2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணி தோல்வியடைந்ததை அடுத்து ப்ரூசெல்ஸ் நகரில், ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், கடந்த நவம்பர் 20-ஆம் தேதி முதல் கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் மொராக்கோ அணிக்கு எதிராக விளையாடிய பெல்ஜியம் அணி 0-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதனால், பெல்ஜியமின் ப்ரூசெல்ஸ் நகரில் பல இடங்களில் ரசிகர்கள் வாகனங்களை எரித்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
கார்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களை அடித்து உடைத்தும், இரு சக்கர வாகனங்களுக்கு தீவைப்பு சம்பவங்களும் நடந்துள்ளன. இந்த தில் பத்திரிகையாளர் ஒருவர் காயம். கலவரம் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளது.