டோக்கியோ, டிச.28- 2025 ஆம் ஆண்டுக்குப்பிறகு ஜப்பானியர் ஒருவரை நிலவில் காலடி வைக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட ஜப்பான் முடிவு செய்துள்ளது. சந்திரனில் இதுவரையில் அமெரிக்கர்களைத் தவிர யாரும் காலடி எடுத்து வைக்கவில்லை. அவர்களுக்கு அடுத்தபடியாக அங்கு காலடி பதிப்பவர் ஜப்பானி யராக இருப்பார் என்று தனது புதிய விண்வெளி திட்டத்தில் ஜப்பான் முனைப்பாக உள்ளது. இது குறித்துப் பேசிய ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிதா, “வெறும் நம்பிக்கைகளையும், கனவுகளையும் தரு வதாக மட்டும் நிலவுக்குச் செல்வதை நாங்கள் பார்க்க வில்லை. பொருளாதாரப் பாதுகாப்பை நமது பொருளா தார சமூகத்திற்குத் தரும் அடித்தளமாகப் பார்க்கி றோம்” என்றார். அமெரிக்காவின் முன்முயற்சியால் உருவாக்கப் பட்டுள்ள ஆர்டிமிஸ் திட்டத்தின் கீழ் பல முயற்சி களை ஜப்பான் மேற்கொள்ளப் போகிறது. அதில் மீண்டும் மனிதர்கள் நிலாவுக்குச் செல்வதும் உள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் திட்டத்தை 2024ல் நடைமுறைப்படுத்தப் போகிறார்கள். விண்வெளி யில் சூரிய ஒளி மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்யும் வழிகளையும் ஆய்வு செய்கிறார்கள். ஜப்பானின் அண்டை நாடும், அறிவியல் வளர்ச்சி யில் பெரும் ஆர்வத்தைக் காட்டி வரும் நாடுமான சீனா, 2030 ஆம் ஆண்டுக்குள் விண்வெளிப் பயணத்தில் ஒரு வல்லரசு அந்தஸ்தை எட்டும் முயற்சியில் இருக்கி றது. செவ்வாய் கிரகத்திற்கு ஆய்வுக்கலத்தை அனுப்பிய இரண்டாவது நாடு என்ற பெருமையை சீனா ஏற்கனவே பெற்றிருக்கிறது. நிலவில் காலடி எடுத்து வைக்கப்போகும் இரண்டாவது நாடாக இருக்க வேண்டும் என்ற முயற்சியிலும் சீனா இருக்கிறது.