பெர்லின், மே 26- உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங் களில் அமெரிக்காவின் கட்டளைகளை நிறை வேற்றி வருவதால் ஐரோப்பாவின் பல்வேறு நாடு களைப் போன்று ஜெர்மனியும் பெரும் நெருக்கடி யில் சிக்கியிருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடை யிலான சண்டை தொடங்கி 458 நாட்கள் ஆகியுள்ள நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான நிலைபாட்டை எடுக்குமாறு அமெரிக்கா ஐரோப்பிய நாடு களுக்கு ஆணையிட்டது. அதனடிப்படையில் பல நாடுகள் ரஷ்யா மீது தடைகளை விதித்துள்ளன. அந்தத் தடைகள் ரஷ்யாவுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை விட, அந்தந்த நாடுகளுக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் நடப்பாண்டின் முதல் மூன்றாண்டுகளில் 0.3 விழுக்காடு அள வுக்கு பொருளாதாரம் சரிவைச் சந்தித்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளாக எதிர்மறை வளர்ச்சியை ஜெர்மனி பெற்றுள்ள தாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ மத்தியப் புள்ளி யியல் முகமை தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட மந்தநிலையை அடையும் இடத்தில் ஜெர்மனி இருக்கிறது. அதோடு, நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை என்ற அதிர்ச்சிகரமான தக வலையும் இந்த முகமை வெளியிட்டிருக்கிறது. மந்த நிலைக்கு போவதில் இருந்து மயிரிழை யில் தப்பித்திருக்கிறது என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
மார்ச் மாதத்தில் தொழில் உற்பத்தி சரிவைக் கண்டது. குறிப்பாக, வாகன உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு ஒட்டுமொத்த தொழில் உற்பத்தியின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. எவ்வளவோ புள்ளிவிபரங்களைத் திருத்திப் பார்த்தார்கள். கடைசியில் எந்த பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று பயந்தோமோ, அந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டது என்று ஐ.எஸ்.ஜீ. நிறுவனத்தின் முதன்மை பொரு ளியல் வல்லுநர் கார்ஸ்டென் பிரெஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த கோடைக்காலத்தி லேயே இத்தகைய பாதிப்புகள் இருக்கலாம் என்று எதிர்பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். இத்தனைக்கும் சாதகமான சில அம்சங்கள் இருந்தன என்றும், கொரோனா பாதிப்புக்குப் பிறகான சீனப் பொருளாதார வளர்ச்சியால் பல்வேறு வேலைகள் ஜெர்மனி நிறுவனங் களுக்குக் கிடைத்தன என்றும் சுட்டிக்காட்டி பிரெஸ்கி, இவற்றையெல்லாம் தாண்டி அபாய கட்டத்தைத் தாண்ட ஜெர்மனியால் இயலவில்லை என்று கூறுகிறார்.
உக்ரைன் நெருக்கடியால் எரிபொருள் விலை உயர்ந்ததால் வர்த்தக நிறு வனங்கள் மற்றும் குடும்பங்கள் பெரும் பாதிப்பு களைச் சந்தித்தன. வர்த்தகமும் வீழ்ச்சி யடைந்தது. சமாளிப்பு இத்தகைய புள்ளிவிபரங்களை கண்டு யாரும் பயப்படத் தேவையில்லை என்று ஜெர்மனி யின் அதிபர் ஓலப் ஷோல்ஸ் கூறியுள்ளார். ஒரு தொடர் மந்தநிலையை நோக்கி ஜெர்மனி சென்று கொண்டிருக்கிறது என்ற வல்லுநர்களின் கருத்தை அவர் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. “ஜெர்மனியின் பொருளாதாரத்திற்கான வாய்ப்புகள் நன்றாகவே உள்ளன. தொடர் மந்த நிலை ஏற்படாது” என்றும், அது குறித்த மதிப்பீடுகள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும் ஷோல்ஸ் கருத்து தெரிவித்திருக்கிறார். கடுமையான விலைஉயர்வு நடப்பாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டது. அது தொடர்ந்து கொண்டிருப்பதே நெருக்கடி அதிகரித்ததற்குக் காரணம் என்று மத்தியப் புள்ளியியல் முகமை தெரிவிக்கிறது. ஜெர்மனியின் மத்திய வங்கி யான பண்டஸ்பேங்க், “ஏப்ரல் முதல் ஜூன் வரை யிலான காலாண்டில் நுகர்வோர் செலவு செய்வது அதிகரிக்கும். அதனால் தொழில் உற்பத்தி யிலும் மீட்சி இருக்கும்” என்று தெரிவித்துள் ளது. உலகின் நான்காவது பெரிய பொருளாதார மாகக் கருதப்படும் ஜெர்மனியின் மந்தநிலை, பிற ஐரோப்பிய நாடுகளிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.