பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் திட்டமிட்டபடி பிப்ரவரி 8 அன்று நடைபெறும் என அந்நாட்டு தலைமை தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் ராஜா, தற்காலிக உள்துறை அமைச்சர் கோஹர் எஜாஸ் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீதான வழக்குகளில் அவருக்கு 24 ஆண்டுகள் தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பல இடங்களில் வன்முறைகள் நடந்து வருகின்றன. பாதுகாப்பு சவால்கள் இருந்தாலும் தேர்தல் குறிப்பிட்ட நாளில் நடக்கும் என கூறப்பட்டுள்ளது.