பாலஸ்தீனத்தின் காசாவிலிருந்து தினந்தோ றும் வெளியாகும் எண்ணற்ற காணொலிக் காட்சி கள் பிரதான ஊடகங்களில் இடம் பெறுவதில்லை.
நகரமே சுடுகாடாக காட்சியளிக்கிறது. எங்கு பார்த்தாலும் உயிரற்ற உடல்கள். பள்ளிகள், மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள் அனைத்தும் ரத்தம் தோய்ந்த பிணவறைகளாக மாறிப் போயுள்ளன.
இடிபாடுகளுக்கிடையே தனது மகள்களை தேடும் தந்தைகள்; மொத்தக் குடும்பத்தினரும் கொல்லப்பட்டிருக்க தான் மட்டும் தப்பிப் பிழைத்த கைக்குழந்தைகள்; தாயையும், தம்பி யையும் இழந்து தானும் ரத்தவெள்ளத்தில் துடிக்கும் சின்னஞ்சிறு சகோதரிகள்; குண்டு வீச்சில் காயமடைந்த குழந்தைகளுக்கு சிகிச் சையளித்துக் கொண்டிருக்கும் போது அந்தக் குழந்தைகளுக்கு இடையே உயிரற்றுக் கிடக்கும் ஒரு சிறுமி தனது மகள் என்பதை அறிந்து கதறித் துடிக்கும் மருத்துவ தந்தை; அப்பாவும், தங்கையும் இறந்து கிடக்க, கதறித் துடிக்கும் தம்பியை அழுகையை அடக்கிக் கொண்டே அணைத்துக் கொள்ளும் சின்னஞ் சிறு அக்கா...
எத்தனை எத்தனை பயங்கரக் காட்சிகள்.
ஒவ்வொன்றும் நமது நெஞ்சை உலுக்கு கின்றன. கண் கலங்கச் செய்கின்றன. கதறி அழ வைக்கின்றன. ஒவ்வொருவரும் நமது குழந்தை யாக, நமது தாயாக, தந்தையாக, சகோதரியாக எண்ண வைக்கின்றன.
உலகமே பார்த்துக் கொண்டிருக்க, நம் கண் முன்பே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட சுமார் 15 ஆயிரம் பேரின் உயிரை உருவி விட்டது இஸ்ரேல்.
யாருமே, ஒன்றுமே செய்ய முடிய வில்லையே? ஐ.நா.சபை, அரபு நாடுகள், உலகின் மிகப் பெரிய நாடுகள், அவற்றின் கோடிக்கணக் கான மக்கள் வீதியில் இறங்கிப் போராடினா லும், ஒரு துளி அளவிற்குக் கூட இஸ்ரேல் இறங்கி வரவில்லையே?
இஸ்ரேலிய ஆட்சியாளர்களின் யூத இனவெறி மட்டுமா இதற்கு காரணம்? இல்லை. பாலஸ்தீனம் ஓர் எண்ணெய் பூமி. மொத்த எண்ணெய்யும் முதலாளித்துவ ஏகாதிபத்தியத் தின் லாப வேட்கைக்கு தேவை. அதனால்தான் ஏகாதிபத்தியம், இஸ்ரேலை ஏவிவிட்டு பாலஸ்தீன மக்களை வேட்டையாடுகிறது.
லாபம், மேலும் லாபம், மேலும் மேலும் லாபம் என்பதைத் தவிர வேறு எதுவும் அறியாத மூலதனம், ஈவிரக்கமற்றது; காட்டுமிராண்டித் தனமானது; ரத்த வெறி பிடித்தது; அதற்கு மனித நேயம் கிடையாது; குழந்தைகளை கொஞ்சத் தெரியாது; லாப வேட்டைக்கு எதிராக எவர் நின்றாலும் ரத்த வெள்ளத்தில் ஆழ்த்தும்.
ஏகாதிபத்திய மூலதனம் நின்று ஆடுகிறது. பாட்டாளி வர்க்கமே, இது உனக்கு ஒரு சவால்!