uஇஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே பணயக்கைதிகள் விடுவிப்பு நடக்கும் என ஹமாஸ் மற்றும் ஏனைய பாலஸ்தீனக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
uஇஸ்ரேல் கப்பல்களை செங்கடலில் தாக்கும் ஹவுதி அமைப்புக்கு எதிராக அமெரிக்கா உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பில் பங்கேற்க ஸ்பெயின் மறுத்துவிட்டது.
uஇஸ்ரேல் மக்களில் 83சதவீதம் பேர் காசாவிலிருந்து பாலஸ்தீன மக்களை அகற்றுவதை ஆதரிக்கின்றனர் என சமீபத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
u“காசாவின் குழந்தைகளுக்கு தேவை கள உதவி; வெறும் வார்த்தைகள் அல்ல” என ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக அதிகாரி மரியா ஜக்கோரவா கூறியுள்ளார்.
uஇஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனையில் லெபனானும் ஹெசபுல்லாவும் நடுநிலை வகிக்க வேண்டும் என ஒரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஹெசபுல்லா தலைமை நிராகரித்துள்ளது. ஹமாஸ் அகற்றப்பட்டவுடனேயே இஸ்ரேலின் அடுத்த இலக்கு ஹெசபுல்லாதான் எனவும் நடுநிலை என்பது இன்றைய சூழலில் தற்கொலைக்கு சமம் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. அதே சமயத்தில் முழு போரில் ஹெசபுல்லா ஈடுபடவில்லை எனவும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
uகாசாவின் அனைத்து மருத்துவக் கட்டமைப்புகளும் இஸ்ரேல் குண்டு வீச்சில் நாசமாக்கப்பட்டுவிட்டன என உலக சுகாதார அமைப்பு வேதனை வெளிப்படுத்தியுள்ளது.
uஇயேசு நாதர் பிறந்த பெத்லேகம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த தேவாலய பேராயர் டாக்டர் முந்த்தர் ஐசக் இஸ்ரேல் குண்டுவீச்சில் 9000 குழந்தைகள்
படுகொலை செய்யப்பட்ட பின்னரும் மேற்கத்திய நாடுகளும் அங்குள்ள சர்ச்சுகளும்கூட வாய்திறவாமல் உள்ளன என விமர்சித்து உள்ளார். உலகம் காசா மக்களை கைவிட்டு
விட்டது எனவும் தனது தேவாலய உரையில் குறிப்பிட்டுள்ளார். மறுபுறத்தில் போப் ஆண்டவர் வாட்டிகனின் இதயம் பெத்லேகமில் உள்ளது எனவும் அங்கும் காசாவிலும் அமைதி திரும்ப வேண்டும் எனவும் கிறித்துமஸ் செய்தியை வெளியிட்டுள்ளார்.
uஇஸ்லாமிய தேசமான மொராக்கோ இஸ்ரேலுடனான தனது ராஜ்ய உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு மக்கள் பெரும் பேரணியை நடத்தியுள்ளனர். 2020களில் “ஆப்ரகாம் ஒப்பந்தங்கள்” எனும் பெயரில் அமெரிக்கா நிர்ப்பந்தம் காரணமாக இஸ்ரேலுடன் ராஜ்ய உறவை உருவாக்கிக் கொண்ட 4 அரேபிய தேசங்களில் ஒன்று மொராக்கோ.
uபாலஸ்தீன சர்வதேச மாநாட்டை ஈரான் நடத்தியுள்ளது. இதில் சியோனிசத்துக்கு எதிராக நிலைபாடு கொண்ட பல யூத அமைப்புகளும் பங்கேற்றுள்ளன. இது களத்தில் பாலஸ்தீனத்துக்கு நிவாரணம் தருமா என்பது வரும் நாட்களில் தெரியும்.
அ.அன்வர் உசேன்