world

img

மலேசியா – வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்வு  

மலேசியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.        

தென் கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் 8 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. அதனைதொடர்ந்து தாழ்வான பகுதிகளில் இருந்த 26 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.    

இந்நிலையில் மலேசியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 26 ஆண்கள், 13 பெண்கள், 2 குழந்தைகள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.