பெய்ஜிங், ஜூலை 12- கியூபாவின் அரசு அதிகாரிகள் மீது புதிதாகப் போடப்பட்ட தடை களை விலக்கிட வேண்டும் என்று அமெரிக்காவை சீனா வலியுறுத்தி யிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக கியூபாவைச் சேர்ந்த 28 பேர் மீது புதிய தடைகளை அமெரிக்கா விதித்தது. இவர்களுக்கு விசா வழங்குவது மறுக்கப்பட்டுள்ளது. இவர்களில் கியூபா அரசு அதிகாரிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் அடங்குவர். இந்த தடை குறித்த அறி விப்பை அமெரிக்காவின் வெளி யுறவுத்துறை செயலாளர் அந்தோனி பிளின்கென் அறிவித்தார். இத்தகைய தடைகள் ஜன நாயகத்தின் குரல்வளையை நெரிப்பது போன்ற செயல் என்று விமர்சித்துள்ள சீனாவின் வெளி யுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், “29 ஆண்டுகளாக கியூபா கொண்டு வந்த தீர்மானங் களைப் பார்த்தாலே எவ்வளவு மோச மான தடைகள் அமெரிக்கா விதித்திருக் கிறது என்று தெரியும். அந்தத் தீர்மானங்கள் அனைத்திற்கும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒப்புதல் அளித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் என்ன சொல் கிறதோ அதைப் பின்பற்றும் பணியை அமெரிக்கா மேற்கொள்வது நல்லது” என்று குறிப்பிட்டார்.