ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலின் அர்ச்சகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலின் அர்ச்சகர்கள் 3 பேர் மதுபோதையில் ஆபாச நடனம் ஆடியது மற்றும் கேயிலுக்கு பெண் பக்தர்கள் மீது வீபூதி அடித்த வீடியோ வெளியாகி பக்தர்கள் மத்தியில் பெறும் கோவத்தை ஏற்படுத்தியது. இதை அடுத்து, அவர்களை பணியிடை நீக்கம் செய்து அறநிலையத்துறை உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, அர்ச்சகர்கள் கணேசன், வினோத், கோமதி விநாயகம் மற்றும் வீடியோ வெளியிட்ட சபரிநாதன் ஆகியோர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.