நியூயார்க்,டிச.22- காசாவில் உள்ள 23 லட்சம் பாலஸ்தீனர்களும் மோசமான உணவு நெருக்கடி சூழலை எதிர்கொள்கின்றனர். இந்த நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
ஐ.நா.வின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு அமைப்பு அறிக்கையின்படி, காசாவில் உணவுப் பாதுகாப்பின்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை உலகளவில் இதுவரை பதிவு செய்யப்படாத மிகப்பெரும் எண்ணிக்கை என தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஏமனில் பதிவு செய்யப்பட்ட பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக் கையை விட அதிகஎண்ணிக்கை காசாவில் பதிவாகியுள்ளதை இந்த அறிக்கை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
70 நாட்களுக்கு மேலாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 14 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 20 ஆயிரம் பாலஸ்தீனர்கள் படு கொலையாகி யுள்ளனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் படுகாய மடைந்துள்ளனர்.
மேலும் தொடர் குண்டுவீச்சு மூலம் சுகாதாரக் கட்டுமானம் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்ட நிலையில் நோய்த் தொற்று வெடிப்பு ஏற்பட்டு வருகிறது.மேலும் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதி நோக்கி இஸ்ரேல் ராணுவத்தால் விரட்டப்பட்ட 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மிக நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள். இது நோய் தொற்றின் தீவிரத்தை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.
நிவாரணப் பொருட்களை அழிக்கும் இஸ்ரேல்
மேலும் ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் சார்பில் கொடுக்கப் படும் உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொ ருட்களை இஸ்ரேல் ராணுவம் அனுமதிக்க மறுத்து, நிவாரண வாகனங்கள் செல்லும் பாதைகளில் குண்டுகளை வீசித் தாக்கி வருகிறது. கைப்பற்றப்படும் நிவாரணப்பொருட்கள் அடங்கிய சில வாகனங்களை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தீ வைத்து அழித்த கொடூரமும் நடைபெற்றது.
இந்த சூழல்களின் காரணமாக தற்போது காசாவில் உள்ள அனைத்து மக்களும் பட்டினி கிடக்க வேண்டிய சூழல் உருவாகி யுள்ளது. இஸ்ரேல் ராணுவம் நிவாரணப் பொருட்களை தடுத்து வரும் பின்னணியில் அடுத்த ஆறு வாரங்களில் காசாவில் உள்ள ஒவ்வொரு பாலஸ்தீனரும் கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொள்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடி தீவிரமாகும் நிலையில் கடுமையான பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.இந்த தீவிரமான ஆபத்து ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது என்று அறிக்கையிலும் எச்சரிக்கப் பட்டுள்ளது. இது மற்றொரு தீவிரமான பேரழிவிற்கு வழிவகுக் கும். இந்த நெருக்கடியை எதிர்கொள்ள மக்கள் கழுதைஇறைச்சி யை உண்பதாகவும், நோயாளிகள் உணவுக்காக பிச்சை எடுப்ப தாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.