பாலஸ்தீனத்தின் ஹமா ஸுக்கு எதிராக போர் தொடங்கியதாக அறிவித்து 7 நாட்களாக காசா முனை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான் தாக்குதலில் அடுக்கு மாடி குடியிருப்புகள் பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளன. ஐ.நா. பள்ளி களிலும், அருகில் உள்ள கட்டடங்களி லும் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். இருதரப்பிலும் அப்பாவி மக்கள் உயி ரிழப்பு எண்ணிக்கை 2,400-ஐ தாண்டி யுள்ள நிலையில், தரைவழி தாக்குதலை மேற்கொள்ள இஸ்ரேல் ராணுவம் ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவி கள் வெள்ளியன்று பஷீர் பாக் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே போரா ட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக முழக்கங் களை எழுப்பினர். கைகளில் பதாகை களை ஏந்தி இஸ்ரேலை கண்டித்து கோஷ மிட்டனர். இதையடுத்து மாணவிகளை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஏற்கெனவே உத்தரப்பிரதேச மாநி லத்தில் உள்ள அலிகார் பல்கலைக்கழ கத்தின் மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல்கலைக்கழக வளாகத் திற்குள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் போராடி யவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள் ளது யோகி அரசு.