world

img

பாக்.தேர்தல் இணையதள முடக்கத்துடன் நடந்து முடிந்தது

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு பிப்.8 அன்று காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. நாட்டின் பல இடங்களில் எழுந்த கடு மையான வன்முறை மற்றும்  குண்டு வெடிப்புகளுக்கு இடையே  எந்த மாற்றமும் இன்றி தேர்தலை நடத்தி முடித் துள்ளது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்.

பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்க துணை ராணு வம், ராணுவம் என  சுமார் 6,50,000 பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  மேலும் பாதுகாப்பு கருதி ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடனான  தனது எல்லையை பாகிஸ்தான் மூடியது.

பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்க துணை ராணு வம், ராணுவம் என  சுமார் 6,50,000 பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.  மேலும் பாதுகாப்பு கருதி ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடனான  தனது எல்லையை பாகிஸ்தான் மூடியது.

மேலும் வாக்குப்பதிவு  அன்றும் தென் கிழக்கு பாகிஸ்தான் நகரான லஜ்ஜாவில் குண்டு வெடிப்பு  நடந்துள்ளது. அத்தாக்குதலில்  இருவர் பலியாகியுள்ள னர். மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். வட மேற்கு கைபர் பக்துன்க்வா மாநிலத்தில் ஒரு வாக்குப் பதிவு மையத்தில் நடத்த துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அந்த தாக்குதலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி மரணமடைந்ததாக தெரி விக்கப்பட்டுள்ளது.