world

img

கைகோர்த்த எதிரிகள்: மீண்டும் பாக். பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத், பிப். 14 - பாகிஸ்தான் நாடாளு மன்றத் தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை (133 இடங்கள்) கிடைக்காத நிலை யில், தெக்ரீ-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கானை (101 இடங்கள்) ஆட்சியமைக்க விடக்கூடாது என்ற ஒரே கார ணத்திற்காக இதுவரை ‘அர சியல் எதிரிகளாக’ இருந்து வந்த நவாஸ் ஷெரீப்பும், பிலா வல் பூட்டோவும் கைகோர்த்தனர். 

கோதரர் ஷெபாஸ் ஷெரீப்பி ற்கு (பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சி) பிரதமர் பதவி, மகள் மரியம் நவாஸிற்கு பஞ் சாப் முதல்வர் பதவி, வெளி யிலிருந்து ஆதரவளிக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சித்  தலைவர் பிலாவல் பூட்டோ வின் தந்தை ஆஷிப் அலி ஜர்தாரிக்கு ஜனாதிபதி பதவி என்று பதவிப் பங்கீட்டையும் பேசி முடித்தனர்.

அதனடிப்படையில், ஷெ பாஸ் ஷெரீப் மீண்டும் பாகிஸ் தான் பிரதமராக பதவியேற்க உள்ளார். எதிர்க்கட்சி யாக செயல்படுவோம் என இம் ரான்கான் அறிவித்துள்ளார்.