world

img

இஸ்ரேலுக்கு ராணுவத்தை அனுப்ப 55 சதவீத அமெரிக்கர்கள் எதிர்ப்பு

நியூயார்க்,ஆக.7- பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்ய இஸ்ரேலுக்கு அமெரிக்கா ராணுவ வீரர்களை அனுப்புவதற்கு 55  சதவீத அமெரிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜூன் 21 முதல் ஜூலை 1 வரை உலக விவகாரங்க ளுக்கான சிகாகோ கவுன்சில் நடத்திய பொதுக் கருத்துக் கணக்கெடுப்பின்படி இஸ்ரேலை அதன் அண்டை நாடுகள் தாக்கினால் அதை பாதுகாக்க அமெரிக்கா ராணுவத்தையும் கடற்படை கப்பல்க ளையும், ராணுவ  வீர்களையும் அனுப்புவதை 55 சதவீத அமெரிக்கர்கள் ஆதரிக்கவில்லை என தெரிய வந்துள்ளது. 

மேலும் இந்த ஆய்வில்  41 சதவீத அமெரிக் கர்கள் ராணுவத்தை  அனுப்ப ஆதரித்ததாகவும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.மேலும் மேற்கு ஆசியாவில் அமெரிக்கப் படைகளை நிலை நிறுத்துவதற்கு   42 சதவீத அமெரிக்கர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். 

இந்த ஆய்வு  அமெரிக்காவின் ஏகாதிபத்திய மற்றும் போர் பொருளாதார கொள்கைகள் அந்நாட் டில் குறிப்பிட்ட அளவு மக்களையும் மனிதநேயத்தி ற்கு எதிராக நிறுத்தியிருப்பதை உலகிற்கு காட்டி யுள்ளது. 

இந்த ஆய்வு ஈரானிலும், லெபனானிலும்  ஹமாஸ் மற்றும்  ஹிஸ்புல்லா அமைப்பின் தலை வர்களை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்வ தற்கு முன் எடுக்கப்பட்டதாகும்.

இந்த ஆய்வில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், 2010 முதல்  சிகாகோ கவுன்சில் நடத்தும் ஆய்வில் இந்த ஆண்டு நடத்திய ஆய்வில் தான் அதிகளவிலான மக்கள் இஸ்ரேலைப் பாது காக்க அமெரிக்க ராணுவத்தை அனுப்பக்கூடாது என தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் அதிக ரித்துள்ள வேலையின்மை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகள் அதிகரித்துள்ள சூழலில் மக்க ளின் பதில்கள் அவர்களின் தேவையையும் அர சாங்கம் மீதான அதிருப்தியையும் காட்டுவதாக தெரிவித்துள்ளனர். 

எனினும் அமெரிக்க அரசு மக்களின் கருத்துக் களை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இஸ்ரே லுக்கு ஆயுதங்கள்  கொடுப்பது, விமானம் தங்கி போர்கப்பல்களை அனுப்புவது என அமெரிக்கர் களின் வரிப்பணத்தை தொடர்ந்து  போருக்காக பயன்படுத்தி வருகிறது.