world

img

பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு : இன்று பதவிப் பிரமாணம்

இஸ்லாமாபாத்,மார்ச்.3- பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு  அந்நாட்டு ராணுவம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்வாகியுள்ளார். இதன் மூலம்  இரண்டாவது முறையாக பிரதமராக மார்ச் 4 (இன்று) பதவியேற்க உள்ளார்.  வாக்குப்பதிவு துவங்கிய பிப்ரவரி 8 அன்று  இணையதள முடக்கம், வாக்குப் பதிவில் குளறுபடி, கலவரங்கள் ஏற்பட்டன. அந்த பதற்றங்கள் குறையாமல்  நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக  முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தினர்.  தேர்தல் முடிவில் இம்ரான்கானின் கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்றது. எனினும் ஆட்சி அமைக்கும் வகையிலான பெரும்பான்மையும், அந்நாட்டின் ராணுவத்தின் ஆதரவும் அக்கட்சிக்கு இல்லை. மேலும் பல்வேறு ஊழல் வழக்குகளில் இம்ரான்கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும் இம்ரான் கட்சி சார்பில் ஓமர் அயூப் கான் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்டார்.  இந்நிலையில் பாகிஸ்தான் அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியும் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சியும், இம்ரான் கட்சியைத் தடுக்கும் நோக்கில் கூட்டணி அமைந்தன. இக் கூட்டணி சார்பில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும் பாகிஸ்தான் அரசின் இடைக்கால பிரதமராக 2023 ஆகஸ்ட் மாதம் வரை பதவி வகித்தவ ருமான ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் வேட்பாள ராக முன்மொழியப்பட்டு வெற்றி பெற்றுள் ளார். இதன் மூலம் இரண்டாவது முறையாக  பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.  தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராகவும் அதுகுறித்து முறையான விசாரணை கோரியும் இம்ரான் கான் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பிப்.29 வியாழக்கிழமை அன்று அந்நாட்டின்  நாடாளுமன்றத்தில் பிரதமர் தேர்வுக்கான  வாக்கெடுப்பு பலத்த பாதுகாப்பு டன்  நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, வருகிற மார்ச் 9 அன்று  ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த  தேர்தலில்  பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் சார்பில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமர் பெனாசிர் புட் டோவின் கணவருமான ஆசிப் அலி சர்தாரி ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்டுள் ளார். இந்நிலையில் இம்ரானின் கட்சியின் சார்பாக பஷ்துன்க்வா மில்லி அவாமி கட்சியின் தலைவர் மம்முத் கான் அச்ஹாக்சாய்  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.