பாலஸ்தீன மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்துப் பொருட்களை கொண்டு செல்ல ஐ.நா. சபையில் பிரேசில் கொண்டு வந்த தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா நிராகரித்துவிட்டது.
இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருவதின் ஒரு பகுதியாக காசா பொது மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்துப் பொருட்கள் அனைத்தையும் தடை செய்துள்ளது. இது மிகப்பெரிய போர்க் குற்றம் என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
முன்னதாக இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் ரஷ்யா ஒரு முன்மொழிவை கொண்டு வந்தபோது அதை அமெ ரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் நிராகரித்தன. இஸ்ரேலின் போர்க்குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் அத்தியா வசியப் பொருட்கள் இல்லா மல் பாலஸ்தீன மக்கள் நாள் தோறும் மடிந்து வரு கிறார்கள்.
இதனால் ஐ.நா. பாது காப்புக் கவுன்சிலுக்கு இந் தாண்டிற்கு தலைமை ஏற்றிருக்கும் பிரேசில், மனிதநேய உதவிகளை பாலஸ்தீனர்களுக்கு கொண்டுசெல்ல ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. தீர்மானத்திற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்த நிலையில், அமெ ரிக்கா மட்டும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தோற்கடித்து விட்டது.
எகிப்து, காசா எல்லை யில் 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் நிவாரணப் பொருட்களுடன் ஐ.நா.வின் நிவாரணக் குழு கடந்த சில நாட்களாகக் காத்து கொண்டுள்ளது. அறுவைச் சிகிச்சை செய்ய போதிய அனஸ்தீசியா உள்ளிட்ட மருந்துப் பொருட்கள் இல்லாததால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அது இல்லா மலேயே அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய மோசமான சூழல் உள்ளது. புதன் கிழமையன்று இஸ்ரேல் பிரதமரை சந் தித்த அமெரிக்க ஜனாதி பதி ஜோபைடன் காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் செய்ய இஸ்ரேல் பிரதமரி டம் கூறியுள்ளதாக கூறினார். ஆனால் அதே வேளையில் ஐ.நா. தீர்மானத்தை தோற்கடித்துள்ளது. அமெ ரிக்காவின் இரட்டை வேடம் உலகளவில் அம்