world

காசா மீது இஸ்ரேல் போர்: சில முக்கிய கள நிகழ்வுகள்

uஇஸ்ரேலுக்கு எதிராக துருக்கியின் எர்டோகன் கடும் வார்த்தைகளை பயன்படுத்தினாலும் துருக்கி- இஸ்ரேல் வணிகம் உச்சகட்டத்தில் உள்ளது என ஆய்வாளர்கள்  அம்பலப்படுத்தியுள்ள னர். இத்தகைய இரட்டைவேடம் எப்படி பாலஸ்தீனத்துக்கு உதவும்?

u2 மாதங்களுக்கு போரை நிறுத்தவும் ஹமாஸ் அனைத்து இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் எனவும் இஸ்ரேல் ஆலோசனை முன்வைத்துள்ளது. ஆனால் நிரந்தர போர் நிறுத்
தம்/ பாலஸ்தீன கைதிகள் விடுவிப்புஆகியவை பற்றி எதுவும் சொல்லப்பட வில்லை. சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இஸ்ரேல் பதுங்குகிறது என சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

uஹமாசிடம் சிக்கியுள்ள பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி உறவினர்கள் இஸ்ரேல் நாடாளுமன்றமான கென்செட்டுக்குள் புகுந்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். 

uசிரியாவில் உள்ள அமெரிக்க தளங்கள்மீது 78 முறையும் இராக்கில் உள்ள தளங்கள் மீது 58 முறையும் பாலஸ்தீனிய ஆதரவு குழுக்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. 102 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளனர். இராக்கில் இருந்து வெளியேறுமாறு அதன் பிரதமர் அமெரிக்காவை வலியுறுத்தி வருகிறார். எண்ணெய் வயல்களை கபளீகரம் செய்ய ஒண்ட வந்த பிடாரியான அமெரிக்கா அவ்வளவு எளிதில் இணங்குமா?

uகாசாவில் 108 நாட்களில் 11,000 குழந்தைகளும் 7,500 பெண்களும் உட்பட 25,500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

uகாசா பகுதியில் உள்ள பல மருத்துவ மனை வெளிப்பகுதிகள் கல்லறைகளாக மாறியுள்ளன.

uகாசாவில் உள்ள ஒவ்வொருவரும் பசியாலும் பட்டினியாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா. பொது செயலாளர் குட்டெரஸ் வேதனை வெளி யிட்டுள்ளார். தடையற்ற போதுமான உதவிகள் காசாவுக்குள் அனுப்பப்பட வேண்டும் என கூறினார். 

uஹாங்காங்க் அணியை 3-0 கோல்வித்தியாசத்தில் தோற்கடித்து ஆசியாவின் 16 அணிகளில் ஒன்று எனும் இடத்தை பாலஸ்தீன கால் பந்து அணி சாதனை படைத்தது. இதில் விளையாடிய பல வீரர்களின் குடும்பஉறுப்பினர்கள் இஸ்ரேல் குண்டு வீச்சில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டுவீச்சில் துன்பப்படும் எமது மக்களுக்கு எங்களது வெற்றி  ஆறுதலை தரும் என அவர்கள் கூறினர். 

uபாலஸ்தீனம் உட்பட மத்திய கிழக்கு ஆசியாவில் அமைதி நிலவ வேண்டும் எனில் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லவ்ரவ் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசினார்.

uஇஸ்ரேலுக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்துள்ள அல்லது அந்த வழக்குகளை ஆதரிக்கிற தேசங்கள்: தென்ஆப்பிரிக்கா, பொலிவியா, பங்களா தேஷ், கொமொரோஸ், டிஜ்பவுட்டி, கியூபா,பாகிஸ்தான், நமீபியா, மாலத்தீவுகள், இந்தோனேஷியா, ஸ்லோவேனியா, மெக்சிகோ, சிலி. இந்த தேசங்கள் இடதுசாரிகளால் ஆளப்படுகின்றன அல்லது இன வெறியால் பாதிக்கப்பட்டவை அல்லது இஸ்லாமிய தேசங்கள். ஒரு வளர்ந்த முதலாளித்துவ நாடும் இந்த பட்டியலில் இல்லை. 

uஏமன்/சிரியா/ ஈராக் பாலஸ்தீன ஆதரவு குழுக்கள் ஏவும் ஒரு சில ஆயிரங்கள் டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட துரோன்களை எதிர்கொள்ள பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஏவுகணைகளை அமெரிக்காபயன்படுத்துவது கவலை அளிக்கிறது என அமெரிக்க செனட்டர்கள் சிலர் கூறியுள்ளனர். 

uஇஸ்ரேல் திட்டமிட்டு போர் குற்றங்களை செய்வது போல தெரியவில்லை என அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கிர்பி மீண்டும் கூறியுள்ளார். இவரை போன்ற ஏகாதிபத்திய போர் வெறியர்கள் வேறு உலகில்வாழ்கிறார்கள் போலும். 

uசர்வதேச சமூகம் இஸ்ரேலை தடுக்க முடியாதது என்பது மிகவும் வெட்கக் கேடானதுஎன துருக்கி வெளியுறவு அமைச்சர் ஃபிடான் பாதுகாப்பு கவுன்சிலில் பேசியுள்ளார்.