(துட்சி இனமக்கள்) கரப்பான் பூச்சிகள். நாங்கள் உங்களைக் கொல்வோம்”
“அரேபியர்கள் பாட்டிலுக்குள் இருக்கும் மது குடித்த கரப்பான்பூச்சி போன்றவர்கள்”
முதல் மேற்கோள், ருவாண்டா நாட்டின் வானொலி யில் மீண்டும் மீண்டும் ஒலிபரப்பப்பட்ட வாக்கியம்; அதுவே, அந்த நாட்டின் துட்சி மக்களை இன அழித்த லுக்கு இட்டுச் சென்றது.
இரண்டாவது, இஸ்ரேல் இராணுவத்தின் முன்னாள் கூட்டுப்படைத் தலைவர் ஜெனரல் ரபேயல் ஈதன் 1983ல் இஸ்ரேலிய நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசியது.
ருவாண்டாவின் வெறுப்பைக் கக்கிய வானொலி ஓராண்டு மட்டுமே(1993-94) செயல்பட்டது, இருப்பி னும் இத்தகைய தூண்டுதலின் விளைவு, நவீன மனிதகுல வரலாற்றில், மிகவும் துயரமிகு சம்பவ மாக மாறியது; அது துட்சிகளின் இன அழித்தலுக்கு இட்டு சென்றது.
இந்த ”இனப்படுகொலை வானொலி”யுடன், இஸ்ரேலிய-அமெரிக்க-மேற்கத்திய நாடுகள் பாலஸ்தீனர்கள் குறித்து மேற்கொள்ளும் பிரச்சா ரத்தை ஒப்பிடுங்கள்; அதே மொழி; அதே இழி வார்த்தைகள்தான்.
பலரும் மறந்துவிடுகின்றனர், தற்போதைய அக்டோபர் 7 காசா மீதான போருக்கு முன்பே, ஏன் இஸ்ரேல் என்ற ஒரு நாடு உருவான 1948க்கும் மிகவும் முன்னதாகவே, பாலஸ்தீனர்கள் குறித்த யூத இனவாத இஸ்ரேலிய வர்ணனைகள், எல்லாக் காலத்தி லும், இனரீதியாகவும், அவர்களை மனிதர்களாக மதிக் காமலும், அவர்களின் இருத்தலை மறுப்பதாகவும், ஏன் பல சமயங்களில் ஒட்டுமொத்தமாக அந்த இனத் தையே அழிக்கும் வெறிக்கூச்சலாகவுமே இருந்து வந்துள்ளது.
வரலாறு நெடுகிலும்...
இஸ்ரேலிய வரலாற்றின் ஏதாவது ஒரு காலத்தை தேர்ந்தெடுத்து, அந்த காலத்தில் இஸ்ரேலிய அதிகாரி கள், அமைப்புகள், ஏன் அறிவு ஜீவிகள் ஆகியோர் தெரி வித்த அரசியல் கருத்துகளைப் பார்த்தால், எல்லா காலத்திலும் ஒரே முடிவுக்குத்தான் வர முடியும்; இஸ்ரேல் எல்லாக் காலத்திலும், உணர்ச்சியைத் தூண் டக்கூடிய வெறுப்பு பேச்சுகளையே கட்டமைத்து வந்துள்ளது, அதன் மூலம் எல்லாக் காலங்களிலும், பாலஸ்தீனர்களின் இன அழித்தலுக்கான ‘நியா யத்தை’ உருவாக்கி வந்துள்ளது.
தற்போதுதான் பெரும்பாலான மக்களுக்கு இது தெளிவாகப் புலப்படுகிறது.
”பாலஸ்தீனர்களுக்கு எதிராக இன அழிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது” என அக்டோபர் 19 அன்று வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், இந்த “இன அழித்தல் அபாயம்” சமீபத்திய நிகழ்வுகளால் ஏற்பட்டதன்று.
இஸ்ரேல் தோன்றுவதற்கு முன்பாகவே, யூத இனவெறியர்கள் பாலஸ்தீனம் என்ற ஒரு நாடு இருப்ப தையே மறுத்து வந்தனர். தற்போதும் பல யூத இன வெறியர்கள் அதே போன்று தான் பேசி வருகின்றனர்.
அக்டோபர் 7 ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலியர்கள் பயன்படுத்திய மொழி, அவர்கள் மட்டுமல்ல பல அமெரிக்கர்கள் பயன் படுத்திய மொழியும், உருவாக்கிய சூழலும் இஸ்ரே லின் காட்டுமிராண்டித்தனமான பதில் தாக்குதலுக்கு முன்னோட்டமாக இருந்தது.
காசாவிற்கு எதிரான இஸ்ரேல் போரின் முதல் எட்டு நாட்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை, 2014ல் இஸ்ரேல் நடத்திய, மிக நீண்டதும், மிகவும் அழிவுதந்ததுமான போராக கருதப் படும், “பாதுகாப்பு விளிம்பு” என்ற போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளைவிட அதிகம் ஆகும்.
டிசிஐ-பாலஸ்தீனம் என்ற அமைப்பு பதிவு செய்துள் ளபடி, ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு பாலஸ் தீனக் குழந்தை கொல்லப்படுகிறது, பாலஸ்தீன சுகா தார அமைச்சகத்தின்படி, காசாவில் கொல்லப் பட்டவர்களில் 70 சதவீதத்திற்கும் மேலானவர்கள் பெண்களும் குழந்தைகளுமாவர்.
இஸ்ரேலைப் பொறுத்தவரை இந்த விவரங்கள் எதையும் பொருட்படுத்தாது. இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்; இவர் பல சமயங்களில், மிதமான போக்கை கடைப்பிடிப்பவர் என்று வர்ணிக்கப்படு கிறது. இவரது கருத்து, “(இஸ்ரேலுக்கு எதிரான தாக்கு தலில்) காசா குடிமக்கள் பங்கெடுக்கவில்லை என்பது முற்றிலும் உண்மையல்ல. அவர்களே எங்களின் சட்டப்பூர்வமான தாக்குதல் இலக்குகள்; காரணம் அவர்கள் அந்த தீய சக்திகளுக்கு(ஹமாஸ்) எதிராக கிளர்ந்து எழுந்திருக்க வேண்டும், அவர்கள் அந்த தீய ஆட்சிக்கு எதிராக போராடியிருக்க வேண்டும்“ என்றார். ஆகவே, “அந்த முழு நாடுமே அதற்கு பொறுப்பாகும்” என்றார் ஹெர்சக்.
பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிகுத் கட்சி யின் உறுப்பினரான ஏரியல் கால்நெர், இஸ்ரேலின் காசா போருக்குப் பின்னால் உள்ள இலக்கைப் பற்றி கீழ்கண்டவாறு தெரிவிக்கிறார்: “தற்சமயம் ஒரே ஒரு இலக்குதான்: அது ‘நக்பா.’ இந்த நக்பா 1948ஆம் ஆண்டு நக்பாவை ஒன்றுமில்லாததாக்கிவிடும்”(நக்பா என்பது 1948ல், இஸ்ரேல் உருவான போது பல்லா யிரம் பாலஸ்தீனர்களை இஸ்ரேலியர்கள் வீடுகளில் புகுந்து குடும்பம் குடும்பமாக கொன்றழித்து அவர்களது வாழ்விடங்களை இஸ்ரேலாக அறிவித்த கொடிய நிகழ்வு.
இந்த உணர்வையே இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யாவவ் காலண்ட், வெளிப்படுத்தினார். இந்த அமைச்சர்தான் இஸ்ரேலின் போர்ப் பிரகட னத்தை அமல்படுத்துபவர். “நாங்கள் மனித மிருகங்க ளோடு போரிட்டுக் கொண்டிருக்கிறோம், ஆகவே அதற்கு தகுந்த முறையில் நாங்கள் செயல்படுவோம்” என அக்டோபர் 9ஆம் தேதி இவர் தெரிவித்தார். அதன் பொருள் என்ன வென்றும் அறிவித்தார்: “அங்கு மின்சாரம், உணவு, எரிபொருள் எதுவும் இனி இருக் காது. அனைத்துமே மூடப்படும்” என்றார். அத்துடன் ஆயிரக்கணக்கான இறந்துபோன சிவிலியன்களும்.
அனைத்து பாலஸ்தீனர்களையும் குற்றவாளியாக்கி...
இஸ்ரேலின் உயர் அரசியல் பொறுப்பாளர்கள் அக்டோபர் 7 ஆம் தேதி நடத்தப்பட்ட ஹமாஸின் தாக்குதல் சம்பவத்திற்கு அனைத்து பாலஸ்தீனர்க ளும் கூட்டாக பொறுப்பு என்று ஏற்கனவே அறிவித்து விட்டதால், எவ்வித கருணையையும் பெறுவதற்கு (அவர்களுக்கு) தகுதியில்லை என்று இஸ்ரேல் அறி வித்து விட்டது.
எதிர்பார்த்தது போலவே, அமெரிக்காவிலும், இதர மேற்கத்திய நாடுகளிலும் இஸ்ரேலின் ஆதரவாளர்கள் இந்த கோஷ்டி கானத்தில் இணைந்து, மிகவும் வன் முறையைத் தூண்டக்கூடியதும், பாலஸ்தீனர்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளையும் பயன்படுத்து கின்றனர். அதன் மூலம் இஸ்ரேலின் அரசியல் நியா யங்களை சாதாரண மக்களுடன் வலுவாக இணைக் கின்றனர்.
நிக்கி ஹேலியின் வெறிப்பேச்சு
அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டி யிடும் வாய்ப்புக்காக நம்பிக்கை கொண்டிருக்கும் நிக்கி ஹேலி, பாக்ஸ் நியூஸ் ஊடகத்தில், அக்டோபர் 10 அன்று பேசுகையில், “ஹமாஸ் தாக்குதல் என்பது இஸ்ரேலின் மீது மட்டுமல்ல; அது அமெரிக்காவின் மீதான தாக்குதலும் ஆகும்” என்று அறிவித்தார். அதற்குப் பிறகு அவர் தனது கொடூரமான பிரகட னத்தை வெளியிட்டார், அவர் தொலைக்காட்சி காமிரா வை நேராக நோக்கி, ”நேதன்யாகு, அவர்களை ஒட்டு மொத்தமாக அழித்துவிடுங்கள், ஒட்டு மொத்தமாக அழித்துவிடுங்கள்… ஒட்டு மொத்தமாக அழித்து விடுங்கள்” என்று வெறிக் கூச்சலிட்டார்.
அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது வெளியுறவு அமைச்சர் ஆன்டணி பிளிங்கன் இதே வார்த்தைகளை பிரயோகிக்கவில்லை என்றா லும், அவர்கள் இருவருமே, அக்டோபர் 7 ஆம்தேதியை (அமெரிக்காவின்) செப் 11(9/11) தாக்குதலோடு ஒப்பிட்ட னர். இந்த ஒப்பீட்டிற்கு பின்னால் உள்ள அர்த்தத்தைப் புரிந்து கொள்ள விளக்கம் தேவையில்லை.
அமெரிக்காவின் செனட் உறுப்பினர் லிண்ட்சி கிரஹாம், அமெரிக்காவின் பிற்போக்காளர்கள்(கன்சர் வேட்டிவ்கள்) மற்றும் மத ஆதரவாளர்களைத் திரட்டி, அக்டோபர் 11 அன்று அதே பாக்ஸ் நியூஸ் தொலைக் காட்சியில், “நாங்கள் இங்கு ஒரு மதப் போரில் இருக்கி றோம். நாங்கள் (உங்களின் வசிப்பிடங்களை) தரைமட்டமாக்குவோம்” என்று கொக்கரித்தார்.
தினந்தோறும் வெறிக் கூச்சல்கள்
இதைவிட அதிகமாக, இதற்கு சற்றும் சளைக்காத வெறிச் கூச்சல்கள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன. அவை நாள் முழுவதும் அமெரிக்க, ஐரோப்பிய தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் ஒலிபரப் பப்படுகின்றன. காசா மக்களை இஸ்ரேல் ஒட்டு மொத்தமாக அழித்துக் கொண்டிருக்கிறது, அது ஆயி ரக்கணக்கான வீடுகளை, மருத்துவமனைகளை, மசூதிகளை, தேவாலயங்களை, பள்ளிகளை தரை மட்டமாக்கிக் கொண்டிருக்கிறது. உண்மையில் அது மற்றொமொரு வலிமிகுந்த ‘நக்பா’ அத்தியாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
கோல்டா மேயர் (இஸ்ரேலியப் பிரதமர் 1969-74), “பாலஸ்தீனர்கள் என்பவர்களே இருந்ததில்லை” என்று கூறியதில் இருந்து, மீனச்சம் பெகினின்(1977-83 இஸ்ரேல் பிரதமர்), “பாலஸ்தீனர்கள் என்பவர்கள் இரண்டு காலால் நடக்கும் பயங்கர மிருகம்”(1982); எலி பென் தாகனின், “பாலஸ்தீனர்கள் மிருகங்களைப் போன்றவர்கள், அவர்கள் மனிதர்களல்ல “(2013ல் கூறி யது)- போன்ற கணக்கற்ற இனவாத மற்றும் மனிதர்க ளை இழிவுபடுத்தும் வெறிக் கூச்சல் வரை யூத இனவெறி விவாதங்கள் மாறாமல் இருக்கின்றன.
‘சவுண்ட்டர் பஞ்ச் இதழில் வெளியான கட்டுரை கட்டுரையாளர் : பத்திரிக்கையாளர், ‘பாலஸ்தீன் கிரானிக்கிள்’ என்ற பத்திரிக்கையின் ஆசிரியர். தமிழில் : க.ஆனந்தன்