நியூசிலாந்தில் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்
நியூசிலாந்தின் வெலிங்டன் நகர் அருகே 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏற்கனவே புயல் மற்றும் வெள்ளத்தால் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெறும் அச்சத்தில் உள்ளனர்.மேலும் 1,400 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலநடுக்கதால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமிக்கான எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை