இஸ்லாமாபாத், ஏப்.10- பயங்கரவாதச் செயலுக்கு நிதி திரட்டிய வழக்கு ஒன்றில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கர வாத இயக்கத்தின் நிறுவனரான ஹபீஸ் சயீத்திற்கு பாகிஸ்தான் நீதி மன்றம் 31 ஆண்டுகள் சிறை தண் டனை விதித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு நவம்பரில் மும்பை தாக்குதலில் பலபேர் பலி யாவதற்கு மூளையாக செயல் பட்ட ஹபீஸ் சயீத் தற்போது பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா என்ற இயக்கத்தை நடத்தி வரு கிறார். 70 வயதான ஹபீஸ் சயீத் ஏற்கனவே வேறொரு வழக்கில் 36 ஆண்டு கால சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் பயங்கரவாதச் செயலுக்கு நிதி திரட்டிய வழக்கில் ஹபீஸ் சயீத்தின் சொத்துக்களை முடக்கவும் ஹபீஸ் சயீத் கட்டிய மசூதி மற்றும் மதரஸா ஆகிய வற்றை அரசு கையகப்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் மதிப்பில் ரூ.3.40 லட்சம் பணம் அபராதமும் விதித்து லாகூர் பயங்கரவாத தடுப்பு நீதி மன்ற நீதிபதி நீதிபதி இஜாஸ் அக மது புட்டார் தீர்ப்பளித்தார். ஹபீஸ் சயீத்,இவரது மகன் ஹபீஸ் தல்லா சயீத் இருவரும் லஸ்கர் இ தொய்பா அமைப்புக்கு ஆள்தேர்வு செய்வது, இந்தியா வில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிடுவது, நிதியுதவி செய்வது ஆகிய செயல்களில் ஈடு பட்டு வருவதாக இந்திய உள் துறை அமைச்சகம் தெரிவித்துள் ளது. அதனால் சட்டவிரோதச் செயல் கள் தடுப்புச் சட்டப்படி ஹபீஸ் தல்லா சயீத்தைப் பயங்கரவாதி யாக அறிவித்துள்ளது.