world

img

“உதைக்க” உதவும் பாகிஸ்தான்

1930 ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக கால்பந்து உலகக்கோப்பைக்கான போட்டி நடந்தது. இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினாவும், உருகு வேயும் ஆடின. யாருடைய பந்தை வைத்து விளையா டலாம் என்று இரு அணிகளுக்குமிடையில் வாக்கு வாதம் மூண்டது. பூவா, தலையா போட்டுப் பார்த்த னர். அதில் வென்ற அர்ஜெண்டினாவின் பந்தை வைத்து முதல் பாதியிலும், உருகுவேயின் பந்தை வைத்து இரண்டாவது பாதியிலும் விளையாடினர்.

கால்பந்து முறையாக விளையாடுவதற்கு முன்பாக சில நாடுகளில் மண்டையோட்டை பந்தாக வைத்து  விளையாடியி ருக்கிறார்கள். ஜான்சி ராணியும் ஆங்கி லேய ராணுவத்தில் இருந்த சிப்பாய்களும் 1857 ஆம் ஆண்டில் கலகம் நடத்திக் கொண்டிருக்கை யில்தான் இங்கிலாந்தில் முதல் கால்பந்து கிளப் உரு வானது. 1863 ஆம் ஆண்டில் விதிகள் இயற்றப் பட்டன. இன்றைக்கு உலகிலேயே மிகப்பெரிய விளை யாட்டாக மாறியிருக்கிறது. உலகம் முழுவதும் 26.50 கோடி கால்பந்து ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். 400 கோடிப் பேர் விளையாட்டைப் பார்த்து ரசிக்கி றார்கள். கத்தாரில் நடக்கவிருக்கும் இறுதியாட்டங்களை நேரிலும், நேரலைகளிலும் நூறு கோடிக்கும் மேற் பட்டவர்கள் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கால்பந்து ரசிகர்களின் நாயகர்களான மெஸ்சி மற்றும் ரொனால்டோ ஆகிய இருவருக்கும் இது கடைசி உலகக் கோப்பைப் போட்டிகளாக இருக்கப் போகிறது. 

முதல் உலகக் கோப்பைப் போட்டியில் ஏற்பட்ட பந்து சர்ச்சை தற்போது இல்லை. உலகக் கால் பந்து சம்மேளனத்தின் அதிகாரப்பூர்வ பந்துகள் அனைத்தும் நமது அண்டை நாடான பாகிஸ்தானில் தயாராகிறது. பாகிஸ்தானின் சியால்கோட்டில் ஆயிரம் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சத்து 50 ஆயிரம் கால்பந்துகள் உரு வாகின்றன. இங்கு உருவான “அல்-ரிஹ்லா” பந்து களைத்தான் கத்தார் உலகக்கோப்பைப் போட்டிகளின் போதும் உதைக்கப் போகிறார்கள்.

கணேஷ்