நியூயார்க், செப்.24- அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதி பதியும் குடியரசு கட்சி வேட்பாளருமான டிரம்பை விட ஜனநாயக கட்சியின் வேட்பாளரான கமலா ஹாரிசுக்கு பல முன்னணி கார்ப்பரேட் நிறுவ னங்களிடமிருந்து அதிக கோடிகள் நன்கொடைகளாக வந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் நுழைந்த பிறகு அவருக்கான நன்கொடைகள் அதிகரிக்கத் துவங்கின. இது டிரம்பிற்கு போட்டியாக அமைந்தது. இந்த நன்கொடைகளும் கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிக ஆதரவும் தற்போது கமலா ஹாரி ஸின் தேர்தல் வெற்றியையும் ஒரு படி முன்னோக்கி நகர்த்தியுள்ளது எனவும் கூறப்படுகிறது.
ஜான்சன் & ஜான்சன், பிரவுன் & பிரவுன், நெட்பி ளிக்ஸ், முகநூல், கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள், அமேசான், ஜே.பி. மார்கன் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்கள் கமலா ஹாரிசுக்கு பல நூறு கோடி டாலர்களை அள்ளிக்கொடுத்துள்ளன.
2023 ஜனவரி முதல் 2024 ஆகஸ்ட் 31 க்கு இடையில் கமலா ஹாரிஸ் மற்றும் பைடன் ஆகியோரது பிரச்சா ரக் குழு மொத்தம் 4,800 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை வசூலித்துள்ளது. ஆனால் டிரம்பின் பிரச்சாரக் குழு அதில் பாதியாக 2,500 கோடி ரூபாய்க்கும் குறை வாகவே வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தேர்தலில் நான் தோற்றால் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன். ஆனால் இம்முறை நான் தோல்வி யடைய மாட்டேன் என டிரம்ப் பேசியுள்ளது குறிப்பி டத்தக்கது.