பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பர்வேஸ் முஷாரப் கவலைகிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பர்வேஸ் முஷாரப் வெள்ளிக்கிழமை காலமானார் என்ற செய்தி பாகிஸ்தானில் உள்ள சில ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல ஊடகமான வக்த் நியூஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பர்வேஸ் முஷாரப் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தது. இருப்பினும் சில நிமிடங்களில் அந்த ட்வீட் நீக்கப்பட்டது.
இதற்கிடையில் பாகிஸ்தானின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பர்வேஸ் முஷாரப்பின் மறைவு செய்தி உண்மையல்ல என்று விளக்கம் அளித்துள்ளார்.
துபாயில் உள்ள ஒரு மருத்துவமனையில் முஷாரப் இப்போது வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.