ஜெர்மன் சோசலிச இயக்கத்தின் தலைவரான பெர்டினன்ட் லஸ்ஸால், கார்ல் மார்க்ஸ் பற்றாளர். இவர் வழக்கறி ஞராகவும் பணியாற்றினார்.
ஜெர்மன் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக, இவர் 1863 ஆம் ஆண்டு, Allgemeiner Deutscher Arbeiterverein (ADAV) என்ற பெய ரில் ஜெர்மன் தொழிலாளர்கள் பொதுச் சங்கம் ஒன்றை நிறுவினார். ஜெர்மனின் முதல் தொழி லாளர் கட்சியாக இது திகழ்ந்தது. ஜெர்மன் தொழிலாளர் இயக்கத்திற்காக இரண்டு இலக்குகளை கூறினார். அதில் ஒன்று, உலகளாவிய வாக்குரிமை; மற்றொன்று, அரசு நடத்தும் உற்பத்தியாளர் கூட்டுறவு அமைப்புகளின் அறிமுகம் ஆகும்.
1848 புரட்சிகர இயக்க காலத்தில், கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், எழுத்தாளர் களுடன் தொடர்பு கொண்டிருந்தார். தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடிய இவர், ஜெர்மன் அரசியலில் தீவிரமாக பங்கெடுத்தார். கார்ல் மார்க்சின் சமகாலத்தவரான லஸ்ஸால், தனது 39 வயதில் 1864 இல் காலமானார்.
லஸ்ஸால் இறந்து சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு, சோசலிச கோட்பாட்டை காரணம் காட்டி, நாஜிக்கள் இவரது அனைத்து படைப்புகளையும் (Assisenreden மற்றும் Arbeiter-programm ஆகிய படைப்புகளைத் தவிர) தீயிட்டு அழித்தனர். லஸ்ஸாலின் படைப்புகளை அழித்தாலும், அவரது தத்துவார்த்த, அமைப்புரீதியான, நிகழ்வுகள் மற்றும் நடைமுறை பங்களிப்புகள் மூலமாக இன்றும் நிலைத்திருக்கின்றன. உழைக்கும் மக்களுக்காக போராடிய இவரது கல்லறையில், “லஸ்ஸால் ஒரு போராளி; சிந்தனையாளர்” என எழுதப்பட்டிருக்கிறது.