world

img

‘கொரோனாவைப் பரப்புகிறார்கள்’

டோக்கியோ, ஜன.5- ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களில் கொரோ னா பரவுவதைத் தடுப்பதில் தோல்வியுற்றதோடு, உள்ளூர் மக்களுக்கு அது பரவவும் அனு மதிக்கிறார்கள் என்று அமெரிக்க ராணுவம் மீது ஜப்பானின் ஒகினா வா மாகாண அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஜப்பானின் தென்கோடியில் உள்ள மாகாணமான ஒகினாவா வில் பல தீவுகள் அடங்கியுள்ளன. ஜனவரி 3 ஆம் தேதியன்று இந்தப் பகுதிகளில் 130 புதிய கொரோ னா தொற்று ஏற்பட்டதாகப் பரி சோதனைகளில் தெரிய வந்தன. இவை எங்கிருந்து தொற்றியி ருக்கும் என்ற ஆய்வை நடத்திய தில் அமெரிக்க ராணுவத்தளங்க ளை நோக்கி விரல்கள் நீளு கின்றன. செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு தற்போது தொற்று அதிக ரித்துள்ளது. உலகிலேயே அமெ ரிக்காவில்தான் தொற்று பெரு மளவில் அதிகரித்திருப்பது குறிப் பிடத்தக்கது. இது குறித்து கடும் கோபத்து டன் ஒகினாவா மாகாணத்தின் ஆளுநர் டென்னி தமாகி அமெரிக்க ராணுவத்தை விளாசியிருக்கிறார். “அமெரிக்க ராணுவத்தினர் மத்தியில் தொற்று பெருமளவில் அதிகரித்திருப்பது, தொற்றைக் கட்டுப்படுத்துவதில் போதிய அளவு அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை என்பதையே காட்டுகிறது. இது ஆத்திரமூட்டும் செயலாக இருக்கிறது.” என்று டென்னி தமாகி குறிப்பிட்டிருக்கிறார். 

டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் அமெரிக்க ராணுவக் குடியிருப்புப் பகுதி களில் உள்ள உள்ளூர் மக்கள் 45 பேருக்கு புதிய வகை ஒமைக்ரான் தொற்று இருப்பது தெரிய வந்துள் ளது. டிசம்பர் 15 அன்று ஹான்சென் என்ற அமெரிக்க ராணுவத்தளத் தில் ஏற்பட்ட தொற்று மேலும் எட்டு படைத்தளங்களுக்குப் பரவியி ருக்கிறது. அந்த ஒரு நாளில்  மட்டும் 832 பேருக்கு அந்தப் பகுதிகளில் தொற்று ஏற்பட்டிருக் கிறது. இந்த விபரங்களை ஜப்பா னில் உள்ள அமெரிக்க ராணுவத் தலைமை மறுக்கவில்லை.  அமெரிக்க ராணுவ வீரர்கள் தொற்றை உள்ளூர் மக்களுக்குப் பரப்புவதாகக் குற்றம் சாட்டும் டென்னி தமாகி, 1960 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த உடன்பாட்டின்படி, ஜப்பானில் இருக்கும் அமெரிக்க ராணுவம் உள்ளூர் சட்டங்களுக்குக் கட்டுப் பட வேண்டியதில்லை. அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். ஜப்பானில் உள்ள 47 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களில் பாதிக்கும் மேற்பட் டோர் ஒகினாவோ தீவுகளில்தான் இருக்கிறார்கள்.