ஜனவரி, 26, 2024 அன்று சர்வ தேச நீதிமன்றத்தின் நீதிபதிகள் காசாவிலுள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் இனப்படு கொலை நிகழ்த்திக் கொண்டிருப்பது ‘உண்மை போல்’ தெரிகிறது என்று கண்டு பிடித்துள்ளனர். இஸ்ரேல் இனப்படுகொலை என்ற குற்றத்தைத் தடுத்தல், தண்டனை கொடுத்தல் ஆகிய ஐ.நா. தீர்மானத்தை மீறும் எதை யும் செய்வதைத் தடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது சர்வதேச நீதி மன்றம். ஆனால் அது 2022இல் உக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நட வடிக்கையை நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தது போல் போர் நிறுத்தம் செய்யுமாறு அழைப்பு விடுக்கா விட்டாலும், இந்த உத்தரவை சாதாரண மாகப் படித்தால் கூட நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த இஸ்ரேல் காசா மீதான தனது தாக்கு தலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது புரியும். சர்வதேச நீதிமன்றம் தனது தற்காலிக நடவடிக்கை யின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் ஒரு மாதத்துக்குள் சர்வதேச நீதிமன்றத்து க்கு பதிலளிக்க வேண்டுமெனவும், தனது உத்தரவை அது எப்படி நடை முறைப்படுத்தியுள்ளது என்று கூற வேண்டுமென்றும் பணித்துள்ளது.
இன்னொரு வழக்கு பிப்.19இல் விசாரணை
இஸ்ரேல் ஏற்கனவே சர்வதேச நீதி மன்றத்தின் கண்டுபிடிப்புக்களை நிராகரித்து விட்டாலும், டெல் அவிவ் மீது சர்வதேச அழுத்தம் அதிகரித்து வரு கிறது. அல்ஜீரியா ஐநா. பாதுகாப்பு கவுன்சிலிடம் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துமாறு கோரி யுள்ளது. இந்தோனேசியாவும், ஸ்லோ வேனியாவும் சர்வதேச நீதிமன்றத்தில் தனி வழக்குகளைத் தொடர்ந்துள்ளன. அவை மீதான விசாரணை பிப்ரவரி 19 அன்று தொடங்கவுள்ளது. ஆக்கிர மிக்கப்பட்ட பாலஸ்தீன நிலங்களின் மீதான இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் மீது டிசம்பர் 2022இல் ஐநா. பொதுச்சபை நிறைவேற்றிய தீர்மா னத்தின்படி ஒரு ஆலோசனைக் கருத்துக் கூறுமாறு அவை கோரியுள்ளன. சிலியும், மெக்சிகோவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் காசாவில் நிகழ்த்தப்பட்டுள்ள குற்றங்களை விசா ரிக்க வேண்டுமென்று கோரியுள்ளன.
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு மீதான இஸ்ரேலின் எதிர்வினை குணாம்ச ரீதியில் நிராகரிப்பே. அதன் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென் கிவிர் சர்வதேச நீதிமன்றத்தை ‘ஓரிறை எதிர்ப்பு நீதிமன்றம்’ என்று குற்றம் சாட்டி, அது ‘நீதியைத் தேட வில்லை, மாறாக யூத மக்களை தண்டிக்க முயல்கிறது’ என்று கூறியுள்ளார். வினோதமான முறையில் பென் கிவிர் சர்வதேச நீதிமன்றம் ‘படுகொலையின் போது அமைதி காத்ததாக’க் குற்றம் சாட்டியுள்ளார். ஐரோப்பிய யூதர்கள், ரோமானிகள், ஓரினச் சேர்க்கையா ளர்கள், கம்யூனிஸ்டுகள் மீது நாஜி ஜெர்மனி அரசு நடத்திய படுகொலை 1941 பிற்பகுதியிலிருந்து 1945 மே மாதம் வரை நிகழ்த்தப்பட்டது.
இல்லாத நீதிமன்றம் மீது குற்றம் சாட்டும் இஸ்ரேல்
அப்போதுதான் சோவியத் செஞ் சேனை ராவென்ஸ்ப்ருக், சச்சென்ஹா சன், ஸ்டுட் ஹஃபிலிருந்து சிறைக்கைதி களைவிடுவித்தது. எனினும், சர்வதேச நீதிமன்றம் இந்தப் படுகொலை முடிவுக்கு வந்து ஒரு மாதத்துக்குப் பிறகுதான், அதாவது 1945 ஜூனில்தான் அமைக்கப்பட்டது என்பதுடன் 1946, ஏப்ரலில்தான் தனது வேலையைத் தொடங்கியது. சர்வதேச நீதிமன்றம் இல்லாத போதே அது படுகொலை நிகழ்ந்த போது அமைதி காத்தது என்று கூறி சட்டவிரோதமாக்க இஸ்ரேல் முயற்சிப்பதும், சர்வதேச நீதிமன்றத்தை ‘ஓரிறை எதிர்ப்பு நீதிமன்றம்’ என்று குற்றம் சாட்டுவதும் சர்வதேச நீதிமன்றம் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அதனிடம் எந்த பதிலும் இல்லையென்பதைக் காட்டுகின்றன.
அதே சமயம், காசாவிலுள்ள பாலஸ்தீனர்கள் மீது குண்டுவீச்சு தொ டர்கிறது. தென்னாப்பிரிக்காவில் ஜொஹன்னஸ்பர்கிலுள்ள ஆப்பிரிக்க-மத்திய கிழக்கு மையத்தின் இயக்கு னரான என் நண்பர் நயீம் ஜீனா காசாவி லுள்ள பல்வேறு துறைகள் அளித்த புள்ளி விவரங்களையும், ஊடகத் தகவல்களையும் அங்குள்ள நிலைமை குறித்து தினசரி செய்தியை அளிப்ப தற்காக மீள்பார்வை பார்த்துக் கொண்டி ருந்தார். ஜனவரி 26ஆம் தேதி செய்தி யின்படி, 26,000 பாலஸ்தீனர்களுக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். அதில் அக்டோபர் 7இலிருந்து கொல்லப்பட்ட குழந்தைகள் குறைந்த பட்சம் 11,000. சுமார் 69,000 பேர் காயமடைந்துள்ளனர். காசா குடிமக்கள் 2.3 மில்லியன் பேருக்கு மேல் அகதிகளாக வெளியேறி யுள்ளனர். இந்த எண்ணிக்கைகள் திகைக்க வைக்கின்றன.
இக்காலகட்டத்தில் இஸ்ரேல் 394 பள்ளிகளையும், கல்லூரிகளையும் சேதப்படுத்தியுள்ளது, அவற்றில் 99ஐ அழித்துள்ளது. 30 மருத்துவ மனைகளை அழித்து 337 மருத்துவப் பணியாளர்களைக் கொன்றுள்ளது. இது தான் சர்வதேச நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்ட இன அழிப்பு வழக்கின் நிதர்சனமும், அதற்கு நீதிமன்றம் அளித்த தற்காலிக நடவடிக்கைக ளும். அதில் இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி தல்வீர் பண்டாரி மேலும் ஒரு படி சென்று வெளிப்படையாக, ‘அனை த்து சண்டைகளும், மோதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’ என்று கூறினார்.
மரணமடைந்தவர்களில் பலர் பாலஸ்தீன ஓவியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிற்பிகள். 1948 நக்பா வுக்குப் (பேரழிவு) பிறகு பாலஸ்தீன வாழ்க்கையில் கடந்த 76ஆண்டு களாக இருக்கும் தாக்கம் ஏற்படுத்தும் அம்சங்களில் ஒன்று பாலஸ்தீன கலாச்சார உருவாக்கத்தின் தொடரும் வளம். ஜெனின் அல்லது காசா நகரத்தில் எந்த ஒரு தெருவில் வேகமாக நடந்தா லும் அங்கு ஸ்டூடியோக்களும், காலரி களும் நிறைந்திருப்பதைக் காட்டும். அங்கு பாலஸ்தீனர்கள் தமது கனவு காணும் உரிமையை வலியுறுத்துகி றார்கள்.
1974 பிற்பகுதியில் தென்னாப்பி ரிக்கப் போராளியும், கலைஞருமான பாரி வின்செண்ட் ஃபீன்பர்க் ஆப்பிரிக்க ஆசிய பத்திரிகையான லோட்டசில் ஒரு கட்டுரையை எழுதினார். அந்தக் கட்டுரை ஃபீன்பர்குக்கும் ‘ஒரு இளம் பாலஸ்தீனக் கவிஞருக்கும்’ இடை யிலான பேட்டியுடன் தொடங்குகிறது. ஏன் லோட்டசில் வெளியாகும் வழக்கத்து க்கு மாறாக அதிகமாக வெளியாகும் கவி தைகள் பாலஸ்தீனக் கவிஞர்களிட மிருந்து வருகின்றன என்று ஃபீன்பர்க் ஆச்சரியப்படுகிறார். ஃபீன்பர்கின் கருத்தைக் கண்டு அதிசயப்படும் இளம் கவிஞர் பதிலளிக்கிறார்: ‘ என் மக்களுக்கு ஒருபோதும் மறுக்கப்படாத ஒரே விஷயம் கனவு காணும் உரிமை மட்டுமே.’
‘அதிர்ச்சியிலிருந்து மீள ஓவியம் தீட்டு...’
1999 டிசம்பரில் பிறந்த இளம் பாலஸ்தீன ஓவியர் மாலக் மாட்டர் கனவு காண்பதை நிறுத்த மறுப்பவர். 2014இல் இஸ்ரேல் தனது ஆபரேஷன் ப்ரொடக்டிவ் எட்ஜை காசாவில் நிகழ்த்தி ஒரே மாதத்தில் சுமார் இரண்டாயிரம் பாலஸ்தீனர்களைக் கொன்றபோது மாலக்குக்கு 14 வயதுதான். ஒரு தலை முறைக்கு மேல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலப்பகுதியின் மேல் நீண்டு நீடிக்கும் குண்டு வீச்சால் நிகழ்ந்த கொடூரமான மரணங்கள். இந்த குண்டு வீச்சால் ஏற்பட்ட மன அதிர்ச்சி யிலிருந்து மீள்வதற்காக ஓவியம் தீட்டுமாறு மாலக்கின் அம்மா அவரை வலியுறுத்தினார். மாலக்கின் பெற்றோர் இருவரும் அகதிகள்: அவளது தந்தை இப்போது அஷ்கெலோன் என்று அழைக்கப்படும் ஜோராவைச் சேர்ந்த வர். அவளது அம்மா அல் படானி அல் சார்கியைச் சேர்ந்தவர். அந்த கிராமம் இப்போது காசா ஸ்ட்ரிப் என்று அழைக்கப்படும் நிலப்பகுதியின் விளிம்பில் இருக்கும் பாலஸ்தீன கிராமங்களில் ஒன்று.
1948, நவம்பர் 25 அன்று புதிதாக உருவாக்கப்பட்ட இஸ்ரேலிய அரசு 40ஆம் எண் உத்தரவை இட்டது. அந்த உத்தரவு அல் படானி அல் சார்கி போன்ற கிராமங்களிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்ற இஸ்ரேலியத் துருப்புக் களுக்கு அதிகாரமளித்தது. ‘இந்த கிரா மங்களிலிருந்து அராபிய அகதிகளை வெளியேற்றி, அவர்கள் திரும்பி வரு வதைத் தவிர்க்க அவற்றை அழிப்பது உங்களது பங்கு. கிராமங்களை எரித்து, கல் வீடுகளை நொறுக்குங்கள்’ என்று இஸ்ரேலிய தளபதிகள் கட்டளை யிட்டனர்.
ஒரு பக்கம் சாய்ந்த பெண்களின் தலைகள்
மாலக்கின் பெற்றோர் இந்த நினைவுகளைச் சுமந்தாலும், இந்த ஆக்கிரமிப்பையும் போரையும் தாண்டி, தமது குழந்தைகளுக்குக் கனவு களையும், நம்பிக்கையும் விதைக்க முயல்கின்றனர். மாலக் ஒரு தூரிகையை எடுத்து பிரகாசமான வண்ணங்களுடன் ஒளிமயமான உலகுடன் பாலஸ்தீன உருவப்படத்தை, ‘சுமுத்’தின் (உறுதிப்பாடு) சின்னமான ஆலிவ் மரத்து டன் வரைகிறாள். அவள் ஒரு பதின்ம வயதுப் பெண் என்பதால் இளம் சிறுமிக ளையும், பெண்களையும், பெரும்பாலும் குழந்தைகளுடனும், புறாக்களுடனும் வரைகிறாள். எழுத்தாளர் இண்ட்லீப் ஃபராசி சாபரிடம் அவள் கூறுவது போல் பெண்களின் தலைகள் அடிக்கடி ஒருபக்கமாகச் சாய்ந்துள்ளன. அதற்கு அவள் கூறும் காரணம், ‘நீங்கள் நிமிர்ந்து நேராக நின்றால், நீங்கள் நிலை யாக இருப்பதைக் காட்டும். ஆனால் தலை ஒரு பக்கம் சாய்ந்திருக்கும்போது உடைந்து போனதன், ஒரு பலவீ னத்தின் உணர்வைத் தூண்டும். நாம் மனிதர்கள், போருக்கிடையில் வாழ்கி றோம், கொடூரமான கணங்களுக்கி டையில் வாழ்கிறோம்… சிலசமயம் சகிப்புத்தன்மை தவறி விடுகிறது.’
பாலஸ்தீன பிக்காசோ
மாலக்கும் நானும் இந்த வன்முறைக் காலம் முழுவதும் தொடர்பில் இருந்தோம். அவளது அச்சங்கள் வெளிப் பட்டன, அவளது வலிமை குறிப்பி டத்தக்கது. ஜனவரியில் அவள் எழுதி னாள், ‘நான் இன அழிப்பின் பல்வேறு அம்சங்களைக் காட்டும்படி ஒரு மிகப்பெரிய ஓவியத்தை 5 மீட்டர் கான்வாசில் வரைந்து கொண்டிருக்கி றேன். மாலக் வரையத் தொடங்கிய ஓவியம் பாப்லோ பிக்காசோவின் புகழ்பெற்ற ஓவியமான குமிகா(1937)ஐ பிரதிபலிக்கத் தொடங்கியது. அவரால் அந்த ஓவியம் பாஸ்க் பகுதியில் ஒரு நகரத்துக்கு எதிராக பாசிச ஸ்பெயின் நடத்திய படுகொலைகளின் நினைவாக வரையப்பட்டது. 2022இல் ஐ.நா. நிவார ணம் மற்றும் கிழக்குக்கு அருகில் இருக்கும் பாலஸ்தீன அகதிகளுக்கான பணி ஏஜென்சி மாலக் குறித்து ஒரு சுயவிவரத்தை வெளியிட்டது. அதில் அவரை ‘பாலஸ்தீன பிக்காசோ’ என்று குறிப்பிட்டது. அந்தக் கட்டுரையில் மாலக் எழுதினார், ‘நான் பிக்காசோவால் மிகவும் தாக்கம் பெற்றேன். முதன்முத லில் வரையத் தொடங்கிய போது அவரைப் போல் வரைய முயன்றேன்.’
மாலக்கின் புதிய ஓவியம் பாலஸ்தீன மக்களின் இதயம் நொறுங்கியதையும், அவர்களது உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது. அந்த ஓவியம் இஸ்ரேலிய இன அழிப்பின் மீதான குற்றச்சாட்டையும், பாலஸ்தீனர்களின் கனவு காணும் உரிமையை உறுதிப் படுத்துவது. நீங்கள் அதை நெருக்க மாகப் பார்த்தால் இன அழிப்பில் கொல்லப்பட்டவர்களைப் பார்க்கலாம்: மருத்துவப் பணியாளர்கள், ஊடகவிய லாளர்கள், கவிஞர்கள்; மசூதிகள், தேவாலயங்கள்; புதைக்கப்படாத உடல்கள், நிர்வாணமான சிறை வாசிகள், சிறு குழந்தைகளின் உடல்கள்; குண்டுவீசப்பட்ட கார்கள், தப்பியோடும் அகதிகள். ரெஃபாத் அலரீயரின் கவிதை யான, ‘நான் சாக வேண்டுமென்றால்’ என்பதைக் குறிக்கும்படி ஒரு பட்டம் வானில் பறந்து கொண்டிருக்கும். (’என் கதையைக் கூற நீ உயிருடன் இருக்க வேண்டும் . . . காசாவில் எங்கோ கண்ணால் சுவர்க்கத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு குழந்தை . . . பட்டத்தைப் பார்த்தால், நீ உருவாக்கிய வானில் பறக்கும் என் பட்டத்தைப் பார்த்து அங்கு அன்பைத் திரும்பக் கொண்டு வரும் ஒரு தேவதை இருக்கி றது என்று நினைக்கும்)
அல் - சாதியின் தூரிகையை எடுத்து...
மாலக்கின் ஓவியங்கள் பாலஸ்தீன ஓவியப் பாரம்பரியத்தில் வேர் கொண்ட வை. அராபிய கிருத்தவ படிமவியத்தை ஒட்டிய வரலாற்றால் ஊக்கம் பெற்றவை (இந்தப் பாரம்பரியம் பதினேழாம் நூற்றாண்டில் அலெப்போவைச் சேர்ந்த யூசூஃப் அல் ஹலாபியால் வளர்த்தெ டுக்கப்பட்டதாகும்). ‘அலெப்போ பாணி’யானது ‘ஜெருசலேம் பாணி யாக’ வளர்ந்து இஸ்லாமிய சிறு சித்தி ரங்கள், பூத்தையல் ஆகியவற்றிலிருந்து தாவரங்கள் விலங்கினங்களை அறி முகப்படுத்தி இந்தப் பாணியை பிரகாச மடையச்செய்தன என்று கலை விமர்சகர் கமால் பௌலட்டா இஸ்திஹார் அல் மக்கனில் எழுதினார்.
நான் முதலில் மக்கனின் ஓவி யத்தைப் பார்த்தபோது, அவள் ஜூல்ஃபா அல் சாதி(1905-1988)ன் வாழ்க்கை யை மீட்டெடுத்துள்ளார் என்று நினைத்துக் கொண்டேன். ஜூல்ஃபா அல் சாதி தனது காலத்தில் மிகவும் முக்கியமான ஓவியர். பாலஸ்தீன அரசியல் கலாச்சார நாயகர்களை வரைந்தவர். அல்-சாதி 1948 நக்பா வின் போது ஜெருசலேமிலிருந்து தப்பி ஓட நிர்ப்பந்திக்கப்பட்டதால் ஓவியம் வரைவதை நிறுத்தி விட்டார்; மீதமிருக்கும் ஓவியங்கள் அவர் குதிரை யின் முதுகில் ஏற்றிச் சென்றவை மட்டுமே.
சாதி தனது மீதமிருக்கும் வாழ்க்கை யை டமாஸ்கசில் இருக்கும் ஐ.நா பள்ளி யில் பாலஸ்தீனக் குழந்தைகளுக்கு ஓவியம் வரையச் சொல்லிக் கொடுப்ப தில் கழித்தார். அப்படிப்பட்ட ஒரு பள்ளி யில்தான் மாலக் ஓவியம் பயின்றார். மாலக் அல்-சாதியின் தூரிகைகளை எடுத்துக் கொண்டு அவருக்காக வரை வதைப் போல் தோன்றியது. இஸ்ரேல் அந்த பள்ளியைக் குறி வைத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. அது வெற்றிகரமாக ஐ.நா. பொதுச்சபையால் உருவாக்கப்பட்ட அந்த ஏஜென்சிக்கு நிதி அளிப்பதை பல முக்கியமான உலக வடபகுதி அரசுகள் மீது நிர்ப் பந்தம் செலுத்தி நிறுத்தி விட்டது.
நிதியளிப்பதை நிறுத்துவது இனஅழிப்பை அதிகரிப்பதே
ஐ.நா. 1949இல் நிறைவேற்றிய தீர்மானம் 302, பாலஸ்தீன அகதி களுக்கு நேரடியான நிவாரணம், பணித் திட்டங்களுக்கு நிதி அளிப்பதை உறுதிப்படுத்தியது. அதன் மூலம் தான் அந்தப் பள்ளி உருவானது. எந்த ஒரு ஆண்டை எடுத்துக் கொண்டா லும் மாலக் போன்ற ஐந்து லட்சம் பாலஸ்தீனக் குழந்தைகள் இந்தப் பள்ளிகளில் படிக்கின்றனர். பாலஸ்தீன பொருளாதாரக் கொள்கை ஆய்வு நிறு வனத்தின் தலைமை இயக்குநர் ராஜா க்ஹாலிதி இந்த நிறுத்தத்தைப் பற்றி இப்படிக் கூறுகிறார்: நீண்ட காலமாக நீடிக்கும் இந்த ஏஜென்சி யின் நிதியின் மிக மோசமான நிலை ... பாலஸ்தீன அகதிகளுக்கும், காசாவிலிருந்து வெளியேற்றப்பட்டி ருக்கும் சுமார் 1.8 மில்லியன் மக்க ளுக்கும் முக்கியமான சேவைகளை அளிக்கும் அதன் பங்கின் வெளிச்சத் தில், அதன் நிதியை இந்த சமயத்தில் வெட்டுவது ஏற்கனவே இன அழிப்பு என்ற ஆபத்திலிருக்கும் பாலஸ்தீனர்க ளின் வாழ்க்கைக்கு இருக்கும் ஆபத்தை அதிகரிக்கும்.’
மாலக்கின் இந்த ஓவியங்களை சுற்றுக்கு விட்டு, அவற்றை சுவர்களி லும், பொது இடங்களிலும் உலகம் முழுக்க உருவாக்குவதற்கு உங்களை நான் ஊக்குவிக்கிறேன். பாலஸ்தீன மக்கள் மீது தற்போது நடைபெறும் இன அழிப்பைப் பார்க்க மறுப்பவர்களின் இத யத்தை நாம் ஊடுருவிச் செல்வோம்.
தமிழில்: கி.ரமேஷ்