள்ளது. “நல்ல மாற்றத்திற்கான போராட்டம் தொடர் கிறது” (Good Trouble Lives On) என்ற கோசத்தின் கீழாக இந்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. டிரம்ப் நிர்வாகத்தால் சிவில் உரிமைகள் மீது நடத்தப்படும் கடுமையான ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். கருப்பி னத்தவர்கள், பழுப்பு நிற அமெரிக்கர்கள் மீதான தாக்குதல்கள், வெளிநாட்டினர், மற்றும் பால் புதுமையினர் சமூகங்கள் மீதான தாக்கு தல்களை நிறுத்த வேண்டும். தொழிலாளர் நலக் கொள்கைகள் மீதான நிதிகள் வெட்டுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் மற்றும் வெளிநாட்டுக் கொள்கை மீதான மக்களின் ஆழ்ந்த கவலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.