பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் ஒரு தொகுதியில் நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கையின் போது மோதல் உருவானது. பலுசிஸ்தான் அவாமி கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய இரண்டு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த மோத லில் இரண்டு பேர் படுகொலையாகியுள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். முடிவில் மாற்றம் செய்ததற்காக நடத்தப்பட்ட போராட் டத்தில் இந்த மோதல் வெடித்தது.